மிகவும் உயரமான இடங்களில் வளரும் அரிய வகை மலரை கண்டறிந்துள்ளனர். சீனாவின் யுன்னான் பிரதேசத்தில் உள்ள துணை ஆல்பைன் மலைப்பகுதியில் சுமார் 3590 மீட்டர் உயரத்தில் இந்த செடி வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. Entosthodon elimbatus என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செடி நான்கு முதல் எட்டி மிமீ உயரம் வரை வளரக் கூடியது. மேலும் பாறைகளின் பிளவுகளில் உள்ள மண்ணில்தான் இது வளருமாம். இந்த விசித்திரமான தாவரம் குறித்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழ்களிலும் கடந்த 2020இல் வெளியிடப்பட்டன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மெல்போர்ன் நகரில் இருக்கும் ஸ்டீபன் ஹிர்ஸ்ட். மைன் கூன் வகையை சேர்ந்த ஓமர் என்ற பூனையை வளர்த்து வருகிறார். மாமிசத்தை மட்டுமே விரும்பி சாப்பிடும், ஒரு வயது நிரம்பிய இந்த பூனை 120 சென்டி மீட்டர் நீளமும், 14 கிலோ எடையும் உள்ளது. தற்போது இந்தப் பூனை உலகின் மிக நீளமான பூனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
நாம், பயம் என்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால் நம் மூளை போர்கால அடிப்படையில் வேலை செய்யும். தொடர்ந்து பயந்து கொண்டே இருந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும், இருதய பாதிப்பு, குடல் பாதிப்பு, முதுமை கூடும். மேலும், சிறிய வயதிலேயே இறப்பு ஏற்படும். எனவே பயத்தை தவிர்த்து, தைரியமாய் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
1. மூளை செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.2. கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கிறது மற்றும் உடல் திறன் அதிகரிக்கிறது.3. இதில் இருக்கும் ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் (antioxidant) பல்வேறு வகையான புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.4. இருதய நோய் வருவதை குறைக்கலாம். 5. நீரிழிவு நோய் வரும் ஆபத்தை குறைக்கலாம்.
யூடியூப் வீடியோ தளத்தை இன்று பார்க்காதவர்களோ, பயன்படுத்தாதவர்களோ இருக்க முடியாது. அந்தளவுக்கு இன்றைக்கு அன்றாட வாழ்வில் ஒன்று கலந்த ஒரு வீடியோ தளமாக மாறிவிட்டது. ஆனால் யூடியூப் டாட் காம் முதன் முதலில் எதற்காக தொடங்கப்பட்டது தெரியுமா.. தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அதாவது காதலர் தினத்தன்று யூடியூப் தொடங்கப்பட்டது. தங்களது காதல் இணையர்களுடன் டேட்டிங் மற்றும் காதலை பரிமாறிக் கொள்வதற்காகத்தான் இந்த வீடியோ தளம் தொடங்கப்பட்டது. ஆனால் மக்கள் யாரும் அது போன்ற வீடியோவை பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் வெறுத்து போன யூடியூப் தளம் வேறு வழியின்றி அனைத்து வகையான வீடியோக்களையும் போட்டு தொலையுங்கள் என கொஞ்சம் பரந்து மனது காட்டவே... தற்போது யூடியூப் வீடியோ மக்கள் மனதில் பட்டையை கிளப்பி வருகிறது.
வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. மேலும், உடலை சுத்தம் செய்து, வேகமாக வயதாவதை தடுக்கிறது. வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறையும். நஞ்சை வெளியேற்றும். வெந்நீரில் சுக்கு கலந்து குடித்தால் வாயுத் தொல்லை இருக்காது. எடை குறையும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


