முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குழந்தைகளின் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகம்

மனித உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206 என்பது பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தெரியாத ஒரு விசயம் என்னவென்றால் குழந்தை பிறந்தவுடன் அதன் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். வளர்ந்த மனிதனின் உடலில் காணப்படுவதைப் போல அல்லாமல் குழந்தையின் உடலில் 300 எலும்புகள் காணப்படும். மனிதன் வளர வளர அவற்றில் ஒரு சில எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுதியில் 206 என்ற எண்ணிக்கைக்கு வந்து விடுகின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்..

பிளம்பருக்கு அடித்த ஜாக்பாட்

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் திருப்புமுனை எப்படி வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிளம்பர் வேலை செய்து வரும் Justin Cauley என்பவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இவர் அண்மையில் அங்குள்ள சர்ச் ஒன்றில் பாத்ரூமில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுவரை தோண்டும் போது சுண்ணாம்பு காரை கொட்டுவதற்கு பதிலாக பணம் கொட்டியது. அத்தனையும் அசல் டாலர்கள். உடனே சுவரை உடைத்து பார்த்தில் இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் நேர்மையாக சிந்தித்த அவர் அந்த பணத்தை தான் எடுத்துக் கொள்ள விரும்பாமல் போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அங்கு 2014 இல் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது அடிக்கப்பட்ட பணம் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை கண்டுபிடித்த பிளம்பருக்கு ரூ.3 லட்சம் சன்மானம் அளித்து பாராட்டப்பட்டார். இந்த செய்தி பரவி பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில், மேலும் ஒரு ஜாக்பாட்டாக சர்ச் நிர்வாகம் அவருக்கு ரூ.15 லட்சம் பரிசளித்து அசத்தியுள்ளது.

கொடிய உயிர் கொல்லியான எயிட்ஸ்க்கு எதிராக தகவமைத்து கொண்ட மனித உடல்

இன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய வைரசான கொரோனாவைப் போல சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் உலகையே அச்சுறுத்தியது. தற்போது போலவே மனித நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சலூன் கடைகளில் தனித்தனி ரேசர்களில் சவரம் செய்வது தொடங்கி, மருத்துவ மனைகளில் டிஸ்போசபிள் சிரிஞ்ச் எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசி என நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி தொற்றுக்கு  ஆளாகி எந்தவித மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் உடல் நலம் தேறியுள்ளார். இது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்களை பரிசோதித்த போதிலும் கூட அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தடமின்றி அடியோடு மறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது உலகில் இரண்டாவது சம்பவம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.  இது தொடர்பான மருத்து ஆய்வு கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எய்ட்ஸை வெற்றிகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது படிப்படியாக பிறருக்கும் தோன்றலாம். அதே போல எதிர்காலத்தில் கொரோனாவையும் இந்த மனித உடல் வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஞாபக சக்தி அதிகரிக்க உடனடி வல்லாரை சட்னி

வல்லாரை கீரை நரம்புகளை வலுவாக்கி ஞாபக சக்தியைப் பெருக்கும். இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.தேவையானவை: வல்லாரைக்கீரை - அரை கட்டு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, சுத்தம் செய்த இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். சுவையான வல்லாரை சட்னி தயார்!

அன்னை தெரசா அணிந்திருந்த சேலைக்கு அறிவுசார் சொத்துரிமை உள்ளது தெரியுமா?

அல்பேனியாவில் பிறந்து கிறிஸ்துவத்தை பின்பற்றிய அன்னை தெரசா கொல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியை தொடங்கி ஏழைகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிறமும், ஓரத்தில் 3 நீல நிற கரையும் கொண்ட சேலை அவரது அடையாளமாகவே மாறின. பின்னர் அவரை பின்பற்றி அந்த சாரிட்டியில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் கன்னியாஸ்திரிகளும் அந்த புடவையையே சீருடையாக ஏற்று அணிந்து வருகின்றனர். இந்த தனித்தன்மை வாய்ந்த  புடவையின் டிசைனை அன்னை தெரசா தான் உருவாக்கினார். தற்போது அதற்கு அறிவுசார் சொத்துரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதை யாரும் வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என அந்த அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. லாப நோக்கம் அற்ற பொது சேவைகளுக்கு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழி இருக்கு...

நாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சில இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.       மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை.   இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago