340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஜோதிடத்திலும், மக்கள் பேச்சு வழக்கிலும் சனிக்கு நல்ல பெயர் கிடையாது. மக்கள் வாயில் அதிகமாக வசைபாடப்படும் ஒரு கிரகம் சனி. ஆனால் அறிவியலில் ஆச்சரியம் மிகுந்தது மட்டுமல்ல, மிகுந்த வளம் மிக்கதும் கூட. அண்மையில் வெளியான ஆய்வில் வெளிவந்த உண்மையை கேட்டால் அப்படியே ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பீர்கள்... ஆம், நாம் அன்றாடம் வசை பாடும் சனி கிரகத்தில் ஆண்டுதோறும் வைர மழை பொழியுமாம்.. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சனி, யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களில் காணப்படும் அதிக அழுத்தம் காரணமாக கார்பன் அணுக்கள் அப்படியே படிகங்களாக மாறி விடுமாம். கார்பன் அணு படிகம் என்பது வைரமன்றி வேறில்லை என்பது விபரமறிந்தவர்களுக்கு தெரியும். இதை ஒரு குட்டி ஆய்வகத்தில் வைத்து பரிசோதித்தும் பார்த்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சனி கிரகத்தில் அழுத்ததில் ஏற்படும் மாற்றம் காரணமாக இது போல எக்கச்சக்கமான வைர மழை பொழியுமாம். அதாவது சுமார் 2.2 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமானவை அவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சீனாவில் பொறியாளர் ஒருவர் பெண் தேடித் கிடைக்காததால் ரோபோவை மணமுடித்துள்ளார். ஹவாய் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியாளரான ஜெங் ஜியாஜியா என்பவர் யிங்யிங் எனும் பெண் ரோபோவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில் அவரின் தாய் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமணத்தில் யிங்யிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு துப்பட்டா கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 35 வருடங்களுக்கு பிறகு ரோபோவை மனிதர்கள் மணமுடிப்பது இயல்பாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் ரோபோவை கரம்பிடித்த நிகழ்வு சீன மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாத நோயை எதிர்கொள்ள சிறிய ரக பிராசஸர்களை மனித மூளையில் பொறுத்தி மூட்டு பகுதிகளை கட்டுப்படுத்தி இயக்குவது சார்ந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் மூளையில் இருந்து வரும் கட்டளைகள் நோயாளியின் முதுகெலும்பில் பொறுத்தப்பட்டுள்ள மின்சாதன ஸ்டிமுலேட்டர்களுக்கு அனுப்பப்படும் முன், நியூரோ சிக்னல்கள் டீகோடு செய்யப்பட்டு டிஜிட்டைஸ் செய்து பிராசஸ் செய்யப்படும். பின் நோயாளி தனது கை மூலம் தொடும் பொருட்களை உணர மூளைக்கு தகவல்கள் வேறு விதமாக அனுப்பப்படும். கார்டக்ஸ் - எம்.ஒ எனும் சிறிய ரக பிராசஸரை பயன்படுத்தி இந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவுள்ளனர்.
வட பாகிஸ்தானில் ஹூஞ்குட்ஸ் எனுமிடத்தில் அலக்ஸாண்டர் தி கிரேட்-ன் வழிதோன்றல்கள் என கருதப்படும் ஹூஞ்சா எனும் மக்கள் வாழும் இடம்தான் ஹூன்சா பள்ளதாக்கு. இங்குள்ளவர்கள் 70 வயது வரையிலும் இளமை, ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கின்றனர். பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் இயற்கை உணவே.
லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பால் காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2025
07 May 2025 -
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
07 May 2025சென்னை, அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: சமூக ஊடகங்களில் வைரலான அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
07 May 2025அமெரிக்கா : பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர்: 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்
07 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்க
-
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். பாராட்டு
07 May 2025சென்னை, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய ந
-
ஆபரேஷன் சிந்தூர்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டு
07 May 2025புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரதமர் மற்றும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
சென்னையி்ல் புதிதாக 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
07 May 2025சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்,214 புதிய பேருந்துகள் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்
-
'ஆபரேஷன் சிந்தூர்': இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு
07 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகள் மீதான இந்திய ராணுவ தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு அளித்துள்ளது.
-
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் மே 28-ல் இந்தியாவிடம் ஒப்படைப்பு
07 May 2025புதுடெல்லி : ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
-
தஞ்சாவூரில் பெரியகோவில் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07 May 2025தஞ்சாவூர் : தஞ்சாவூரில் பெரியகோவில்சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
-
ஊட்டி மலர் கண்காட்சி 10 நாட்களுக்கு நீடிப்பு
07 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
-
சென்னை ஐகோர்ட் நீதிபதி காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
07 May 2025சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
07 May 2025சென்னை, மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு நடத்தினார், அப்போது பேருந்தில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
-
தி.மு.க. ஆட்சியில் வறுமையில்லை: பட்டினிச்சாவு இல்லை மதக்கலவரங்கள் இல்லை: முதல்வர் ஸ்டாலி்ன் பெருமிதம்
07 May 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் வறுமை இல்லை: பட்டினிச்சாவு இல்லை லன்முறைகள் இல்லை மதக்கலவரங்கள் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
07 May 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் பதிவானது.
-
இது போர் நடவடிக்கையே: இந்திய ராணுவ தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
07 May 2025இஸ்லாமாபாத் : ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்
-
இந்திய ராணுவ நடவடிக்கையால் கவலை: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சீனா
07 May 2025புதுடெல்லி : பாக்கிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசாணை வெளியீடு
07 May 2025சென்னை, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
தீவிரவாதத்திற்கு எதிரான போரி்ல் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
07 May 2025சென்னை, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் தமிழ்நாடு இந்திய ராணுவத்துடன் உறுதியாக நிற்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி: ராஜஸ்தான், கேரளா, பீகாரில் 9 பேர் கைது
07 May 2025ஜெய்ப்பூர், நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
-
வடமேற்கு பிராந்தியத்தில் 165 இண்டிகோ விமானங்கள் ரத்து
07 May 2025புதுடெல்லி, : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து வடமேற்கு பிராந்தியத்தில் 165 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பிரதமர் நரேந்திரமோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து
07 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர்' காரணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: பாக்.கிற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்
07 May 2025நியூயார்க் : பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.
-
எல்லையில் தொடரும் பதற்றம்: எட்டு மாநில முதல்வர்களுடன் அமித்ஷா அவசர ஆலோசனை
07 May 2025புதுடெல்லி, எல்லையோர ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
-
சி.பி.ஐ. இயக்குநர் பதவிக்காலம் நீட்டிப்பு
07 May 2025சென்னை : சி.பி.ஐ. இயக்குநர் பிரவீண் சூட் பதவிக்கால் நீட்டிக்கப்பட்டுள்ளது.