முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நம்பர் ஒன்

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ்.  அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரராக இவர் ஆக உள்ளார். 2௦16-ம் ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர். 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 11% உயர்ந்து வருகிறது.

யானை ஆச்சரியம்

பன்றி இனத்தைச் சேர்ந்தது யானைகள். ஆப்ரிக்க யானைகள், சராசரியாக 3 ஆயிரத்து 500 கிலோ எடை உடையது. ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளும். யானைகளின் தந்தங்கள் ஐந்து மீட்டர் நீளமும், 90 கிலோ எடையும் கொண்டு இருக்கும். மணிக்கு 32 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடைய யானை, நீரில் நன்றாக நீந்தவும், 4.5 மீட்டர் ஆழத்தில் மூழ்கியும் செல்லும். யானைகளுக்கு வாசனை நரம்புகள் வாயில் இருப்பதால், சுவாசிப்பதும், வாசனை அறிவதும் தும்பிக்கையால்தான்.’’முதன்முதலில் தோன்றிய யானை, பன்றி அளவே இருந்தது. இதனால், யானைகள் பன்றி இனத்தைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து பின்பு துதிக்கையாக வளர்ந்தது’’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பார்வை அற்றவர்களுக்காக விரைவில் செயற்கையாக தயாரான ரோபோ கண்கள்

இன்றைக்கு அனைத்து துறைகளிலும் ரோபோடிக்ஸ் இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம்.. பார்வையற்றோரின் பார்வையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த தொழில்நுட்பம் விரைவில் நிஜமாக போகிறது. ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (HKUST) ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் ஒரு மனித, குழிவான விழித்திரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரி புரோஸ்டெடிக் கண்ணை உருவாக்கியுள்ளது, இது நானோஒயர்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை விழித்திரை சிலிகான் பாலிமரில் பொருத்தப்பட்டுள்ளது, இது நானோ கனெக்டர்களுக்கு இடையில் ஒரு இடையீடாக பங்கு வகிக்கிறது. இந்த செயற்கை விழித்திரை ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.3 மைக்ரோவாட் முதல் 50 மில்லி வாட் வரை பரந்த அளவிலான தீவிரங்களின் ஒளியைக் கண்டறிய முடியும். தற்போது சோதனை வடிவில் இருக்கும் இவற்றில் இன்னும் களையப்பட வேண்டிய ஏராளமான சிக்கல்கள் நிறைய உள்ளன. இருந்த போதிலும் விரைவில் அவை நிஜமாக்கப்படும் என நம்பலாம்.

இஸ்ரேலுக்கு விசா தராத நாடு

உலகில் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் அந்தந்த நாட்டின் பாஸ்போர்ட் மற்றும் இரு நாடுகளின் விசா ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்நாட்டு குடிமக்களுக்கு இஸ்ரேல் செல்ல அனுமதி கிடையாது. எனவே பாகிஸ்தானியர்களுக்கு இஸ்ரேல் செல்வதற்கான விசா கிடைக்காது. அதே போல மேலும் ஒரு வித்தியாசமான சட்டம் அந்நாட்டில் உள்ளது. அங்கு கல்விக்காக ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக செலவிட்டால் அவர்கள் அரசுக்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பதுதான் அது. எனவே பெரும்பாலான மக்கள் உயர்கல்வி படிக்க ஆர்வம் காட்டுவது இல்லை.

சிறப்பாக செயல்பட...

அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் ஒருவரால் 1046 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டுமாம்

மூளை சுறுசுறுப்பாக இருக்க 6 வழிகள்

மூளையை தினந்தோறும் சுறுப்பாக வைத்திருக்க 6 வழிகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்க, அதிக ஈடுபாடுடன் செயல்பட புதிர்களை விடுவிப்பது அவசியம். சுடோகோ, குறுக்கெழுத்து போன்றவை உங்களது நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவையும் சிறந்த வொர்க் அவுட்கள் ஆகும். எனவே, பெரும்பாலான தொழில்முனைவோரின் வெற்றிக்கு, இது முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மார்க் கியூபன் ஆகியோர் புத்தக படிப்பில் வெற்றி பெற்றவர்கள்.இதுகுறித்து பஃபெட் கூறும்போது, “ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 பக்கங்களைப் படியுங்கள்” இது கூட்டு வட்டி போன்றது என்று அவர் பல கையேடுகள் மற்றும் ஆவணங்களை சுட்டிக்காட்டினார். மேலும், அவர் “அறிவு வளர மற்றும் மூளை சுறுசுறுப்பாக செயல்பட புத்தகங்களை படிப்பது நல்லது” என்றார். படிப்பது என்ற செயல்முறை  மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும். வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம்பியல்  இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும். நம்முடைய நீண்ட கால நினைவாற்றலுக்கு தூக்கம் இன்றியமையாததாகின்றது. மூளை புத்துணர்ச்சியாக இருக்க கேளுங்கள், கேளுங்கள், கேட்டுக் கொண்டே இருங்கள்.ஏராளமான புதிய நல்ல விஷயங்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும். நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கவலைகள் இருக்கக் கூடாது. மன  அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும்  புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம். ஓர் இசையைக் கற்றுக் கொள்ளும் போதும், உடற்பயிற்சி  மேற்கொள்ளும் போதும் மன அழுத்தம் குறைகிறது. மூளை சுறுசுறுப்பாகிறது என்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago