Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வலியின்றி தற்கொலை செய்து கொள்ள எந்திரம்

உலகிலேயே முதன்முறையாக தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் வலியின்றி தற்கொலை செய்து கொள்வதற்கு ஏற்ற இயந்திரத்துக்கு ஒரு நாடு அனுமதி அளித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் தற்கொலை முயற்சி என்பது சட்ட விரோதம். மேலும் இயற்கை மற்றும் கடவுளால் அளித்த உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்ற கருத்தும் உலகம் முழுக்க ஆழமாக வேரூன்றி உள்ளது. இதன் காரணமாகவே இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மூட்டை கட்டி வீசி விட்டுள்ளன. இந்த சூழலில்தான் சுவிட்சர்லாந்து அரசு இந்த யந்திரத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி அளித்துள்ள 5 ஐரோப்பிய நாடு சுவிஸ் என்பது கவனிக்கத்தக்கது.தற்போது உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களின் ஹாட் டாப்பிக்காக இது மாறியுள்ளது. சாக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களை வலியின்றி சொர்க்கத்துக்கு பார்சல் செய்து விடும். இதன் மூலம் உடலுக்கு செல்லும் ஆக்சிஸன் குறைந்து, ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. கேட்கவே திகிலாக இருக்கும் இந்த எந்திரத்துக்கு அனுமதி அளித்த சுவிஸ் அரசுக்கு எதிராக ஒருபுறம் கண்டனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நம்புங்கள் ... ஆச்சர்யம்...

இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். ஆனால் இந்த குழந்தை பிறந்து சில மணிநேரங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகியுள்ளது ஆச்சர்யம்தான்.

எந்த மிருகத்தை மனிதனால் பழக்க முடியாது தெரியுமா?

மனிதர்கள் பல்வேறு விலங்குகளையும் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கின்றனர். ஒரு சிலர் சர்க்கஸ் போன்ற இடங்களில் சிங்கம், புலி, கரடி, யானைகளை கூட நம் சொல் கேட்கும்படி வளர்த்து விடுகின்றனர். ஆனால் ஒரே ஒரு விலங்கு மட்டும் விதிவிலக்கு. அது ஹைனா எனப்படும் கழுதைப்புலி தான் அது. கழுதைப்புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். எளிதில் கழுதைப்புலிகளுடன் பழகி அவற்றை நம் பேச்சை கேட்க வைக்க முடியாது. இவற்றை பராமரிப்பதற்கு அதிக செலவாகும். அமெரிக்காவில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம். அதையும் மீறி நாம் நம்முடைய வீட்டில் வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரங்களை பதம்பார்த்து விடும். மொத்தத்தில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது மிகவும் அபாயகரமானது.

கூகுள் வளாகத்தில் ஆடுகள் சுற்றித் திரிவது உங்களுக்கு தெரியுமா?

உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் ஜாம்பாவான் கூகுள் நிறுவனம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உலகில் உள்ள அனைத்து தேடுபொறிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு இன்று முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் வளாகத்தில் 200 ஆடுகள் சுற்றி திரிய விடப்படுகின்றன என்று சொன்னால் நம்புவதற்கு ஆச்சரியமாக உள்ளதா.. ஆனால் அதுதான் உண்மை.  வாரத்துக்கு ஒரு முறை வளாகத்தில் வளர்ந்துள்ள புற்களை தின்பதற்காக 200 ஆடுகளை வாடகைக்கு பிடித்து திரிய விடப்படுகிறது. இதற்கு என்ன காரணம், புல்வெட்டும் இயந்திரம் மற்றும் அதற்கான செலவும் இதுவும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் ஆடுகளுக்காவது புற்கள் பயன்படட்டுமே என்றுதான் கூகுள் வளாகத்தில் ஆடுகள் திரிய விடப்படுகின்றன. 

வீட்டு குறிப்பு

ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால்  பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.

உலகிலேயே மிகவும் டெர்ரரான நாய்

புல் வகை நாயும் டெர்ரிஸ் வகை நாயும் சேர்ந்த கலப்பின நாய்தான் பிட்புல். நம்மூரில் நடத்தப்படும் சேவல் சண்டைகளைப் போல ஐக்கிய நாடுகளில் இந்த நாய்களைப் பயன்படுத்தி பிட்புல் சண்டைப்  போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1835-ம் ஆண்டு பிட்புல்லை பயன்படுத்தி போட்டிகள் நடைபெறுவதற்கு  அமெரிக்கா  மற்றும் பிரிட்டன் நாடுகள் தடைவிதித்தன. ஆனாலும், இப்போது வரை சட்டத்துக்குப் புறம்பாக பிட்புல் சண்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  பிட்புல் நாய்கள் அடிப்படையில் மூர்க்க குணம் கொண்டவை. இவ்வகை நாய்களை ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்குப்  பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைகளுக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதால் இவ்வகை நாய்களை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை.  உலகிலேயே மிக ஆபத்தான நாய் பிட்புல் தான். அந்நாய், மனிதர்கள், மிருகங்கள் என்று பாரபட்சமின்றி வாயில் கவ்வ தொடங்கி விட்டால் உயிர் போகும் வரை விடாது. இந்த நாயால், கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து 2014ஆம் வருடம் வரை, அமெரிக்காவில் சுமார் 508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 203 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago