அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கரோல் சான்டே பி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாண்டா ஃபே ரயில் நிலையத்தின் மீது 2011 முதல் காதல் வயபட்டார். ’கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரயில்வே ஸ்டேஷனை திருமணம் செய்து கொண்டேன்’ என்று கரோல் தற்போது கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஏப்ரல் 1-ம் தேதி உலகம் முழுவதும் உள்ளவர்கள் முட்டாள்கள் தினமாக கொண்டாடுகின்றனர். அப்போது சின்ன ஏமாற்றுகள், நகைச்சுவைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வழக்கம் எப்போதிருந்து தொடங்கியது. 1381-ல் இங்கிலாந்து அரசர் 2-வது ரிச்சர்டுக்கும், ராணி பொகிமியாவின் ஆனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 32-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை கேள்விபட்டதும் மக்கள் அதை கொண்டாட தயாராகினர். அப்போதுதான் இடையிலேயே மார்ச்சில் 32 தேதி இல்லையே என தெரிய வந்தது. உடனே கொண்டாடத்தை நிறுத்தினர். அதுவே பின்னர் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. மற்றொரு காரணம் 1582-ல் பிரான்சில் பயன்பாட்டில் இருந்த பழைய காலண்டரை நீக்கி விட்டு சார்லஸ் போப் புதிய ரோமானிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இருந்த போதிலும் பலரும் பழைய காலண்டரையே பயன்படுத்தினர். இதை குறிப்பிடும் வகையிலும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, 19-ம் நூற்றாண்டிலிருந்து இது தொடங்கியது.
நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக போக விரும்புவது சென்னை மெரினா கடற்கரைதான். கிட்டத்தட்ட இரவு 8 மணிக்கே கடற்கரையில் விழா ஆரம்பித்துவிடும். நியூ இயர் கொண்டாட்டத்தின்போது கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டமாக இருக்கும் சென்னை மெரினா கடற்கரை. இங்கே கொண்டாட்டத்துக்கும் பஞ்சமிருக்காது. ஆடல், பாடல் என நள்ளிரவில் அமர்க்களமாகும் சென்னை.கடற்கரையைச் சுற்றியுள்ள அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, காமராஜர் நினைவகம் உள்ளிட்ட இடங்களிலும் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும். அதுமட்டுமின்றி நீங்கள் சென்னையில் உள்ள பல்வேறு மால்களிலும் புதுவருட கொண்டாட்டங்கள் களைகட்டும்.
மனிதர்களின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் ஹ்மனாய்டு ரோபோக்களின் தயாரிப்பு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பென் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்ட இந்தக் கருவி ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை ஏற்று, அதற்குரிய சீன, ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் சொற்களை ஒலி வடிவில் தருகிறது. இந்தக் கருவியின் சிறப்பு, இதை பயன்படுத்துவதற்கு இணைய வசதி என்பது தேவையில்லை என்பது மற்றும் 2 நொடிகளில் மொழிப்பெயர்பை கேட்கலாம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சிசிபு நகர் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த பாறைகளில் மனித முகங்கள் செயற்கையாக செதுக்கப்படவில்லை. இயற்கையாகவே உருவான மனித முக பாறைகள் சேகரித்து அங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கண்காட்சியில் 1700 மனித முக பாறைகள் உள்ளன. சில முகங்கள் அழுத நிலையிலும், சிரித்த நிலையிலும் உள்ளன. சில பாறைகள் வாயை பிளந்த நிலையிலும், மற்றவை சிந்தனை மற்றும் கவலையில் ஆழ்ந்த நிலையிலும் இருப்பது போன்று உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இவ்வகை பாறைகள் சேகரிக்கப்பட்டன.
ஆண்ட்ராய்டு ஸ்மாட்போன்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்ககூடிய ஸ்மார்ட்வாட்ச்சை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 2.0 தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கைகடிகாரத்தில் நேரம் பார்ப்பதுடன் கூகுள் தேடுப்பொறி தளத்தை இதில் பயன்படுத்த முடியும். மேலும் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய இயலும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


