துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். அவர்களின் பயத்தை போக்க பொம்மைகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
முதன்முதலாக ப்ரீமியம் டெலிவிஷனில் கால் பதிக்கும் ஃபேஸ்புக், 24 சொந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. அதிக நேரம் கொண்ட நிகழ்ச்சி மற்றும் குறைந்த நிமிடங்கள் கொண்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டவுடன், ஃபேஸ்புக் ஆப்-பின் வீடியோ டேப்பிலும் காணக்கிடைக்கும். ஃபேஸ்புக் டிவி, ஜூன் மாதம் முதல் செயல்படும்.
உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடலில் அரியவகை உயிரினங்கள் வாழ உதவுவது பவளப்பாறைகள். அதேநேரம், கடல்பகுதியின் தட்ப வெட்பத்தைப் பேணுவதிலும் பவளப்பாறைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. பவளப் பாறைகளில் காணப்படும் பாலிப்ஸ் உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன. இந்த பாலிப்ஸ் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். உலகின் ஒரு சில கடல் பகுதிகளிலேயே பவளப்பாறைகள் உருவாகின்றன. இவை வளர கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்; இந்த பாலிப்ஸ் உயிரினம் சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்து மகா சமுத்திரத்தில் மட்டும் 200 வகைகள் காணப்படுகின்றன. இவற்றை கடினமானவை, மிருதுவானவை என 2 ஆக பிரிக்கலாம். பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது, கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன.
சுகா ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், தேகம், மனம், பிராணன், புலன்கள் சோர்வடையாது. உடலின் கீழ் பகுதியும், இடுப்பும் நரம்புகளும் பலப்படுத்தப்படும். முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகிறது. சுகாசனத்தால், தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது. பூஜை, தியானம், போஜனம் ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம்.
அழிந்து வரும் உயிரினங்களில் பட்டியலில் தற்போது இந்திய ஓநாய்களும் இடம் பெற்றுள்ளன. முன்பு நம்பப்பட்டு வந்ததை காட்டிலும் சற்று விரைவாகவே அவற்றின் எண்ணிக்கை சரிவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பரிணாம வரலாற்றில் மிகவும் முந்தையதாக இந்திய ஓநாய்கள் கணிக்கப்பட்டுள்ளன. இந்திய ஓநாய்கள் எனப்படுபவை இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற பிராந்தியங்களில் காணக் கூடியவை. தற்போது பாகிஸ்தானில் அவை குறித்த கணக்கெடுப்புகள் எதுவும் இல்லை. தற்போது இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கை 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்திய புலிகளின் நிலையைப் போலவே ஓநாய்களின் நிலைமையும் உள்ளது. அமெரிக்காவில் இதே போன்று அழியும் நிலையில் இருந்த சிவப்பு ஓநாய்கள் தற்போது ஓரளவுக்கு மீட்கப்பட்டதை போல, இந்தியா மற்றும் பாகிஸ்தானை வாழ்விடங்களாக கொண்ட இந்திய ஓநாய்களை காக்க வேண்டும் என்பதே ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை
22 Nov 2025புதுடெல்லி, ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
தமிழகத்தில் விருதுநகர், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Nov 2025சென்னை : தமிழகத்தில் சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிடட் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
22 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று திடீர் உயர்வை சந்தித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-11-2025.
22 Nov 2025 -
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்
22 Nov 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
பொறுப்பு டி.ஜி.பி. விவகாரம்: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
22 Nov 2025புதுக்கோட்டை, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:- பொறுப்பு டி.ஜி.பி.
-
மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவியில் குளிக்க தடை
22 Nov 2025தென்காசி, குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை
22 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் எந்த தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிடாத 4 கட்சிகளின் அங்கீகாரத்தை கேரள மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், தேர்தல் ஆணைய உத்த
-
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள், காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
22 Nov 2025சென்னை, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்த
-
'டெட்' தோ்வு விவகாரத்தில் ஆசிரியர்களை தி.மு.க. மாடல் அரசு கைவிடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Nov 2025சென்னை : ஆசிரியர்களை திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்று பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
-
சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்பு
22 Nov 2025அமராவதி : ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்றார்.
-
பெங்களூரில் நடந்த ஏ.டி.எம். வாகன கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது: ரூ.5.70 கோடி பணம் பறிமுதல்
22 Nov 2025பெங்களூரு, பெங்களூரு ஏ.டி.எம். வாகன கொள்ளை சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்து ரூ. 5.70 கோடி மீட்கப்பட்டுள்ளது.
-
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எதிராக 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
22 Nov 2025பெங்களூரு : தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை ரன்யா ராவுக்கு எதிராக 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை
22 Nov 2025சேலம் : சேலம் மாவட்டத்தில் நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஒரே நாளில் கிலோ ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ விலை
22 Nov 2025தென்காசி : ஒரே நாளில் மல்லிகை பூ விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ்
22 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது.
-
தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
22 Nov 2025சென்னை : தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
20 ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்த பீகார் உள்துறையை பா.ஜ.க.வுக்கு விட்டுகொடுத்தார் முதல்வர் நிதீஷ்
22 Nov 2025பாட்னா, கடந்த 20 ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு முதல்வர் நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.
-
தமிழுக்கு நீண்ட தொண்டாற்றியவர்: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
22 Nov 2025சென்னை, : தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று அவர் மறைவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார
-
காஞ்சிபுரத்தில் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய் : 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
22 Nov 2025சென்னை : காஞ்சிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை இன்று சந்திக்கிறார். க்யூ.ஆர்.
-
மம்தானி சிறப்பாக பணியாற்றுவார்:நியூயார்க் மேயருக்கு ட்ரம்ப் பாராட்டு
22 Nov 2025வாஷிங்டன் : மம்தானிக்கும் தனக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
-
'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் இதுவரை 100 தொகுதிகளின் தி.மு.க. நிர்வாகிகளை நேரில் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Nov 2025சென்னை, உடன் பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் இதுவரை 100 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பை நிறைவு செய்துள்ளார் தி.மு.க.
-
கேரளாவை அச்சுறுத்தும் அமீபா: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
22 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் அச்சுறுத்தும் அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதை முன்னிட்டு ஒரே மாதத்தில் 7 உயிரிழந்துள்ளனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்
22 Nov 2025தென்ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடங்கியது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்:ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் பிரசுரம்
22 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது..


