இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த மோகித் சுரிவால். வயது வெறும் 17க்கும் கீழே. ஆனால் இவரது ஆண்டு வருவாய் கோடிக்கும் மேலே. அதுவும் ஒரு சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. இவர் செய்தது என்ன...இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இளசுகள் சும்மா கடலை வறுக்கும் நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டார் மோகித். உலகத்தின் அனைத்து பிராண்டுளின் கன்டென்டுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஹிட்டாக்கினார். ஒரு கட்டத்தில் அவரது வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் மனம் தளராமல் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ, யூடியூப் என கலக்கி வருகிறார். தற்போது அவரது காட்டில் பண மழை கொட்டி வருகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சில நேரங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் வரலாறு குறித்து தெரியவந்தால் அதில் நாம் அறிந்திராத பல்வேறு சுவாரசியமான செய்திகள் அடங்கியிருக்கும். அதில் ஒன்று, தற்போது நாம் கணிணியில் பயன்படுத்தி வரும் மவுஸ். 1964 இல் ஸ்டான்போர்ட் பொறியாளர் டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர்தான் மர மவுஸை உருவாக்கியவர். அதில் இரண்டு சக்கரங்கள் மற்றும் ஒரு பொத்தான் கொண்ட மரப்பெட்டி வடிவத்தில் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே..
இந்தியாவில் சுமார் 90% இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்களாம். இதன்மூலம் சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்கள், வழக்கத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாகவே தூங்க செல்கின்றனர். இதன்மூலம் தூக்க குறைபாடு, மன அழுத்தம், சோர்வு போன்ற நோய்களுக்கு ஆளாவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹெட்போன்களை நாம் பயன்படுத்தும்போது, நம் காதுக்கு 90 டெசிபல் ஒலியானது நேரடியாக வருகிறது. குறிப்பாக ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்டால் அவருக்கு காது கேட்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. பிறர் பயன்படுத்தும் ஹெட்போன்களை பயன்படுத்தினால் தொற்று நோய்கள் ஏற்படுமாம்.
தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான, கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம். மேலும், தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது. ஆனால், நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர். இங்கே, ஊருக்குள், காவிரிக் கரையோரத்தில் உள்ளது ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அப்படி என்ன சிறப்பு. எத்தனையோ உள்ளன. பாடல் பெற்ற தலம். திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது. சுவாமி முன் உள்ள தீபம் ஆடாமல் அசையாமல் எரிவதாலேயே அவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் வந்தது. ஒரு முறை காவிரியில் வெள்ளம் வந்து கோயில் மூழ்கிய போதும் தீபம் மட்டும் விடாமல் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தீயவர் குலை நடுங்க திரைவிமர்சனம்
24 Nov 2025படத்தின் தொடக்கத்தில் பிரபல எழுத்தாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜூன் விசாரிக்கிறார்.
-
தாஷமக்கான் படத்தின் டைட்டில் புரமோ வெளியீடு
24 Nov 2025ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக்க் கொண்டு உருவாகி வரும் படம் “தா
-
வங்கக்கடலில் இன்று புதிய புயன் சின்னம் உருவாகிறது
24 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உத்தரகாண்ட்டில் விபத்து - 5 பேர் பலி
24 Nov 2025டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 5 பேர் பலியாயினர்.
-
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
24 Nov 2025தி.மலை, உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
-
வங்கக்கடலில் 2 புயல் சின்னம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம்
24 Nov 2025சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது.
-
நானும் ஒரு விவசாயிதான்; இப்போது வரை விவசாயம் செய்து வருகிறேன் : முதல்வர் விமர்சனத்திற்கு இ.பி.எஸ். பதில்
24 Nov 2025சேலம் : விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அ.தி.மு.க. அரசாங்கம். நானும் ஒரு விவசாயிதான்.
-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
24 Nov 2025சென்னை : முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
-
கார்த்தீஸ்வரன் இயக்கி நடிக்கும் நிர்வாகம் பொறுப்பல்ல
24 Nov 2025ஆர்.கே.ட்ரீம் ஃபேக்டரி டி.ராதாகிருஷ்ணன், கே.எம்.பி புரொடக்ஷன்ஸ் எஸ்.பி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.புவனேஸ்வரன் மற்றும் சி.சாஜு - ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பா
-
மிடில் கிளாஸ் திரைவிமர்சனம்
24 Nov 2025குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் மிடில் கிளாஸ்.
-
ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் : ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்
24 Nov 2025ஜெனீவா : ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் செய்ய ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
-
நாகூர் ஆண்டவர் பெரிய கந்தூரி விழா: நாகைக்கு டிச.1-ல் உள்ளூர் விடுமுறை
24 Nov 2025நாகை : நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
குற்றால அருவிகளில் 4-வது நாளாக காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடரும் தடை
24 Nov 2025தென்காசி, தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
-
நீலகிரி மாவட்டத்தில் புலி தாக்கி பெண் பலி
24 Nov 2025கூடலூர் : நீலகிரி மாவட்டம் உதகையில் புலி தாக்கி இழுத்துச் சென்றதில் பெண் உயிரிழந்தார்.
-
அயோத்தி ராமர் கோவில் உச்சியில் காவிக்கொடி இன்று ஏற்றி வைக்கிறார் பிரதமர் மோடி
24 Nov 2025புதுடெல்லி : அயோத்தியில் ராம ஜன்மபூமி கோவிலின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, சம்பிரதாய ரீதியாக இன்று காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளை உடனே விடுவிக்க போப் வேண்டுகோள்
24 Nov 2025அபுஜா : நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள போப் லியோ, கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் துரிதமாக நடவடிக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-11-2025.
24 Nov 2025 -
மாண்புமிகு பறை இசை வெளியீட்டு விழா
24 Nov 2025அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேவா இசையில் உருவாகியுள்ள படம் ‘மாண்புமிகு பறை’.
-
தற்குறி என்று யாரையும் தி.மு.க. சொல்லவில்லை : டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்
24 Nov 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் தற்குறி என்று யாரையும் சொல்லவில்லை என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
-
'திவாலானவர்' என அறிவிக்க தயாரா? நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி
24 Nov 2025சென்னை, 'திவாலானவர்' என அறிவிக்க தயாரா? என லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் கனடா பிரதமர்
24 Nov 2025ஒட்டவா : பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கனடா பிரதமர் மார்க் கார்னி 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
-
தென்காசி விபத்து: வைகோ இரங்கல்
24 Nov 2025தென்காசி : தென்காசி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களை பயன்படுத்தியது விசாரணையில் அம்பலம்
24 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
யெல்லோ திரைவிமர்சனம்
24 Nov 2025மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் நாயகி பூர்ணிமா ரவி, சிறுவயதில் தன்னுடன் விடுதியில் தங்கிப் படித்த சில நண்பர்களை தேடி பயணம் மேற்கொள்கிறார்.
-
சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க மலேசிய அரசு திடீர் முடிவு
24 Nov 2025கோலாலம்பூர் : 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.


