முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தலையணை சண்டை

உலகம் முழுவதும் சர்வதேச தலையணை சண்டை தினம் ஏப்ரல் 1-ல் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க், ஹாங்காங், இத்தாலி, கனடா போன்ற பல நாடுகளில்சர்வதேச தலையணை சண்டை தினம் முட்டாள்கள் தினந்தன்று ஒரு வேடிக்கை விளையாட்டாக கொண்டாடபடுகிறது.

மறதி நோய் நல்லது

தற்போது அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருந்து மூலம் பல் சம்பத்தப்பட்ட பிரச்னைகளை குணமாக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து மூலம் பற்களை புதிதாக முளைக்க செய்ய இயலும் என்றும் பற்களுக்கு இடையே உள்ள துவாரங்களை சரி செய்ய முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பற்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இந்த மருந்து மூலம் சிகிச்சை அளித்தால் ஆறு மாதங்களில் பற்சிதைவு சரியாகி பற்கள் முன்பு இருந்தது போல் மாறிவிடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கண்ணும் கருத்துமாக

கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமத்தை உணரக்கூடும். கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வளிக்க வேண்டும். மேலும், நீர் வடிந்தால் கண்கள் சோர்வடைந்துள்ளது என அர்த்தம்.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

ஆஸ்கர் விருது பின்னணி

உலக அளவில் சினிமாத் துறையில் சாதித்த கலைஞர்களுக்கு போர்வீரன் சிலை வழங்கப்படுகிறது. இந்த வழக்கம் 1929ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. இந்த சிலையை லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சேர்ந்த சிற்பி ஜார்ஜ் ஸ்டேன்லி வடிமைத்துள்ளார். வெண்கலத்தால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்படும் இந்த விருதுகள் 13.5 இன்ச் உயரமும், 8.5 பவுண்ட் எடையும் கொண்டது. 2-ம் உலகப்போரின் போது வெண்கலத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் 3 ஆண்டுகள் பிளாஸ்டரில் தயாரிக்கப்பட்டு வர்ணம் தீட்டி விருதுகள் வழங்கப்பட்டன. போர் முடிந்த பின்னர் அந்த விருதுகளை தங்க முலாம் பூசப்பட்ட விருதுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பு மாற்றிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பற்கள் பளபளக்க

பற்கள் மீது எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்து வந்தால், அதில் மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சை பழத்தைக் கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகள் நீங்கும். தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அசிட்டிக் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது.  ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து, பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago