முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே அதிகமான ரசிகர்கள் திரண்ட இசை கச்சேரி எது தெரியுமா?

அது 1993 இல் நடைபெற்றது. பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் புகழ் பெற்ற கோபகபானா என்ற பீச்சில் அந்த கச்சேரி நடைபெற்றது. கச்சேரியின் நாயகன் ராட் ஸ்டீவர்ட் என்ற ராக் மற்றும் பாப் இசை பாடகர். இவர் எந்த அளவுக்கு பிரபலம் என்றால் இவரது இசை ஆல்ப சீடிக்கள் மட்டும் உலகம் சுமார் 2.5 கோடிக்கும் மேலாக விற்று தீர்ந்துள்ளன. அன்றைக்கு அந்த பீச் இசை கச்சேரிக்கு திரண்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 45 லட்சம் பேர். பிறகென்ன.. கச்சேரி கின்னஸிலும் இடம் பிடித்தது. உலக மக்களின் மனதிலும் இடம் பிடித்தது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

சார்லஸ் டார்வின் என்பவரை பற்றி தெரியாவர்கள் இருக்க முடியாது. இந்த உலகில் புழு, பூச்சி தொடங்கி மனித இனம் வரை அனைத்தும் எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கு விடை காண முயன்றவர். அவர் உருவாக்கிய தியரியே.. அதாவது கோட்பாடே பரிணாம கொள்கை. இதன் மூலம் ஒரு செல்லிலிருந்து பிரிந்த புதிய உயிரினம் படிப்படியாக பல்கி பெருகி, தாவரங்கள், பூச்சிகள், தவளைகள், மீன்கள், பறவைகள், விலங்குகள், குரங்கின் வழியாக மனித இனம் தோன்றின என்கிறார். ஆனால் இன்றைய நவீன வீஞ்ஞானம் செல்லை மட்டுமின்றி அதனுள் புதைந்திருக்கும் கோடிக்கணக்கான மரபணுக்கள், அவை உருவாக காரணமாக டிஎன்ஏ, ஆர்என்ஏக்கள் என தனது பயணத்தை மிகவும் மைக்ரோ, நேனோ லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. அதில்தான் முக்கிய திருப்பம் நடந்துள்ளது. கடந்த 2015 இல் கேம்பிரிட்ஜ் பல்கலை நடத்திய ஆய்வில் தாவரங்களில் இருந்து வந்த மரபணுக்கள் வாயிலாக மனித இனம் தோன்றியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி சுமார் 1 சதவீத மனித மரபணுக்கள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவைதான் என அடித்து சொல்கின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்.. இப்போ சொல்லுங்கள் நாம் குரங்கிலிருந்து வந்தோமா, தாவரத்திலிருந்து வந்தோமா...

சூடான பாலை குடித்தால் இரவில் நன்றாக தூக்கம் வருவது ஏன்?

இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நன்றாக தூக்கம் வருவது ஏன் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம் நாடுகளில் நீண்ட காலமாகவே இரவு உறக்கத்துக்கு முன்பு சூடாக ஒரு டம்பளர் பால் குடிப்பது வழக்கம். தற்போது மேலை நாடுகளிலும் இரவில் நன்றாக உறங்க பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகின்றனர். பாலில் தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகளை பொதுவாக டிரிப்டோபன் என குறிப்பிடுகின்றனர். அண்மையில் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்  கேசீன் ட்ரிப்டிக் ஹைட்ரோலைசேட் (சிடிஎச்) எனப்படும் பெப்டைட்டுகளின் கலவையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கு அளிக்கப்படும் பென்சோடியாசெபைன்கள், சோல்பிடெம் போன்றவை கடுமையான பக்க விளைவை ஏற்படுத்துபவன. ஆனால் பசுவின் பாலில் கிடைக்கும் கேசீன் எனப்படும் புரதம் செரிமானத்தை மேம்படுத்தி சிடிஎச் எனப்படும் தூக்கத்தை மேம்படுத்தும் பெப்டைட்களின் கலவையை கொண்டிருப்பதால் இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கக் கூடியது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமைதிக்கான வழி ...

வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச் செய்யும் நிலைதான் தியான நிலை. தியானம், நம் மனதை அமைதிபடுத்தி, தசைகளின் இறுக்கம் மற்றும் மனக்கவலைகளைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடலில் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாத்து, இதயம் தொடர்பான நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது. தியானம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு, பிடித்த தெய்வத்தை நினைத்து வழிபடுதல் வேண்டும். தினமும் காலையில் 5 முதல் 6 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை தியானம் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் கோடிகளை குவிக்கும் இளைஞர்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த மோகித் சுரிவால். வயது வெறும் 17க்கும் கீழே. ஆனால் இவரது ஆண்டு வருவாய் கோடிக்கும் மேலே. அதுவும் ஒரு சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. இவர் செய்தது என்ன...இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இளசுகள் சும்மா கடலை வறுக்கும் நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டார் மோகித். உலகத்தின் அனைத்து பிராண்டுளின் கன்டென்டுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஹிட்டாக்கினார். ஒரு கட்டத்தில் அவரது வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் மனம் தளராமல் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ, யூடியூப் என கலக்கி வருகிறார். தற்போது அவரது காட்டில் பண மழை கொட்டி வருகிறது.

உலகின் முதல் பல்கலை கழகம்

உலகின் முதல் பல்கலை கழகம் பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்டது  என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். அதன் பெயர் தக்சஸீலா. பரதன் தனது மகன் தட்சனுக்காக நிர்மாணிக்கப்பட்ட நகரம் தக்சஸீலம் என்று சொல்லப்படுகிறது. தட்சஸீல பல்கலை கழகத்தின் காலம் கிமு 6 லிருந்து 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் நூலை எழுதிய சாணக்கியர் இங்கு பேராசிரியராக பணியாற்றினார். அவரிடம் மெளரிய அரசர் சந்திர குப்தர் கல்வி பயின்றார். மற்றொரு புகழ் பெற்ற பேராசிரியர் சமஸ்கிருத அறிஞரான பாணினி. அசோகர் காலத்தில் இது மேலும் விரிவாக்கம் பெற்றது. காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகள், ஆட்சிமாற்றங்கள் காரணமாக தட்சஸீலம் படிப்படியாக அழிந்தது.  அது சரி தற்போது அந்த இடம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா..பாகிஸ்தானில். பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago