முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யும் நவீன மின்சார கார்

-கார்பன் வெளிப்பாடு, சுற்றுச்சூழல் மாசு தாக்கத்தால் பருவ நிலை மாறுபாடு என ஏகப்பட்ட பிரச்னைகளை இன்றைய பூமி சந்தித்து வருகிறது. இதை மாற்றுவதற்காக உலக நாடுகள் பலவும் எரிபொருள் வாகனத்திலிருந்து மின் வாகனத்தை நோக்கி மாறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் கடந்தாண்டு டீசல் வாகனங்களின் விற்பனையை மின் வாகனங்களின் விற்பனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யக் கூடிய காரை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.தற்போதைய கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கிமீ வரை மட்டுமே ஓட்டி செல்லலாம். இந்த சூழலில் தான் ஜெர்மன் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ செல்லும் வரையிலான கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. VISION EQXX என்ற மாடலில் இதை அறிமுகம் செய்துள்ளது.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மின்னணு கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த கார் மற்ற கார்களை விட எடை குறைந்த காராகும். மேலும் இதன் கூரை சோலார் பேனலால் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 25 கிமீ வரை செல்லலாம் என்றும் சொல்லப்படுகிறது.காருக்குள் கண்ணாடி திரையில் ஹோலோ கிராம் இமேஜிங், ஜிபிஎஸ் டிராக்கிங் என எக்கச்சக்க வசதிகள் உள்ளன. மேலும் வேகத்துக்கும் குறைவிருக்காது என சொல்லப்படுகிறது. இனி புதிய எதிர்காலத்துக்கான நவீன வாகனமாக இது அமையும் என எதிர்பார்க்கலாம். -

உப்பு கரிக்காத கடல்

கடல் நீர் என்றாலே உப்பு கரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விஞ்ஞானிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை நன்றாக அறிவர். கடலின் உப்பு அளவை பிபிடி என குறிப்பிடுகின்றனர். அதாவது ஆயிரம் கிராம் நீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு இது. தோராயமாக கடலில் சுமார் 1 லிட்டர் நீரில் 7 ஸ்பூன் அளவுக்கு அதாவது 34 பிபிடி முதல் 37 பிபிடி வரை உப்பு இருக்கும். உப்பின் காரணமாகவே கடல் நீர் நன்னீரை காட்டிலும் அடர்த்தியாக உள்ளது. அதே நேரத்தில் உப்புசுவை குறைவாக உள்ள கடலும் உலகில் உள்ளன. அதில் அண்டார்டிகா பகுதியில் உள்ள கடலின் மேல்மட்டத்தில் 34 பிபிடி அளவுக்கு காணப்படும். அதே நேரத்தில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடலில் 30 பிபிடி அளவுக்கே உப்பு கரிக்கும். இதற்கு இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி  கரைந்து கடலில் கலப்பதும், ஏராளமான நன்னீர் நதிகள் மற்றும் மழை நீர் கடலில் கலந்து அதன் உப்பு சுவையை குறையச் செய்கின்றன. ஆனால் முதல் இடம் ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதியில் உள்ள பால்டிக் கடலுக்குத்தான். அதன் உப்பின் அளவு வெறும் 10 பிபிடி அளவுதான். இதற்கு காரணம் இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நன்னீர் நதிகள் இங்கு வந்து கலக்கின்றன. அதிக உப்புகரிப்பு சுவை உள்ள கடல் சொல்லவே வேண்டாம் மத்திய தரைக்கடல்தான். அதன் உப்பின் அளவு 38 பிபிடி. இங்கு கடலில் கலக்கும் நன்னீர் மற்றும் மழை நீரின் அளவை காட்டிலும் ஆவியாகும் நீரின் அளவு மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

தாகம் தீர்க்க

கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலருக்கும் தாகம் அதிகமாக இருக்கும். என்ன தான் தண்ணீரை குடித்தாலும், தாகம் அடங்காமலேயே இருக்கும். எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, நீரை அதிகம் குடிப்பதோடு, ஒருசில உணவுப் பொருட்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். வருடம் முழுவதும் கிடைக்கும் ஓர் பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதன் மூலம், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.

ஒரு ரூபாய் நோட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

முதல் ஒரு ரூபாய் நோட்டு இங்கிலாந்தில் அச்சிடப்பட்டது. இந்த நோட்டு  நவம்பர் 30, 1917 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மன்னரான ஐந்தாம் ஜார்ஜின் படம் அந்த ஒரு ரூபாய் நோட்டின் இடது மூலையில் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 1861-ம் ஆண்டு முதலே இந்தியாவில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. இருந்த போதிலும், ஒரு ரூபாய் நோட்டு 1917-ம் ஆண்டில்தான் புழக்கத்தில் வந்தது. காரணம் ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க பயன்படுத்திய வெள்ளி,  2 ஆம் உலகப் போரில் ஆயுதத் தயாரிப்பிற்காக உருக்கப்பட்டுவிட்டது. 1917-ம் ஆண்டில் வெளியிடப்பட்டபோது, ஒரு ரூபாயின் மதிப்பு 10.7 கிராம் வெள்ளிக்கு சமமாக இருந்தது. 10 கிராம் வெள்ளியின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.670. இந்த 100 ஆண்டுகளில் ஒரு ரூபாயின் மதிப்பு 600 மடங்கு குறைந்துள்ளது. பணத்தை சீராக அல்லது பரிசாக வழங்கும்போது, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றினைச் சேர்த்து 101/- ரூபாயாக மொய் எழுதும் பழக்கம் காலம் காலமாக நம்மிடையே இருந்துவருகிறது. எனவே ஒரு ரூபாயின் மதிப்பு இது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பூமிக்கும் வந்து விட்டது கருப்பு பெட்டி

அண்மையில் நம்ம தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ேபாது, மீட்பு படையினர் முதலில் தேடியது கருப்பு பெட்டியைத்தான். விமானங்கள் விபத்துக்குள்ளானால் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டியைத்தான். இந்த கருப்பு பெட்டி என்பது விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக அதனுள் நடந்த அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் பெட்டகம். இதன் மூலம் விபத்துக்கான காரணத்தை டக்கென்று கண்டுபிடித்து விடலாம். அதே போல பூமிக்கும் ஏதேனும் கருப்பு பெட்டி இருக்கா... என்று கேட்டால். இப்போதைக்கு இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஒரு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.பூமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடிய டிசாஸ்டர் ரெக்கார்டர் என்ற ஒரு சாதனம் இந்த ஆண்டு நிறுவப்பட உள்ளது. பூமியின் கருப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் இத் திட்டம் நமது கிரகத்தின் அழிவுக்கான பாதையின் ஒவ்வொரு அடியையும் துல்லியமாக பதிவு செய்யும். சூரிய சக்தியால் இயங்கும் இந்த பெட்டகம் சராசரியாக ஒரு பள்ளிப் பேருந்தின் நீளம் இருக்கும்.இது எந்தவகையான இயற்கை பேரிடரையும் தாங்கிக் கொண்டு பூமியின் மீது நடக்கும் அனைத்து தரவுகளை சேமிக்க வல்லது. இது 7.5 செமீ தடிமனான எஃகு தகடுகளை கொண்டு மூடப்பட்டிருக்கும். பூமியில் உள்ள மிகவும் பாதுகாப்பான இடத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.இதில் வைக்கப்படும் ஹார்ட் டிரைவ்கள் காலநிலை தொடர்பான தகவல்களை பதிவுசெய்து சேமித்து வைக்கும். கிளெமெங்கர் பிபிடிஓ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனம் மற்றும் க்ளூ சொசைட்டி ஆகியவை சேர்ந்து இதை மேற்கொள்ள  இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

அனைத்துக்கும் ஒன்றே

பென் டிரைவ் போல வந்துள்ள ரிமோட்டினால் டி.வி, மீடியா பிளேயர், லைட், ஏசி என அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் புது ரிமோட் வந்திருக்கிறது. செவன்ஹக்ஸ் நிறுவனத்தின் படைப்பு தான் இது. இதன் மூலம் மொத்தம் 25 ஆயிரம் பொருட்களை இயக்கலாமாம். ஸ்மார்ட் ரிமோட் வைஃபை, ப்ளூடூத், இன்ஃப்ரா ரெட் மூலம் பொருட்களை கட்டுப்படுத்துகிறது.  135 மி.மீ நீளமும், 41 மி.மீ அகலமும் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டோடு, சார்ஜ் பேஸ், 3 ரூம் சென்சார்கள் உட்பட 10 ஆயிரத்து 156 ரூபாய்க்கு வாங்கி இஷ்டப்படி பொருட்களை ஒன் மேன் ஆர்மியாக கன்ட்ரோல் செய்து கலக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago