முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் 100 % காகிதமில்லாத டிஜிட்டல் அரசாக துபாய் மாற்றம்

உலகில் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசாக துபாய் மாறி உள்ளது என அதன் இளவரசர் அறிவித்துள்ளார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் அதன் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம், நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிலையில் துபாய் அரசு துறைகளில் காகித பயன்பாட்டிற்கு முடிவு கட்டும் வகையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை அவர் தற்போது எடுத்துள்ளார். இதுகுறித்து பட்டத்து இளவரசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: துபாய் அரசின்கீழ் உள்ள 45 துறைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. இனி இந்த துறைகளில் காகிதங்கள் பயன்படுத்தப்படாது. இதனால் ஒரு ஆண்டுக்கு 2,650 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும். இந்த நடவடிக்கையால் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் காகிதமில்லா அரசாங்கத்தை கட்டமைக்க, திட்டங்களை வகுத்து வந்தாலும் பல்வேறு காரணங்களால் அதை செயல்படுத்த முடியாமல் உள்ளன.

தமிழ் இடம் பெற்ற நாணயம் எப்போது வெளியானது தெரியுமா?

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி ரூபாய் நோட்டுகளில் தமிழ் மொழி இடம் பெற்றிருந்தது நமக்கு தெரியும். அதைவிட பெருமை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான 8 மொழிகள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டு வந்தன. அதில் ஹிந்தி இடம்பெறவில்லை. இந்தி மொழியானது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகே ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. 1953 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே இந்தி மொழியானது பெரும்பாலும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற துவங்கின. இந்நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா நூற்றாண்டை போற்றும் வகையில் 2009 இல் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. நினைவு நாணயங்களில் தலைவர்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அண்ணாவின் நாணயத்தில் அவரது சிறப்புப் பெயரான ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என்று பொறிக்கப்பட்டிருப்பது வேறு எந்தத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு. அதேபோல், அண்ணாவின் கையெழுத்தைத் தாங்கியிருக்கும் இந்த நாணயம், தமிழ் மொழி இடம்பெற்றிருக்கும் ஒரே நாணயமாகவும் திகழ்கிறது.

துரியன், பலாப்பழங்களை கொண்டு போனை சார்ஜ் செய்யலாம்

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர், துரியன் பழக் கழிவுகளை கொண்டு சூப்பர் மின்தேக்கிகளாக மாற்ற முடிந்தது, இதன் மூலம் ஆற்றலை சீராக வெளியேற்ற முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பரிசோதனை முறையில், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் தங்கள் போன், மடிக்கணினி மற்றும் பிற அன்றாட கேட்ஜெட்களை சார்ஜ் செய்ய முடியும். துரியன் மற்றும் பலாப்பழங்களிலிருந்து வரும் கழிவுகளை “விரைவான மின்சார சார்ஜ் செய்ய” energy stores-களாக மாற்றலாம். துரியன் மற்றும் பலாப்பழங்கள் இந்த ஆய்வுக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏனெனில் அவற்றின் போரோசிட்டி மற்றும் பெரிய பரப்பளவு காரணமாக அவை  தேர்வு செய்யப்பட்டன. துரியன் மற்றும் பலா-பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் சூப்பர்-மின்தேக்கிகள் தற்போது பயன்படுத்தப்படும் பொருட்களை விட கணிசமாக சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் விலையுயர்ந்த கிராபெனின் அடிப்படையிலான பொருட்களுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியை உருவாக்கலாம். மேலும் இந்த முறை, வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளுக்கு உதவுவதோடு, புதைபடிவ எரிபொருளை ஆற்றலாக மாற்றுவதற்கான தற்போதைய முறைகளுக்கு ஒரு மாற்றையும் வழங்க முடியும்.

3500 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மியை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்த விஞ்ஞானிகள்

உலக அதிசயங்களில் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மிகளும் மக்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருபவை.  மம்மிக்களை ஆய்வு செய்யும்போது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு கண்டடைந்தனர் என்பது விளங்காத மர்மமாகவே உள்ளது. இதனால் மம்மிக்களை ஆய்வு செய்யும் போது அவற்றை திறப்பதால் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தற்போது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மம்மிக்களை திறக்காமலேயே அவற்றை டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் ஆய்வு செய்யும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து  பிரமிடிலிருந்து கடந்த 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட அமேன்ஹோடெப் என்ற மன்னரின் மம்மியை டிஜிட்டல்  முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிசய தகவல்கள் வெளியாகின. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 35.  சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த மன்னரின் பற்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளன.  உடலை சுற்றியிருந்த துணிக்குள் மன்னருக்கு தங்கத்தாலான ஆடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லாததால் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. இவர் கிமு 1525 முதல் 1504 வரை 21 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இதனால் இவர் மிகவும் இள வயதிலேயே முடி சூடி இருக்கலாம். இன்றைக்கு மருத்துவம் தொழில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள போதிலும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு தெரிந்து வைத்துள்ளனர் என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

டைட்டானக்கில் நாயகி ஓவியத்தை வரைந்தது யார் தெரியுமா

டைட்டானிக் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். இதில் மைய பாத்திரங்களாக லியோனார்டோவும், கதே வின்ஸ்லெட்டும் நடித்திருப்பர். ஒரு சந்தர்ப்பத்தில் நாயகியை நாயகன் ஓவியமாக தீட்டுவது போன்ற காட்சி இருக்கும். அப்போது அந்த ஓவியத்தை வரைவது போன்ற கரங்கள் மட்டுமே காட்டப்படும். அந்த ஓவியத்தை வரைந்தவர் வேறு யாருமல்ல... படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனேதான். அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர் என்றால் ஆச்சரியம் தானே..

கூகுள் எர்த்தில் நெட்டிசனிடம் சிக்கிய சுமார் 425 அடி நீளமுள்ள பாம்பு எலும்பு கூடு

நமது புராணங்களில் ஆதிசேஷன், காளிங்கன், வாசுகி என ஏராளமான பாம்புகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை உருவத்திலும், அளவிலும் மிகவும் பிரமாண்டமானவை. அதே போல அறிவியலிலும் அழிந்து போன உயிரினங்கள் பட்டியலில் சுமார் 40 அடிக்கும் மேலான நீளமுள்ள டைட்டானோவா வகை பாம்புகள் பற்றி குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் நெட்டிசன் ஒருவர் கூகுள் எர்த் வழியாக பார்த்த போது பிரான்ஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் சுமார் 400 அடி நீளமுள்ள பாம்பு எலும்புக்கூடு கிடப்பதாக பதிவிட்டிருந்தார். இது டைட்டானோவாவா என நெட்டிசன்கள் அதிகமாக  பகிர்ந்து விவாதித்தனர். இறுதியில் பிரான்சில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற Estuaire ஓவிய கண்காட்சிக்காக சீனாவை சேர்ந்த ஓவியர் ஹூவாங் யோங் பிங் என்பவர் 425 அடி நீளத்தில் உருவாக்கி கடற்கரையில் அமைத்திருந்த பாம்பு எலும்புக்கூடு சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago