முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிசய கோயில்

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு ஏற்ற ஸ்தலமாக கருதப்படுவது திருநாகேஸ்வரம். இங்கு ராகுவுக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறிவிடுகிறது. இந்த அதிசயக் காட்சியை பக்தர்கள் கண்குளிர காணமுடியும்.

மிகப்பெரிய நகரம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பொழுதுபோக்கு நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கும் செயல்பாடுகளுக்கான இடமாக அமையவுள்ளது.  சிக்ஸ் ஃப்ளாக் பூங்கா , சஃபாரி பூங்காவும் அமைய உள்ளது.

நிலவின் வரைபடத்தை முதலில் உருவாக்கியவர்

ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்(Johannes Hevelius) சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் வாழ்ந்த ஒரு வானவியலாளர் மற்றும் வானவியலுக்கான கருவிகள் செய்தவர். சந்திரனின் முதல் அட்லஸை உருவாக்கித் தொகுத்த வானியலாளர். அது செலினோகிராஃபியா ( Selenographia) என்ற பெயரில் 1647-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் மேற்பரப்பின் ஆரம்பகால விரிவான வரைபடங்களில் ஒன்றையும் அதன் பல அம்சங்களுக்கான பெயர்களையும் கொண்டுள்ளது. சந்திரனில் உள்ள  மலைகளுக்கான அவரது சூட்டிய பெயர்களில் இன்னும் சில (எ.கா. ஆல்ப்ஸ்) இன்னும் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நினைவாக சந்திரனில் உள்ள பள்ளத்துக்கு ஹெவிலியஸ் பள்ளம் (Hevelius crater) என்றும் பெயரிடப்பட்டது.

செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்

இந்தியாவைப் பற்றி பேசினால், உலகிலேயே அதிக வாழைப்பழம் (Banana) உற்பத்தி செய்யும் நாடு. இங்கு சுமார் 4.5 லட்சம் ஹெக்டேரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 180 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகில் காணப்படும் 300 வகையான வாழைப்பழங்களில் சுமார் 30-40 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது.  செவ்வாழையில் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, தொலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.  நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் 1 முறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர்  கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

நாசாவின் ரோவரை தரையிறங்க செய்த இந்திய பெண் சுவாதி

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது குறித்து ஆராய நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கிருந்து தண்ணீரின் வழித்தடங்களை படமெடுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. அதெல்லாம் சரி.. அதை விட முக்கியம் அதை தரையிறங்க செய்த குழுவின் தலைவர் யார் தெரியுமா.. சுவாதி மோகன் என்ற இளம் பெண். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது பெற்றொர் பெங்களுரைச் சேர்ந்தவர்கள்.சிறு வயதிலேயே பெற்றோர் அவரது அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது. நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான். அங்கு படிப்படியாக விரைவாக முன்னேறி பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு வந்தார். வெற்றிகரமாக சாதித்தும் காட்டியுள்ளார். இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தது எது என்று கேட்டால், சிறுவயதில் தான் பார்த்த சயின்ஸ் பிக்சன் தொடரான ஸ்டார் டிரக்தான் என்கிறார் சிரித்தபடி. ஹேட்ஸ் ஆப் சுவாதி.

ஞாபக சக்தி அதிகரிக்க உடனடி வல்லாரை சட்னி

வல்லாரை கீரை நரம்புகளை வலுவாக்கி ஞாபக சக்தியைப் பெருக்கும். இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.தேவையானவை: வல்லாரைக்கீரை - அரை கட்டு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, சுத்தம் செய்த இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். சுவையான வல்லாரை சட்னி தயார்!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago