விஞ்ஞானிகள் பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். வளரக்கூடியதாகவும், வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் இந்த ரோபோ மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும், 100 கி எடையுடையது. இந்த பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர கால நேரத்தில் அதிகம் பயன்படுமாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனதை மாற்ற, பேஸ்புக், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அப்டேஷன் மிக விரைவில் வெளியாகுகிறது. பேஸ்புக்கில் உள்ள தற்கொலை தடுப்பு டூல்களை பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
புத்தகப் பிரியர்களுக்கு என விதவிதமான புத்தகக் கடைகள், நூலகங்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உள்ளன. ஆனால் பூனை பிரியர்களுக்கான வித்தியாசமான புத்தக கடை எங்காவது உள்ளதா என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பெயர் Mon Chat Pitre. பிரான்ஸ் நாட்டில் உள்ளAix-en-Provence என்ற மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய புத்தக கடைதான் பூனை பிரியர்களுக்கான வித்தியாசமான புக் ஸ்டோர் ஆகும். இங்கு விதவிதமான புத்தகங்கள் மட்டுமின்றி விதவிதமான பூனைகளுடன் கொஞ்சியபடி புத்தகங்களை பார்வையிடவும், படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடை முழுவதும் பூனைகள் ஓடியாடி விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தம்பதிகளான Solène Chavanne மற்றும் Jean-Philippe Doux ஆகியோர்தான் இக்கடைக்கு உரிமையாளர்கள். அங்கு பூனைகளை கொஞ்சியபடி பார்வையாளர்கள் புத்தகங்களை பார்வையிடலாம் என்பது பூனை விரும்பிகளை உற்சாகம் கொள்ள செய்துள்ளது. எப்படி ஒரு வித்தியாசமான யோசனை பாருங்கள்..
உலகம் முழுவதும் தற்போது புதிய போக்கு அதான் டிரெண்டிங் ஒன்று உருவாகி வருகிறது. அண்மையில் இங்கிலாந்தில் பெண்களின் ஆடையை அணிந்து வந்த சிறுவனை வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருபாலருக்குமான ஆடை விவகாரம் விவாதப் பொருளாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி ஒன்றில் மாணவர்களை குட்டை பாவாடை அணிந்து வரச் சொன்ன சம்பவங்களும் நடைபெற்றன. இந்த சூழலில் இதே போன்ற ஒரு சம்பவம் கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா என்ற இடத்தில் நடந்துள்ளது. அங்கு பெண்கள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என கண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து Mason Boudreau என்ற 17 வயது மாணவன் பெண்கள் அணியும் டாப்ஸ், சார்ட்ஸ் என டூபீஸ் ஆடையில் வந்து பள்ளியை தெறிக்க விட்டுள்ளான். மேலும் இது வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு பாலாருக்கு பாலின பாகுபாடு இல்லை என்கிற போது ஆடையில் மட்டும் பாரபட்சம் ஏன் என்ற கேள்வி உலகம் முழுக்க உரத்துக் கேட்கத் தொடங்கியுள்ளது.
ரத்தத்தில் உள்ள “ஹீமோகுளோபின்” என்ற வேதிப்பொருள் தான் அதற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு ஆக்ஸிசனை கொடுப்பதும் அதுதான். ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம். சிவப்பணுக்கள் காணப்படும். அவை உற்பத்தியாகும் இடம் இதயமல்ல; எலும்பு மஜ்ஜையில்தான் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன. சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். வெள்ளை அணுக்களே நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்த கசிவை தடுப்பவை பிளேட்லட் அணுக்கள். ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மிலி ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் மற்ற அணுக்கள் 10 சதவீதமும் இருக்கும். உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா... ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்! பைக்கின் சராசரி வேகத்தை விட சற்று அதிகம்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..
கூகுள், கடந்த 8 வருடங்களாக முயற்சி செய்து அக்டோபர் மாதம் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. முதலில் எக்ஸ் லேப் என பெயரிடப்பட்ட கூகுளின் இந்த தானியங்கி கார்கள் தற்போது வேமோ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கார் மூலம் களைப்பு, போதை, கவனச் சிறதல்கள் போன்றவற்றால் உருவாகும் விபத்துகளை தவிர்க்க முடியும்.கண் தெரியாதவர்கள் கூட தனியாக வேமோவில் எளிதாக பயணிக்கமுடியும் என்கிறது கூகுள். ஜிபிஎஸ் செட்டிங்க்ஸ் மூலம் இந்த வகை கார்கள் சாலைகளில் உள்ள போக்குவரத்து சூழல், சிக்னல் போன்றவற்றை உணர்ந்து செயல்படுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான முதல் குற்றவாளி நாகேந்திரன் மரணம்
09 Oct 2025சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபள தாதா நாகேந்திரன் உயிரிழந்தார்.
-
கலப்பட இருமல் விவகாரம்: மருந்து நிறுவன உரிமையாளர் கைது
09 Oct 2025சென்னை: தமிழகத்தின் கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
09 Oct 2025சென்னை: ஒரு சவரன் விலை காலையில் ரூ.120 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.
-
மதுரையில் உலகத்தரத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் எம். எஸ். தோனி
09 Oct 2025மதுரை: இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரராக திகழ்ந்தவரும்,முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று, ரூ.325 கோடி செலவில் மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட்
-
டெல்லியில் இன்று தொடக்கம்: இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி
09 Oct 2025புதுடெல்லி: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வங்கதேசத்திற்கு எதிரான போட்டி: பல சாதனைகளை படைத்த ரஷித்கான்
09 Oct 2025அபுதாபி: வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரஷித் கான், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு
09 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
-
ஓய்வு குறித்து அஸ்வின் விளக்கம்
09 Oct 2025முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் தான் ஓய்வு பெற்றது தனிப்பட்ட விஷயம் என்றும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
-
நவம்பர் 18-ல் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம்
09 Oct 2025சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அக்டோபர் 16 இல் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18 இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு
-
விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன்
09 Oct 2025நெல்லை: விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Oct 2025சென்னை: தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம்
09 Oct 2025இமயமலை: இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்தார்.
-
பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷா: மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
09 Oct 2025கொல்கத்தா: பிரதமரை போல செய்படுகிறார் அமித்ஷா என்று மம்தா பானர்ஜி மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
-
ஜம்மு-காஷ்மீர் மாயமான 2 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்
09 Oct 2025ஜம்மு: பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வந்த இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் மாயமான நிலையில், அவர்கள் தேடும் பணியில் சக வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம்: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பிறகு பிரதமர் மோடி வரவேற்பு
09 Oct 2025புதுடெல்லி: அதிபர் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் ஒரு திருப்புமுனை பிரதமர் நெதன்யாகு தகவல்
09 Oct 2025இஸ்ரேல்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
சொகுசு பேருந்தை ஓட்டிய அமைச்சர்
09 Oct 2025சென்னை: வால்வோ நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பஸ்சினை சோதனை முறையில் அமைச்சர் சிவசங்கர் நீண்ட நேரம் ஓட்டி பார்த்தார்.
-
தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் மகன் வீட்டுக்காவலில் அடைப்பு
09 Oct 2025ஐதராபாத்: பஸ் டிக்கெட் கடடண உயர்வை கண்டித்து சாலை பேரணி நடத்த முயன்ற சந்திரசேகரராவ் மகன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
-
15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: டென்மார்க் அரசு அதிரடி
09 Oct 2025கோபன்ஹேகன்: 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது.
-
சர்ச்சையான சபரிமலை தங்கத் தகடு விவகாரம்: கேரள சட்டமன்றம் முடக்கம்: போராட்டக்காரர்கள் கைது
09 Oct 2025திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கத்தகடு மாயமான விவகாரத்தில் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
-
ஒரு வார பயணமாக இந்தியா வந்தார் தாலிபான் அமைச்சர்
09 Oct 2025டெல்லி: தாலிபான் அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஒரு வார பயணமாக இந்தியா வந்தார்.
-
சட்டமன்ற தேர்தல்: பாதுகாப்பு பணியில் 4 லட்சம் பேர்: பீகார் டி.ஜிபி. வினய் குமார் தகவல்
09 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படு வார்கள் என காவல்துறை இயக்குநர் ஜெனரல் வினய் குமார் தெரிவித்தார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-10-2025.
10 Oct 2025 -
20205-அமைதிக்கான நோபல் பரிசு: வெனிசுலாவின் மரியாவுக்கு அறிவிப்பு - ட்ரம்ப் ஏமாற்றம்
10 Oct 2025ஸ்டாக்ஹோம் : 2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.;
-
30 மீனவர்கள் கைது எதிரொலி: ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
10 Oct 2025ராமநாதபுரம் : ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.