முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரோபோ கார்கள்

துபாய் காவல்துறையில், குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணும் வகையிலான பேஷியல் ரெகாக்னிஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி ரோபோ கார்கள் இணைக்கப்பட உள்ளது. ஓ-ஆர் 3 என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ கார்கள், வெப்பம் அதிகமுள்ள சூழலிலும் படம் பிடிக்கும் தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் கொண்டது.

100 விதமான ஒலிகளை எழுப்பும் திறன் கொண்ட விலங்கு எது தெரியுமா?

100 விதமான ஒலிகளை எழுப்பும் விலங்கினம் எது தெரியுமா.. அது பூனைதான்.நாய்கள் கிட்டத்தட்ட பத்து விதமான ஒலிகளை மட்டுமே வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை ஆகும்.ஆனால் பூனைகள் கிட்டத்தட்ட 100 விதமான ஒலியை (மியோவ்) அவைகளின் வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை. நாய்களை விட பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானதாகும். அவ்வளவு ஏன்...! மனிதர்களை விடவும் பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானது. பூனைகள் அதன் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்நாளை தூங்குவதற்காக மட்டுமே செலவு செய்கின்றன. .நில நடுக்கம் உருவாகுவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் முன்பே நிலநடுக்கம் உருவாகுவதை பூனைகள் உணர்ந்து விடும். பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்த ஹிட்லர் அஞ்சி நடுங்கிய ஒரே விலங்கினம் பூனைதான்.

இந்தியாவின் முதல் ரயில் எங்கு ஓடியது

இந்திய ரயில்வே சுமார் 170 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது சரி இந்தியாவின் முதல் ரயில் எங்கே ஓடத் தொடங்கியது. அப்போது ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு பிற்பகல் 3:30 மணியளவில் அது மும்பையில் நடந்தது. என்ன அது. இன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என மிக பிரமாண்டமாக மிளிரும் அந்த ரயில் நிலையம் அக்காலத்தில் மிகவும் சாதாரணமாக காணப்பட்டது. அதில்தான் இந்தியாவில் அன்றைய தினம் முதல் ரயில் தனது பயணத்தை தொடங்கியது.சரியாக 3.35 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்தில் இருந்து தானேவுக்கு ரயில் கிளம்பியது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் போரிபந்தர் மற்றும் தானே இடையே பயணிக்க165 வருடங்கள் கடந்த பிறகும், இப்போதும் ஒரு மெதுவான பயணிகள் ரயில் இந்த தூரத்தை கடக்க அதே நேரம்தான் எடுத்துக் கொள்கிறது.

புதிய பஸ் ஸ்டாப்

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்தும், மூங்கில் கம்புகளை வைத்தும் அழகான பஸ் ஸ்டாப் உருவாக்கப்பட்டுள்ளது. பேம்பூ ஹவுஸ் இந்தியா எனும் தனியார் நிறுவனத்தால் இந்த பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. 1000 பழைய பாட்டில்களை வைத்து 8 அடியில் இந்த பஸ் ஸ்டாப் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று நாட்கள்

வரலாற்றில் 7 ஆண்டுகள் பின்தங்கிய எத்தியோப்பியா

இதென்ன புதுசாக இருக்கே என்று யோசிக்கிறீர்களா... ஒவ்வொரு நாட்டுக்கும், கலாச்சார மக்களுக்கும் பல்வேறு வகையான கால கணக்கு அதாவது காலண்டர், நம்மூர் பாஷையில் சொன்னால் பஞ்சாங்கம் உள்ளது. அதன் படி எத்தியோப்பியாவின் காலண்டரில் 13 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள். கடைசி மாதமான பகுமே என்ற மாதத்தில் மட்டும் 5 நாட்கள். இதனால் இவர்கள் எப்போதும் மற்ற நாடுகளின் காலத்துடன் ஒப்பிடும் போது 7 ஆண்டுகள் பின்தங்கியே உள்ளனர். அவர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தை செப்டம்பர் 11 ஆம் தேதிதான் கொண்டாடுகின்றனர். புதிய நூற்றாண்டு தொடக்கத்தை அவர்கள் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல்தான் கொண்டாடினர் என்றால் ஆச்சரியம் தானே

பாதுகாப்பது அவசியம்

சிறுத்தை இனம் அழிந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 7,100 சிறுத்தைகள் உள்ளன. இவை வாழ்வதற்கு ஏற்ப தேவையான இடங்களோ, சரணாலயங்களோ இல்லை. இதனால் அவைகள் காடுகளை விட்டு வெளியே வரும் சூழ்நிலையில் மனிதர்களால் வேட்டையாடப்படுவதாலேயே அதன் இனம் அழிய காரணமாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago