அது 1993 இல் நடைபெற்றது. பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் புகழ் பெற்ற கோபகபானா என்ற பீச்சில் அந்த கச்சேரி நடைபெற்றது. கச்சேரியின் நாயகன் ராட் ஸ்டீவர்ட் என்ற ராக் மற்றும் பாப் இசை பாடகர். இவர் எந்த அளவுக்கு பிரபலம் என்றால் இவரது இசை ஆல்ப சீடிக்கள் மட்டும் உலகம் சுமார் 2.5 கோடிக்கும் மேலாக விற்று தீர்ந்துள்ளன. அன்றைக்கு அந்த பீச் இசை கச்சேரிக்கு திரண்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 45 லட்சம் பேர். பிறகென்ன.. கச்சேரி கின்னஸிலும் இடம் பிடித்தது. உலக மக்களின் மனதிலும் இடம் பிடித்தது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சார்லஸ் டார்வின் என்பவரை பற்றி தெரியாவர்கள் இருக்க முடியாது. இந்த உலகில் புழு, பூச்சி தொடங்கி மனித இனம் வரை அனைத்தும் எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கு விடை காண முயன்றவர். அவர் உருவாக்கிய தியரியே.. அதாவது கோட்பாடே பரிணாம கொள்கை. இதன் மூலம் ஒரு செல்லிலிருந்து பிரிந்த புதிய உயிரினம் படிப்படியாக பல்கி பெருகி, தாவரங்கள், பூச்சிகள், தவளைகள், மீன்கள், பறவைகள், விலங்குகள், குரங்கின் வழியாக மனித இனம் தோன்றின என்கிறார். ஆனால் இன்றைய நவீன வீஞ்ஞானம் செல்லை மட்டுமின்றி அதனுள் புதைந்திருக்கும் கோடிக்கணக்கான மரபணுக்கள், அவை உருவாக காரணமாக டிஎன்ஏ, ஆர்என்ஏக்கள் என தனது பயணத்தை மிகவும் மைக்ரோ, நேனோ லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. அதில்தான் முக்கிய திருப்பம் நடந்துள்ளது. கடந்த 2015 இல் கேம்பிரிட்ஜ் பல்கலை நடத்திய ஆய்வில் தாவரங்களில் இருந்து வந்த மரபணுக்கள் வாயிலாக மனித இனம் தோன்றியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி சுமார் 1 சதவீத மனித மரபணுக்கள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவைதான் என அடித்து சொல்கின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்.. இப்போ சொல்லுங்கள் நாம் குரங்கிலிருந்து வந்தோமா, தாவரத்திலிருந்து வந்தோமா...
இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நன்றாக தூக்கம் வருவது ஏன் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம் நாடுகளில் நீண்ட காலமாகவே இரவு உறக்கத்துக்கு முன்பு சூடாக ஒரு டம்பளர் பால் குடிப்பது வழக்கம். தற்போது மேலை நாடுகளிலும் இரவில் நன்றாக உறங்க பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகின்றனர். பாலில் தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகளை பொதுவாக டிரிப்டோபன் என குறிப்பிடுகின்றனர். அண்மையில் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கேசீன் ட்ரிப்டிக் ஹைட்ரோலைசேட் (சிடிஎச்) எனப்படும் பெப்டைட்டுகளின் கலவையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கு அளிக்கப்படும் பென்சோடியாசெபைன்கள், சோல்பிடெம் போன்றவை கடுமையான பக்க விளைவை ஏற்படுத்துபவன. ஆனால் பசுவின் பாலில் கிடைக்கும் கேசீன் எனப்படும் புரதம் செரிமானத்தை மேம்படுத்தி சிடிஎச் எனப்படும் தூக்கத்தை மேம்படுத்தும் பெப்டைட்களின் கலவையை கொண்டிருப்பதால் இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கக் கூடியது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச் செய்யும் நிலைதான் தியான நிலை. தியானம், நம் மனதை அமைதிபடுத்தி, தசைகளின் இறுக்கம் மற்றும் மனக்கவலைகளைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடலில் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாத்து, இதயம் தொடர்பான நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது. தியானம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு, பிடித்த தெய்வத்தை நினைத்து வழிபடுதல் வேண்டும். தினமும் காலையில் 5 முதல் 6 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை தியானம் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த மோகித் சுரிவால். வயது வெறும் 17க்கும் கீழே. ஆனால் இவரது ஆண்டு வருவாய் கோடிக்கும் மேலே. அதுவும் ஒரு சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. இவர் செய்தது என்ன...இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இளசுகள் சும்மா கடலை வறுக்கும் நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டார் மோகித். உலகத்தின் அனைத்து பிராண்டுளின் கன்டென்டுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஹிட்டாக்கினார். ஒரு கட்டத்தில் அவரது வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் மனம் தளராமல் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ, யூடியூப் என கலக்கி வருகிறார். தற்போது அவரது காட்டில் பண மழை கொட்டி வருகிறது.
உலகின் முதல் பல்கலை கழகம் பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். அதன் பெயர் தக்சஸீலா. பரதன் தனது மகன் தட்சனுக்காக நிர்மாணிக்கப்பட்ட நகரம் தக்சஸீலம் என்று சொல்லப்படுகிறது. தட்சஸீல பல்கலை கழகத்தின் காலம் கிமு 6 லிருந்து 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் நூலை எழுதிய சாணக்கியர் இங்கு பேராசிரியராக பணியாற்றினார். அவரிடம் மெளரிய அரசர் சந்திர குப்தர் கல்வி பயின்றார். மற்றொரு புகழ் பெற்ற பேராசிரியர் சமஸ்கிருத அறிஞரான பாணினி. அசோகர் காலத்தில் இது மேலும் விரிவாக்கம் பெற்றது. காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகள், ஆட்சிமாற்றங்கள் காரணமாக தட்சஸீலம் படிப்படியாக அழிந்தது. அது சரி தற்போது அந்த இடம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா..பாகிஸ்தானில். பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-10-2025.
11 Oct 2025 -
அனில் அம்பானியின் உதவியாளர் கைது
11 Oct 2025புதுடெல்லி : அனில் அம்பானியின் உதவியாளரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
-
சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா? - அன்புமணி ராமதாஸ்
11 Oct 2025சென்னை : சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை: நயினார் நாகேந்திரன் கேள்வி
11 Oct 2025சென்னை : மகளிர் உரிமைத் தொகை குறித்து நயினார் நாகேந்திரன் முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபர் கைது
11 Oct 2025பெங்களூரு : திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
-
கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: 2 குழந்தைகளை கொன்று பெண் தூக்கிட்டு தற்கொலை
11 Oct 2025பெங்களூரு : 2 குழந்தைகளை கொன்று இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய மாணவர் பலி
11 Oct 2025சென்னை : சென்னையில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழந்தான்.
-
போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ்
11 Oct 2025காசா : காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையடுத்து இஸ்ரேல் படைகள் வாபஸ் பெற்றனர்.
-
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
11 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வருகிற 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் சைபர் மோசடி: 4 பேரை கைது செய்தது அமலாக்கத்துறை
11 Oct 2025காந்தி நகர் : சைபர் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கை ஈடுபட்டனர்.
-
டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை : மத்திய அரசு விளக்கம்
11 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
35,440 கோடி ரூபாய் மதிப்பிலான 2 வேளான் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி
11 Oct 2025புதுடெல்லி : புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில், ரூ.35,440 கோடி மதிப்பிலான இரண்டு வேளாண் திட்டங்களை ப
-
விமானம் மீது மோதிய பறவைகள்: டெல்லி புறப்பட்ட விமனம் அவசர தரையிறக்கம்
11 Oct 2025டெல்லி : டெல்லி புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதையடுத்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
காலை உணவுத்திட்ட சம்பள விவகாரம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
11 Oct 2025சென்னை : காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் பனிப்புயல்: 2 ராணுவ வீரர்கள் பலி
11 Oct 2025கிஷ்த்வார் : ஜம்மு-காஷ்மீரில் பனிப்புயலில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
11 Oct 2025சென்னை : தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்ற நிலையில் இதுவரை 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட
-
சமையல் கேஸ் லாரிகள் ஸ்டிரைக்: தடைகோரி ஐகோர்ட்டில் மனு
11 Oct 2025சென்னை : சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க பொதுமக்களிடம் வரவு - செலவு கணக்குகளை விளக்கி சொல்ல வேண்டும் : கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
11 Oct 2025சென்னை : ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க மக்களிடம் வரவு - செலவு கணக்குகளை விளக்கி சொல்ல வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டா
-
மேற்குவங்காளத்தில் அதிர்ச்சி சம்பவம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை
11 Oct 2025கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது.
-
மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை
11 Oct 2025சென்னை : தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (அக்.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை தீர்ப்பு
11 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கவுள்ளது.
-
கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம்: திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது: கமல் எம்.பி.
11 Oct 2025சென்னை : கார் வழிமறிக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது என்று கமல் எம்.பி. தெரிவித்தார்.
-
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம்
11 Oct 2025இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது.
-
டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன்கள் குவித்து டிக்ளேர்
11 Oct 2025புதுடெல்லி : டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
-
முதல் முறையாக டாஸ் வென்ற சுப்மன் கில்லை கலாய்த்த வீரர்கள்
11 Oct 2025புதுடெல்லி : முதல் முறையாக டாஸ் வென்ற கேப்டன் சுப்மன் கில்லை வீரர்கள் கலாய்த்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.