முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சூடான நீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்ட பின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அதிசய தம்பதிகள்

கொலம்பியா, மெடிலின் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான மரியா கார்சியா மற்றும் மிகுல் ரெஸ்ட்ரீபோ இருவரும் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர். பிளாட்பாரங்களில் தங்கியிருக்கும் போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்ததால், சேர்ந்து வாழ முடிவெடுத்து,  பயனில்லாத பாதாளச் சாக்கடையில் தங்களுக்கான இல்லத்தை உருவாக்கி குடியேறினர். பாதாளச் சாக்கடையில் 22 வருடங்களாக வசிக்கும் இவர்கள், தங்களுக்கு துணையாக ஒரு நாயையும் வளர்த்து வருகிறார்கள். இந்த இல்லத்தில் மின்சார வசதியைப் பெற்று, டி.வி உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்தி வருவதுதான் ஆச்சரியம்.

அசாமில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா எது தெரியுமா?

தமிழர்களாகிய நமக்கு தை பொங்கல் தான் அறுவடை திருவிழாவாகும்.அசாமில் ‘மாக் பிஹூ’ என்ற பெயரில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து கொண்டாடப்படுதம் இந்த பண்டிகையை, வட மற்றும் மத்திய இந்தியாவில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். மேலும், இந்தியாவில் உள்ள விவசாயிகள், அறுவடை திருநாளாக கொண்டாடுகின்றனர், ஆனால் மாநிலங்களுக்கேற்ப இந்த அறுவடை திருநாள் கொண்டாட்டங்கள் மாறுபடும். அதன் ஓர் அங்கமாக மூங்கில், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க தற்காலிக குடிசைகள் அமைப்பது அசாம் மக்களின் தொன்று தொட்ட பழக்கம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படும்.

முதலைகள் குதிரகளைப் பே பாய்ந்து செல்லும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பார்ப்பதற்கு சாதுவாக தோன்றும் முதலைகள். அவை குதிரைகளைப் போலவே வேகமாக நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து செல்லும் திறன் படைத்தவை என்பது உங்களுக்கு தெரியுமா... இது தொடர்பாக 2019 இல் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் மிகவும் அரிதாக முதலைகள் குதிரைகளைப் போலவே நான்கு கால் பாய்ச்சலில் செல்லக் கூடியவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு எதுவுமே சாதுவாக இருக்கிறது என எதையும் நாம் தப்பு கணக்கு போட்டு விடக் கூடாது.

சர்வதேச நகரம்

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 1986-ம் ஆண்டு நிறுவப்பட்டது  ஆரோவில் நகரம். இந்நகரம் 124 உலக நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் மூலம் கட்டப்பட்டது. யுனெஸ்கோ இந்நகரை ஒரு சர்வதேச நகரம் என அங்கீகரித்துள்ளது. இங்கு, 50 நாடுகளில் இருந்து பல்வேறு கலாச்சாரத்தை பின்பற்றி வந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

உலக சாதனை

டொரண்டோ நகரில் 404 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல மாறுவேடம் அணிந்து வந்து உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னர் 99 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 404 பேரும் - ஐன்ஸ்டீன் போலவே பிளேசர், டை வெள்ளை விக் மற்றும் மீசை அணிந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago