புகாட்டி லா வொய்ச்சர் நொயர் உலகின் விலை உயர்ந்த கார் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கார்களை மட்டுமே உருவாக்குவது புகாட்டியின் திட்டங்களின் ஒரு பகுதியாகும். தற்போது ஒரே ஒரு நொயர் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது, அது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. முதலில் 2019 இல் மற்றொரு கார் தயாரிப்பு முடிந்து விடும் என குறிப்பிடப்பட்டாலும், புகாட்டி காரை உருவாக்க இன்னும் இரண்டரை ஆண்டுகள் தேவை என்று கூறப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு261 மைல் வேகம், மற்றும் 2.5 வினாடிகளில் 0-60 மைல் வேகத்தை எட்டக்கூடியது. ஏறக்குறைய புயலை போல சீறிப் பாயக் கூடிய இந்த காரில் உலகில் உள்ள அனைத்து கார்களை காட்டிலும் அதிகமான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு. இதை வாங்கியவரின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை என்ற போதிலும் வரிக்கு முன்பாக காரின் உள்ளடக்க விலை 12.4 மில்லியன் டாலர் என்றும் வரிகளுடன் 18.7 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.140 கோடி என்று சொல்லப்படுகிறது. அம்மாடியோவ்...
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
புத்தகப் பிரியர்களுக்கு என விதவிதமான புத்தகக் கடைகள், நூலகங்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உள்ளன. ஆனால் பூனை பிரியர்களுக்கான வித்தியாசமான புத்தக கடை எங்காவது உள்ளதா என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பெயர் Mon Chat Pitre. பிரான்ஸ் நாட்டில் உள்ளAix-en-Provence என்ற மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய புத்தக கடைதான் பூனை பிரியர்களுக்கான வித்தியாசமான புக் ஸ்டோர் ஆகும். இங்கு விதவிதமான புத்தகங்கள் மட்டுமின்றி விதவிதமான பூனைகளுடன் கொஞ்சியபடி புத்தகங்களை பார்வையிடவும், படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடை முழுவதும் பூனைகள் ஓடியாடி விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தம்பதிகளான Solène Chavanne மற்றும் Jean-Philippe Doux ஆகியோர்தான் இக்கடைக்கு உரிமையாளர்கள். அங்கு பூனைகளை கொஞ்சியபடி பார்வையாளர்கள் புத்தகங்களை பார்வையிடலாம் என்பது பூனை விரும்பிகளை உற்சாகம் கொள்ள செய்துள்ளது. எப்படி ஒரு வித்தியாசமான யோசனை பாருங்கள்..
பொதுவாக கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் என்றாலே புகையை கக்கிக் கொண்டு செல்லும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நீரை வெளிவிடும் கார் வந்துள்ளது தெரியுமா.. இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டொயோட்டாவின் இந்த மிராய் வகைக் கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 646 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்கொண்டவை. பெட்ரோல், டீசல் கார்களுக்குச் சிறந்த மாற்றாக விளங்கும் இந்தக் காரில் அதிக அழுத்தத்தைத் தாங்கும் ஹைட்ரஜன் எரிபொருள் டேங்கும், மின்மோட்டாரும் உள்ளன. ஹைட்ரஜனை நீராகவும் ஆக்சிஜனாகவும் மாற்றுவதன் மூலம் கார் ஓடுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் காரில் உள்ள எஞ்சின் புகையை வெளியிடுவதற்குப் பதில் நீரை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மணிக்கணக்கில் தனியாக அமர்ந்து டி.வி. பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் உடல் எடை அதிகரித்து பருமனாவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வில் அறையில் தனியாக அமர்ந்து டி.வி.பார்க்கும் சிறுமிகளில் 30 சதவீதம் பேரின் உடல் எடை அதிகரித்துள்ளதாம்.
இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
நாம் மணக்க மணக்க போட்டு குளிக்கும் சோப் எப்போ வந்துச்சு தெரியுமா...நம் தாத்தா, பாட்டன் காலத்தில் இருந்ததா...ஒரு 100 அல்லது 200 ஆண்டுகள் இருக்குமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். சோப் கண்டுபிடித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்.. இதை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் பாபிலோனியர்கள் எனப்படும் தற்போதைய ஈராக்கியர்கள்தான் என்றால் ஆச்சரியம் தானே... பாபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிதஸ் ஆட்சிக் (கிமு 556-530) காலத்தில் அவனது உத்தரவின் பேரில் அரண்மனை ரசவாதிகள் சாம்பல், விலங்குகளின் கொழுப்பு, எண்ணெய், மெழுகு, உப்பு இவற்றைக் கொண்டு சவர்க்காரம் எனப்படும் சோப்பை தயாரித்தனர். முதலில் தரையையும், பின்னர் ஆடைகள், பாத்திரங்களையும் இறுதியில் குளிப்பதற்கும் பயன்பட்டன. இது வணிகர்கள் கண்ணில் படவே நைசாக சிரியா, ரோம், எகிப்து என மொரோக்கோ வரை பயணித்து சோப் பரவலானது. அது சரி.. அதற்கு சோப் என யார் பெயர் வைத்தார்.. கிபி 79 இல் ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் என்பவர் சோப்பை குறிப்பிடும் மூலச் சொல்லான sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக soap என குறிப்பிட்டு விட்டார். அதுவே இன்று வரை சோப்பாக நிலைத்து விட்டது.. என்ன ஓகேவா..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


