முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?

ஒவ்வொரு மிருகமும் விதவிதமான ஓசைகளை எழுப்பக் கூடியனவாகும். அதே போல பறவைகளும் விதவிதமான ஒலிகளை எழுப்பும். அவை நம் மனதுக்கு மிகுந்த இதமான உணர்வை அளிக்கும். அதே நேரத்தில் மிருகங்கள் எழுப்பும் ஒலிகள் சில வேளை நம்மை கவர்ந்தாலும், பல நேரங்களில்அவை அச்சுறுத்துவதைப் போலவே இருக்கும். பறவைகள், விலங்குகள் ஒலிகளை நாம் கேட்டிருந்தாலும் விலங்குகளில் மிக உயரமான மிருகமான ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?  அவை எப்படி ஒலி எழுப்பும் என்பதை நம்மில் பெரும்பாலானோர்.. அவ்வளவு ஏன் நாம் யாருமே கேட்டிருக்க முடியாது. இது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. அவை எழுப்பும் ஒலிகளை மனிதனால் கேட்க முடியாது என்பதுதான் அதன் சிறப்பம்சம். மனித செவிகளுக்கு குறிப்பிட்ட டெசிபலில் தொடங்கி குறிப்பிட்ட டெசிபல் வரையிலான சத்தங்களை மட்டுமே கேட்கும் திறன் உள்ளது. அதற்கு கூடுதலாகவோ, குறைவாக எழும் சத்தங்களை மனித செவிகளால் கேட்க இயலாது. எனவே ஒட்டக சிவிங்கிகள் எழுப்பும் ஒலிகள் நமது செவித்திறனுக்கு குறைவான டெசிபல் கொண்டவை என்பதால் நம்மால் அவற்றை வெறும் செவிகளால் கேட்க முடியாது. ஆராய்ச்சியாளர்களின் பிரத்யேக கருவிகளை கொண்டுதான் அவற்றை பதிவு செய்ய இயலும் என்பது ஆச்சரியம் தானே..

ராவணனின் சடலம் எங்கிருக்கு தெரியுமா?

நமக்கு ராமாயணத்தை தெரியும். ராமனையும் ராவணனையும் தெரியும். ராமாயணப் போரில் ராவணன் கொல்லப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். பின்னர் சீதையை மீட்டுக் கொண்டு ராமன் அயோத்தி திரும்பினான். அதற்கு பின்னர் ராவணனுக்கு என்ன ஆனது, இலங்கையில் என்ன நடந்தது என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அதன் பின்னர் ராவணின் உடல் வீபிஷணனிடம் ஒப்படைக்கப்பட்டது. வீபிஷணன் தான் பட்டமேற்க உள்ளதால், அந்த உடலை ஒரு பேழையில் வைத்து நாக குல வீரர்களிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ராவணன் மயக்கத்தில் இருப்பதாக கருதி உடலை பல்வேறு மூலிகை தைலங்களால் பதப்படுத்தி ரக்லா என்னும் காட்டுப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயர குகையில் பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த குகையிலிருந்து அரச ஆடை ஆபரணங்களோடு கூடிய ராவணனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, புகைப்படமும் வெளியாகியுள்ளது. அப்பகுதி தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ராமாயணப் போரின் போது 9300 ஆண்டுகளுக்கு முன்பு கிமு 7292 நவம்பர் 15 இல் ராவணன் கொல்லப்பட்டதாகவும் இதன் மூலம் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா எதிலெல்லாம் நம்பர் 1 என உங்களுக்கு தெரியுமா?

உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உள்ள அமெரிக்கர்கள், உலகில் உள்ள மொத்த குப்பைகளில் 30 சதவீதத்தை அவர்களே உற்பத்தி செய்கின்றனர். உலகில் அதிகமாக காகிதத்தை பயன்படுத்துவதில் அமெரிக்க தனியார் நிறுவனங்களே இன்றும் முன்னணியில் உள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு நொடிக்கும் 10 ஆயிரம் காலன் எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் 2,20 லட்சம் பவுன்ட் எடை அளவுக்கு கார்பனை வெளியிடுகின்றனர். அமெரிக்க நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு 25 டிரில்லியன் பிளாஸ்டிக் கப்கள் வீசி யெறியப்படுகின்றன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அமெரிக்கர்கள் 25 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசியெறிகின்றனர். உலகிலேயே ஆண்டுதோறும் அதிகமான மரங்கள் அமெரிக்காவிலேயே வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் அமெரிக்கர்கள் வீசும் அலுமினிய குப்பைகளை கொண்டு தேசத்துக்கு தேவையான வர்த்தக விமானத்தையே உருவாக்கி விடலாம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தில் காஸ்ட்யூமுக்காக விளம்பரங்கள்

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடுங்கோன்மையான ஆட்சியை சித்தரிக்கும் படமாக ஹாலிவுட்டின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் விளங்கியது. இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பைட்ரிக்கா ஷெப்பர்ட் என்பவர் பணியாற்றினார். படத்தில் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு பழங்கால உடைகள் தேவைப்பட்டது. இதற்காக விளம்பரம் செய்யப்பட்டது. போலந்தில் உள்ள ஏராளமான மக்கள் தங்களிடம் இருந்த 1930களின் உடைகளை அப்படத்துக்காக விற்க முன்வந்தனர். இவ்வாறுதான் படத்தில் காஸ்ட்யூம் உருவானது. இதற்காக பின்னர் அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..

புதிய கிரகம்

அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு இதுவரையில்லாத அளவு மிக சூடான பெரிய வாயுக்கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. கெல்ட் 9 பி என்று கிரகத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இந்த கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை 4,300 டிகிரி செல்சியஸ் ஆகும். இது வியாழன் கிரகத்தை விட 2.8 மடங்கு பெரியதாகும்.

முகலாயர்கள் காலத்தில்

இப்போது, ஞாயிற்று கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் விடுமுறை நாள், முகலாய காலத்தில் இந்தியாவில் 1530 - 1707 வரை வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்தது. ஏனெனில், இஸ்லாமியர்கள் மசூதியில் அன்று, தொழுகை செய்வதால்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பின் அது ஞாயிறாக மாறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago