உலகின் மின்னல் மனிதன் என்று அழைக்கப்படுபவர் உசைன் போல்ட். அதிவேக ஓட்டக்காரரரான இவரது உச்சபட்ச ஓட்ட வேகம் மணிக்கு சுமார் 44 கிமீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இவருக்கு scoliosis முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளது. இது குறித்து இவரே ஒரு பேட்டியில் எனது முதுகெலும்பு கடுமையாக வளைந்துள்ளது. இதனால் ஏற்படும் அவஸ்தைகளை நான் பொருட்படுத்துவதில்லை. அதை மீறியே கடுமையாக உழைக்கிறேன் என்கிறார். வெற்றி யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை என்பதற்கு உசைன் போல்ட் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
டப்பிங் படங்கள் என நமது மக்கள் சிறிது கிண்டலும் கேலியுமாக பேசப்பட்ட காலம் வெகு விரைவில் மலையேறப் போகிறது. மொழி மாற்ற படங்களின் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதுமைகள் உருவாகியுள்ள இன்றைய கால கட்டத்தில் அது இன்னும் ஒரு படி மேலே சென்று TrueSync என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் இயக்குநரான ஸ்காட் மன் என்பவருக்கு சொந்தமான ’பிளாலஸ் ஏஐ’ (Flawless AI) என்ற நிறுவனம் தான் இந்த மென்பொருளை வடிவமைத்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், ஒரு நடிகரின் மொத்த செயல்பாடுகளையும் அலசி ஆராய்ந்து, அதற்கேற்ப முகம் மற்றும் வாயசைவில் மூலத்தில் நுணுக்கமான மாற்றங்களை செய்து, வசனங்களை பொருந்த வைக்கிறது. இனி எந்த மொழியையும் நடிகர்கள் தெளிவாக பேசுவது போல காட்சியை உருவாக்கி விட முடியும் என்பதுதான் அது, இது ஆச்சரியம் தானே..
அழியும் உயிரினங்களில் ஒன்றாக பன்னாட்டு வன விலங்கு சம்மேளனம் இந்திய வகை டால்பின்களை பட்டியலிட்டுள்ளது. இவை இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியங்களில் உள்ள நன்னீர் நிலைகளில் வாழக்கூடியவை. டால்பின்கள் மனிதர்களோடு நெருக்கமாக பழகக் கூடியவை என்பது நாம் நன்கு அறிந்ததே. இந்த இந்திய வகை டால்பின்களை, கங்கை நதி டால்பின்கள் என குறிப்பிடுகின்றனர். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா போன்ற ஆழமும் நீளமும் மிக்க நதிகளில் இவை காணப்படும். தற்போது இந்தியாவில் அருகிவிட்ட இவை அண்டை நாடான பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி, வங்க தேசத்தில் பாயும் பிரம்மபுத்ர தீரங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 1801 இல் இது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. தற்போது அருகி வரும் இந்த டால்பின்கள் குறைபார்வை உடையவை என்றும் சொல்லப்படுகிறது. எப்போதும் தனித்து திரிபவை. குட்டி போட்டால் குட்டிகளோடு சிறிது காலம் சேர்ந்து சுற்றும். வளர்ந்ததும் மீண்டும் தனித்தனிதான். பாகிஸ்தானில் சிந்து நதியில் தத்தளித்த டால்பினை ஆர்வலர்கள் மீட்டு பாதுகாப்பாக ஆழமான பகுதியில் கொண்டு நீந்த விட்டனர். தற்போது இந்த செய்தி மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வலர்களால் பகிரப்பட்டு வருகிறது.
ஆடைகள் ஆண் பெண் வேறுபாட்டை காட்டி வருகின்றன என்ற போதிலும் பால் பேதத்தை, அதாவது பாரபட்சமான அணுகுமுறையை அவை உருவாக்கக கூடாது என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக பாலின சமத்துவத்தை அதான்ங்க.. ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை பிரச்சாரம் செய்யும் வகையில் ஸ்பெயினில் உள்ள பில்பாவ் நகரில் இந்த பிரச்சாரம் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு குட்டை பாவாடை அணிந்து வந்த 15 வயது சிறுவனை இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரத்தில் அமைந்திருக்கும் Castleview Primary Schoolதான் தற்போது தனது பள்ளியில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் குட்டை பாவாடை அதாவது ஸ்கர்ட் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளது. பாலின பேதத்தை களைந்து ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்துக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கு தொழில் நுட்பம் எங்கோ சென்று விட்டது. கணிப்பொறியின் வருகை தொழில் நுட்ப யுகத்தின் புதிய புரட்சி என்று கூட வர்ணிக்கலாம். இதுவரை இருந்து வந்த அனைத்து கைவினை கலைகளையும் மூட்டை கட்ட வைத்து கணிணி வரை கலை மூலம் புதிய கற்பனா உலகை கணிப்பொறி திறந்து விட்டுள்ளது.. அது சரி அதே நேரத்தில் கணிப்பொறி துறையும் தன்னை அதோடு இணையாக வளர்த்துக் கொண்டுள்ளது. உதாரணமாக கணிப்பொறி என்றால் முன்பெல்லாம் பொதி மூட்டை போல பிக்சர் டியூப் மானிட்டர், மிகப் பெரிய மேசை சைசுக்கு சிபியு, தட்டச்சு எந்திரம் மாதிரியான விசைப்பலகை என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது தொட்டால் உணரும் திரையுடன் மாடலிங் பெண்ணைப் போல மிகவும் ஸ்லிம்மாக மாறிவிட்டது. அதே போல வயர்லெஸ் மவுஸ், கீ போர்டு என அடுத்தடுத்த வரவுகள் அசத்தி வருகின்றன. இதில் மேலும் ஒரு படி முன்னேற்றமாக ஒளியுணர் விசைப்பலகைகள் (லேசர் கீ போர்டுகள்) வந்து விட்டன. ஒரு சிறிய ஒளியை டேபிளில் பாய்ச்சினால் கீ போர்டு வடிவில் தெரியும் வெளிச்சத்தில் தொட்டால் திரையில் தானாகவே செயல்பாடுகள் நடக்கும் வகையில் இந்த புதிய லேசர் விசைப்பலகை வந்து விட்டது. இனி எங்கு சென்றாலும் கீபோர்டை சுமந்து செல்ல வேண்டியதில்லை.. நம்மூர் பொடிடப்பா அளவுக்கு உள்ள அந்த லேசர் விளக்கு போதும்.. விலையும் மலிவுதான்.. ஆன்லைன் ஸ்டோரில் வகைவகையாக அள்ளலாம்..
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விதவிதமாக ஹோட்டல்களை கட்டுவதை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தைவானில் உள்ள தெய்பெய் நகரில் கட்டப்பட்டிருக்கும் ஹோட்டலின் வடிவத்தை கேட்டால் உவ்வே என்று சொல்லத் தோன்றும். ஆனால் அப்படி ஒரு விசித்திர ஹோட்டல் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த ஹோட்டல் டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டும் தட்டு, டம்ளர், உணவு பொருள்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் அனைத்தும் கழிவறை பொருள்களைப் போலவே பரிமாறப்படுகின்றன. அட கஷ்டகாலமே.. இப்படி ஒரு ஹோட்டலா என சொல்லத் தோன்றுகிறது அல்லவா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் 12-ம் தேி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
04 Dec 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.12ம் தேதி முதல்வர் மு
-
ஏ.வி.எம்.சரவணனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி: எல்லோரிடமும் அன்பாக பழகியவர் என புகழஞ்சலி
04 Dec 2025சென்னை, ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல சினிமா பட தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.
-
அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடம்
04 Dec 2025ராய்ப்பூர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
-
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு பா.ம.க. அழைப்பு
04 Dec 2025சென்னை, பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்
04 Dec 2025திருப்பரங்குன்றம், தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப்பணிக்கு தடை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
04 Dec 2025சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிக்கு தடை நீட்டிக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தமிழகத்தில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு
04 Dec 2025சென்னை, தற்போது நடத்தப்பட்ட சிறப்பு திருத்த பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. மனு
04 Dec 2025புதுச்சேரி, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டிச.9-ல் புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்எஸ்பியிடம் த.வெ.க.வினர் நேற்று மனு அளித்துள்ள
-
கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
04 Dec 2025மதுரை, கவின் ஆணவப்படுகொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் பிரதமர் மோடி நேரில் வரவேற்பு
04 Dec 2025புதுடெல்லி, 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின். அவரை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
-
பா.ம.க.வின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
04 Dec 2025டெல்லி, அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பா.ம.க. வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
04 Dec 2025சென்னை, தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்ளிட்ட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
டெல்லி காற்று மாசுபாடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு: சோனியா காந்தி
04 Dec 2025புதுடெல்லி, டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு என சோனியா காந்தி கூறினார்.
-
சையத் முஷ்டாக் அலி டி-20: மும்பை அணிக்காக களம் காண்கிறார் ரோகித் சர்மா.!
04 Dec 2025அகமதாபாத், சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரியானது: மதுரை உயர்நீதிமன்ற கிளை
04 Dec 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.
-
அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் ட்ரம்ப்: வீடியோ இணையத்தில் வைரல்
04 Dec 2025வாஷிங்டன், அமைச்சரவை கூட்டத்தில் தூங்கிய ட்ரம்ப் வீடியோ இணையத்தில் வைரல்லானது.
-
கட்சிக்கு உரிமை கோரி வழக்கு: நீதிமன்றத்தில் ராமதாஸுக்கு வெற்றி; டெல்லியில் ஜி.கே.மணி பேட்டி
04 Dec 2025சென்னை, கட்சி உரிமை கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் ராமதாஸ்சுக்கு வெற்றி என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
உக்ரைன் போர் விவகாரம் தொடர்பான அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது - அதிபர் புதின்
04 Dec 2025மாஸ்கோ, உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்க அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசு மருத்துவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
04 Dec 2025கரூர், த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் வழக்கில் அரசு மருத்துவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
டி.என்.பி.எஸ்.சி. 2026 தேர்வு அட்டவணை வெளியானது: குரூப்-4 பணியிடங்களுக்கு 2026 டிசம்பரில் தேர்வு
04 Dec 2025சென்னை, குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு செப்டம்பர் 6-ந்தேதியும் நடத்தப்படும் என்றும், குரூப்-4 பணிய
-
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணியிடை நீக்கம்
04 Dec 2025கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025


