முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாஸ்போர்ட் என்ற சொல் எப்படி வந்தது

பாஸ்போர்ட் என்ற வார்த்தை பைபிளில் இருந்து உருவானதாக வரலாறு ஒன்று கூறுகிறது. ஆனால், கிறிஸ்துவுக்கு முன்பும் இந்த வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 450 பி.சி. காலத்தில் பெர்சியாவில் ஆட்சி செய்த மன்னர் ஒருவர், அவரது அரசவையில் பணியாற்றிய அதிகாரிகள், நாட்டின் எல்லையில் உள்ள ஆற்றைக் கடந்து செல்வதற்கு ஒரு அனுமதிச்சீட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம். இருப்பினும், 15ஆம் நூற்றாண்டில் தான் பாஸ்போர்ட் என்ற வார்த்தை உருவானதாக தெரிகிறது. அப்போது பாஸர் (வழிபோக்கர்) + போர்ட் (துறைமுகத்தை கடக்க இருப்பவர்) என்ற கூட்டுச் சொற்கள் சேர்ந்த பாஸ்போர்ட் என்றானதாம்.

முதன்முதலாக பேஷன் இதழ் எப்போது வந்தது தெரியுமா?

இன்றைக்கு பேஷன் உலகம் பெருகிவிட்டதை போலே அதற்கான இதழ்களும் உலகம் முழுவதும் ஏராளமாக வருகின்றன. அது ஒரு தனி துறையாகவே உருவெடுத்து வளர்ந்து நிற்கிறது. அதே வேளையில் முதன்முதலாக பேஷனுக்கென இதழ் எப்போது வந்தது தெரியுமா 1586 இல் Josse Amman என்ற சுவிஸ் ஓவியரால், Gynasceum, sive Theatrum Mulierum என்ற பெயரில் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. இந்த இதழின் பொருள் பெண்ணின் அரங்கு என்பதாகும். இது பெண்களின் ஆடைகளை என்கிரேவிங் முறையில் அச்சடித்து அன்றைய பேஷன் குறித்து பேசு பொருளாக்கியது.

முதுமையை தவிர்க்க ...

நம் என்றும் இளமையாய் இருக்க பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ள மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்களான பூசணி, மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கொழுப்பு குறைந்த சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் போன்றவை எடுத்துக்கொண்டால் நல்லது.

மனித தோலால் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம்

காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

புத்துணர்ச்சிக்கு காபி

மூளையில் அடினோசின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 250 மி.கிராம் கெஃபைன் உட்கொள்வது நல்லது. அதாவது நாள் ஒன்றுக்கு 2 தடவை மட்டும் காபி அருந்தினால் நல்லதாம்.

கம்பீரமான விலங்கு

இதன் முடி வெள்ளையாக காணப்பட்டாலும் இதன் தோல் கருப்பாக இருக்கும். இது நீர் நாய்களை வேட்டையாடும் போது கடல் பணியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றது. இதற்கு 42 பற்கள் இருக்கும் மற்றும் பெண் கரடி ஆண் கரடியை விட பாதி எடை மட்டுமே இருக்கும். ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் போலார் கரடிகளுக்கு அருமையான வாசனை சக்தி உள்ளது,கிட்டத்தட்ட ஒன்றறை மைல் தூரத்தில் இருக்கும் கடல் நாய்களின் வாசனையை கண்டுபிடித்துவிடும். இதன் குட்டிகள் பிறக்கும்போது மனித குழந்தைகளை விட சிறியதாக இருக்கும் அதாவது ஒரு எலி அளவு மட்டுமே இருக்கும். அவைகளுக்கு உணவு நிறைய கிடைத்தால் அவை ஒரே ஆண்டில் முழு மனிதன் அளவு வளர முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago