தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.. தெரியாத செய்தி என்ன தெரியுமா.. இந்தியாவில் முதன் முதலில் விமான போக்குவரத்தை இயக்கியது டாடா தான். அதன் நிறுவனர் Jehangir Ratanji Dadabhoy (JRD) Tata 1932 இல் அதை நிறுவனார். அப்போது அது டாடா ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் அப்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. பின்னர் 1946 ஆல் அது ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. அப்போது அது 'மகாராஜா; சின்னத்தை கொண்டதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1948 இல், ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவுக்கு விமான சேவைகளை தொடங்கியது. தனியார்-பொது துறை பங்களிப்புடன் சர்வதேச சேவைகள் இயக்கப்பட்டன. அரசு வசம் 49 சதம் பங்குகளும், டாடா வசம் 25 சதவீத பங்குகளும் இருந்தன. 1953 இல் எர் இந்தியாவை முழுக்க தேசியமயமாக்கி நேரு அறிவித்தார். இதற்கு டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா விமானம் டாடா வசமே திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் 59 லட்சம் பேர் கடந்தாண்டில் இறந்தனர். ஆனால் அதை காட்டிலும் அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 லட்சம் சிசுக்கள் குறைபிரசவத்தில் இறந்து போவதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமெடுத்து வருவதாக ஐநா அலறுகிறது. நீரில் பாதிப்பு, காற்று பாதிப்பு, ரசாயன உரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அது தொடர்பான ரசாயனங்கள் என சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல் நீண்ட சங்கிலி தொடர் போல நீண்டு செல்வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மேப் சேவை தற்போது, ஜி.பி.எஸ் மூலம் குரல் வழிகாட்டும் முறை உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது. மேலும், பெட்ரோல் பங்க், உணவகங்கள், விடுதிகளை தெளிவாக காட்டுகிறது.
பழங்களில், வாழைப்பழத்தில் மட்டும் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இதனால் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட வாழைப்பழத்தை சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைத்துக்கொள்ளலாம்.
கருவில் சிசு வளரும் போதே அதை, நேரில் காண வழிவகுத்துள்ளது புதியதோர் தொழில்நுட்பம். இதன் மூலம், ஒரு தாய் தன் குழந்தையை கண்டும் உள்ளார். விர்சுவல் ரியாலிட்டிதான் அந்த தொழில்நுட்பம். இதன் மூலமாக இல்லாத ஒன்றையும் காண்பிக்க முடியும். 4D அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து, பிறக்காத குழந்தயை வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் இதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர். 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை பார்த்த நாம், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே குழந்தையை காண முடியுமாம். எதிர்காலத்தில் கருத்தரித்த நாள் முதலே கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் வாழலாம்.
டிராகன்ஃபிளைஸ்(Dragonflies) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டான், தட்டாரப்பூச்சி எனவும், தும்பி எனவும், தட்டாம்பூச்சி எனவும் அழைப்பார்கள். தட்டான் பூச்சிகள் மிக வேகமாக லாவகமாக பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவாக பறக்க கூடியவை. இவை ஒரு ஆண்டில் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியது. ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 503 தட்டான் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தட்டான் பூச்சிகள் ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் ஒரு உயிரினம். டினோசர்களை விட மிகவும் பழமையானவை. தட்டான்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. அவைகள் சூடான காலநிலை மற்றும் தண்ணீருக்கு அருகில் வாழ விரும்புகின்றன. தட்டான் பூச்சிகள் கொசுக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் தொல்லை குறைவாக இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா மீண்டும் சாம்பியன்
07 Sep 2025நியூயார்க் : அமெரிக்கா ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமன்டா அனிசிமோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் மோதினர்.
-
செப்.28-ல் பி.சி.சி.ஐ. தலைவர் தேர்வு
07 Sep 2025இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
-
டி-20 கிரிக்கெட் போட்டி: கோலி, சூர்யகுமார் யாதவை முந்தி சிக்கந்தர் ராசா மாபெரும் சாதனை..!
07 Sep 2025ஹராரே : டி-20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவை முந்தி சிக்கந்தர் ராசா மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
-
ஆஸி., ஏ-க்கு எதிரான தொடர்: இந்திய அணியில் ரோகித், கோலி விளையாட வாய்ப்பு
07 Sep 2025மும்பை : ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ரோகித் சர்மா, விராட் கோலி விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2025.
08 Sep 2025 -
கடந்த 5 ஆண்டுகளில் பி.சி.சி.ஐ.யின் வருவாய் ரூ.14,627 கோடி உயர்வு
07 Sep 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
லோகா - அத்தியாயம் 1 சந்திரா, படத்தின் வெற்றி விழா
08 Sep 2025துல்கர் சல்மானின் வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’.
-
இயக்குனர் முருகதாஸை புகழ்ந்த சிவகார்த்திகேயன்
08 Sep 2025இயக்குனர் முருகதாஸ் டென்சன் ஆகமால் இயல்பாக படப்பிடிப்பு நடத்துவார் என சிவகார்த்திகேயன் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
-
மதராஸி திரைவிமர்சனம்
08 Sep 2025துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவர பயங்கரவாத கும்பல் ஒன்று முயற்சிக்கிறது.
-
அடுத்த வாரம் வெளியாகும் பிளாக்மெயில்
08 Sep 2025மு.
-
பேபி கேர்ள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
08 Sep 2025நிவின் பாலி நடிக்கும், திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்
08 Sep 2025ஜமீன் குடும்பத்தை உதறிவிட்டு காதல் மனைவி அர்ச்சனாவுடன் சென்னைக்கு வருகிறார் பாலாஜி சக்தி வேல்.
-
இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
08 Sep 2025சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் நாளை வரை அவகாசம்
08 Sep 2025சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
சுயமரியாதை கொள்கையில் நான் முதலீடு செய்து வந்திருக்கிறேன்: செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வர் பதில்
08 Sep 2025சென்னை, தனது வெளிநாடு பயணம் குறித்து இ.பி.எஸ்.
-
மீண்டும் 80 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
08 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மக்கள் அதிர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு கிராம் 90 உயர்ந்து ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ர
-
33 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: வெளிநாடு பயணம் மாபெரும் வெற்றி சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
08 Sep 2025சென்னை, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலம் மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய
-
காட்டு காளான்கள் சமைத்து சாப்பிட்டதில் 2 பேர் பலி
08 Sep 2025மெல்போர்ன் : அதிக விஷத்தன்மை நிறைந்த காட்டு காளான்கள் சமைத்து சாப்பிட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு வரி விதிப்பது சரியே: ட்ரம்புக்க ஜெலன்ஸ்கி திடீர் ஆதரவு
08 Sep 2025கீவ், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பது சரியான யோசனை என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதாரை ஆவணமாக பரிசீலிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
08 Sep 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
08 Sep 2025சென்னை, ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்னை திரும்பினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
08 Sep 2025குல்காம், காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரின்போது, வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
-
தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை; வடமாநில இளைஞர் கைது
08 Sep 2025தூத்துக்குடி : தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் வடமாநில இனைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
08 Sep 2025சென்னை, தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஆர்.பி.உதயகுமார் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
08 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வின் எதிர்கட்சி துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.,வின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார்.