முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஹீலியம் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படும் என்றால் நம்ப முடிகிறதா?

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பலூன்கள் மேலே பறப்பை நாம் பார்த்திருக்கிறோம்.  இதற்கு காரணம் அதில் அடைக்கப்பட்டுள்ள ஹீலியம் வாயுதான். பூமியில் நீண்டகாலமாக ஹீலியம் எப்படி கிடைக்கிறது என விஞ்ஞானிகள் மண்டையை பிய்த்துக் கொண்டனர். சூரியனில் ஏகப்பட்ட ஹீலியம் இருக்கும் போது பின்னர் அதில் கொஞ்சம் மட்டும் எப்படி பூமிக்கு வந்தது. இதற்கான விடை 1894 இல் கிடைத்தது. பூமிக்கு அடியில் யுரேனியம் சோடியம் போன்ற தனிமங்களின் உரசலால் ஹீலியம் உருவாவது கண்டு பிடிக்கப்பட்டது. ஹீலியத்தை திரவ வடிவில் உறைய வைக்க அதிகப்படியான அழுத்தம் தர வேண்டும்.  அப்படியே திரவமாக மாறினாலும் ஒரு கொள்கலனில் வைத்தால் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக பாத்திரத்தின் சுவர் மீது ஏறி செல்வதை பார்ப்பதற்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்.

ஆட்டிஸம் ஆபத்து

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளில் முக்கியமான ஒன்றான ஆட்டிஸம் கோளாறு உள்ளது. இது குழந்தைகளை தாக்கும் நரம்பியல் வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று. இக்கோளாறு பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. இவ்வகைக் கோளாறு, குழந்தையின் மொழி, பேச்சுத் திறன், சமூகத்திறன் மற்றும் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கிறது.

சந்திரனில் மனிதனின் காலடி தடங்கள்

நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்று ஒரு காலத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் 969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் பயணித்தனர். இந்தச் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட பின், 102 மணி நேரம் 45 நிமிடம் 39 விநாடி அளவில் பயணித்து நிலவை சென்றடைந்தது. நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் பதித்தார். அங்கு பதிந்த காலடி தடங்கள் அப்படியே 100 மில்லியன் ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்.. ஏன் தெரியுமா.. சந்திரனின் மேல் புறத்தில் காற்று, நீர் போன்ற சூழல் கிடையாது. எனவே காலடி தடத்தை காற்றோ, நீரோ அழிக்க வாய்ப்பு இல்லை. எனவே கோள்களில் மாற்றம் ஏற்படும் வரை அதாவது சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் வரை அது அப்படியே இருக்கும் என்றால் ஆச்சரியம் தானே...

டிஜிட்டல் ஆபத்து

டிஜிட்டல் டெக்னாலஜி பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி செயல்பாடுகளில் அல்லது குழந்தைகளிடம் பேசும் போது நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தினால், குழந்தைகள் அதிக சென்ஸ்டிவ், அதிக கோபம், தீவிர செயல்கள் மற்றும் புலம்பல் போன்றவற்றிக்கு உள்ளாகுகிறார்களாம்.

களிமண் அணை

கரிகாலன் காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டுவந்தவன் என்னும் பெருமைக்குரியவன். சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தியவன் இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்டவன் கரிகாலன். அடிக்கடி வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவதால் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர் சோழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். பல வல்லுநர்கள் வந்து சோதித்து பார்த்தும் இன்னும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஈறு பிரச்சனையா?

நீண்ட நாட்களாக பல் ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது எனவும், சாதாரன ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு இதயக்கோளாறுகள் ஏற்படும் ஆபாயம் உள்ளது என்றும், மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, இப்பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் இருமுறை பல்துலக்க வேண்டுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago