முட்டையை நாம் நிலத்தின் மீது உடைத்தால் அது அப்படியே உடைந்து கலைந்து போவதை நம்மால் காண முடியும். அதே வேளையில் கடலுக்கு அடியில் உடைத்தால் என்ன ஆகும் தெரியுமா... கடலுக்கு அடியில் சுமார் 18 மீட்டர் அல்லது 60 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டாலே அங்கு அழுத்தம் அதிகரித்து காணப்படும். அது வெளிப்புறத்தில் காணப்படுவதை காட்டிலும் 2.8 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் இருக்கும். இங்கு ஒரு முட்டையை உடைத்தால் அழுத்தம் காரணமாக அது கலைந்து போகாமல் ஒரு ஜெல்லி மீனைப் போல காட்சி அளிக்கும் என்பது ஆச்சரியம் தானே..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., - 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அதிக எண்ணெய் எடுப்பதால் அவை இரத்த குழாய்களில் படிந்து ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது. அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன.
இந்திய சுதந்திர போரின் போது மைசூர் சமஸ்தானத்து மன்னர்களான ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் படைகள் 1780 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்தனர். பொள்ளிலூர் என்ற இடத்தில் இந்த சண்டை நடைபெற்றது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் பொள்ளிலூர் சண்டை என்ற தலைப்பில் சுமார் 32 அடி நீளமுள்ள 10 மிகப் பெரிய காகிதங்களில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஓவியமாக தீட்டப்பட்டது. இந்த ஓவியம் லண்டனில் புதன் கிழமை ஏலத்துக்கு வந்தது. அப்போது 630000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.32 கோடிக்கு விற்பனையானது.
இதஎன்ன புது கலாட்டா... இன்றைக்கு உலகில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய்களில் பெரும்பாலானவற்றை இந்த விமானங்கள் தான் குடித்து தீர்க்கின்றன. ஆண்டு தோறும் கோடிக்கணக்கான லிட்டர் எரிபொருளை விமான போக்குவரத்துக்கு செலவிட வேண்டியுள்ளது. போகிற போக்கை பார்த்தால், டூவிலருக்கே பெட்ரோல் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் பசுமை எரிபொருளுக்கு மாறத் தொடங்கியுள்ளன. அதன் தொடக்கமாக ஆஸ்திரேலியாவில் உள்ள சரக்கு விமான நிறுவனம் ஒன்று தனது விமானத்தில் பெட்ரோலுடன் சமையல் எண்ணெய்யையும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து சோதனை ஓட்டம் நிகழ்த்தியது. இது வழக்கமான எரிபொருளை விட குறைவான கார்பனை வெளியிடுவதும் தெரிய வந்துள்ளது. எதிர்காலத்தில் சமையல் எண்ணெய்யில் விமானத்தை நாங்கள் தயார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அது சரி.. இந்தியா போன்ற நமது நாடுகளில் பிறது எதை கொண்டு சமையலை தாளிக்க முடியும்... என்னமோ போங்க.. எதிர்காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லனும்.
இன்றைக்கு இமெயிலில் மிக வேகமாக செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் அதற்கு முன்பு ஒருமுறையாவது யோசித்து பார்த்திருக்கிறோமா... முன்பெல்லாம் ஒரு வரியை அனுப்புவது என்பதே அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உண்மையில் 80களின் இறுதியில் டேட்டாபேஸ் என்ற தொழில் நுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ஒரு இமெயிலை எவ்வாறு அனுப்புவது என்பதை செய்து காட்டினர். அதில் ஒரு கம்பியூட்டரையும், தொலைபேசியையும் இணைத்தனர். இது மைக்ரோநெட் என அழைக்கப்பட்டது. இது www என அழைக்கப்படும் இணையத்துக்கு முந்தைய காலம். அப்போது URL முகவரியெல்லாம் கிடையாது. வெப் பக்கங்களுக்கு வெறும் எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இமெயில்களுக்கான வெப் எண் 7776. என்ன கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.
இன்றைய ஹாலிவுட் படமானாலும் சரி, வெளிநாட்டு படமானாலும் ஒரு சீன்லயாவது கழிவறை இடம் பெறாமல் போவதில்லை. ஆனால் 1960கள் வரையிலும் அமெரிக்க ஹாலிவுட் படங்களில் கழிவறையே இடம் பெற்றதில்லை. முதன்முதலாக முக்கிய பாத்திரம் ஒருவர் கழிவறையில் காகிதத்தை கசக்கி எறிந்து, தண்ணீரை திறந்து விடுவதை போன்ற காட்சியை சைக்கோ திரைப்படத்தில் ஹிட்ச்காக் அமைத்திருப்பார். அதன் பிறகே ஹாலிவுட் படங்களில், கழிவறை, குளிலறை, ஷவர் போன்றவை இடம் பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது
10 Nov 2025சென்னை, தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
-
புதுக்கோட்டைக்கு 6 புதிய அறிவிப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Nov 2025புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.767 கோடியில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வீர கொண்டான் ஏரி ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
10 Nov 2025சென்னை, வார தொடக்கமான நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளில் இறுதி தேர்தல்
10 Nov 2025பாட்னா, பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. களத்தில் 1,302 வேட்பாளர்கள் உள்ளனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 Nov 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய
-
அசைவ உணவு சாப்பிட்ட 2 ஊழியர்கள் பணிநீக்கம்: திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை
10 Nov 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 2 ஒப்பந்த ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
நெல்லை, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
10 Nov 2025சென்னை, தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவ. 23, 24-ல் ஆலோசனை
10 Nov 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் வருகிற நவ.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
10 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
-
டி.ஜி.பி. நியமனத்தில் ஏன் குளறுபடி..? தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
10 Nov 2025கோவை, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் உரிய வழிமுறைகளை தி.மு.க. அரசு பின்பற்றவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாட பழனிசாமி டி.ஜி.பி.
-
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: நடத்தை விதிமுறைகள் அமல்
10 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு வாக்காளரும் மிக கவனமாக இருக்க வேண்டும்: புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
10 Nov 2025புதுக்கோட்டை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.
-
சபரிமலைக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே
10 Nov 2025சென்னை, சபரிமலைக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
திருச்சி காவலர் குடியிருப்பு வளாகத்தில் இளைஞர் கொடூர கொலை; 5 பேர் கைது
10 Nov 2025திருச்சி, திருச்சி பீமநகரில் காவலர் குடியிருப்பில் இளைஞர் தாமரைச்செல்வன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் தொடர்புடைய
-
மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் திராவிட மாடல் 2.0 அரசிலும் தொடரும்: புதுக்கோட்டை அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி
10 Nov 2025புதுக்கோட்டை, தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்றும், தமிழ்நாட்டு மகளிர் முன்னேறி வருவதற்கு துணையாக இருக்கும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தம
-
எஸ்.ஐ.ஆர். போன்ற புது யுக்திகளை கையாண்டாலும் தி.மு.க. இயக்கத்தை யாராலும், ஒருபோதும் அழிக்க முடியாது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
10 Nov 2025திருச்சி, எஸ்.ஐ.ஆர். போன்ற புது யுக்திகளை கையாண்டாலும் தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது என்று திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எத்தனை முனை போட்டி வந்தாலும் கவலை இல்லை: தமிழகத்தில் 7-வது முறை தி.மு.க. ஆட்சி அமைக்கும் : புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
10 Nov 2025புதுக்கோட்டை, எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க.
-
மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூத்த குடிமக்களுக்கான 25 அன்புச்சோலை மையங்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்
10 Nov 2025சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூத்த குடிமக்களுக்கான 25 அன்புச்சோலை மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
-
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் போய்விடும்: தேஜஸ்வி யாதவ்
10 Nov 2025பாட்னா, கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பா.ஜ.க.வில் சேர்ந்தால் போய்விடும் என்று தேஜஸ்வி யாதவ் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
-
மாலியில் கடத்தப்பட்ட தமிழர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும்: வெளியுறவு துறைக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை
10 Nov 2025சென்னை, மாலியில் கடத்தப்பட்டிருக்கும் 5 தமிழக தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்
-
நடிகர் அபினய் காலமானார்
10 Nov 2025சென்னை, நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கம் அளித்த மின்வாரிய அதிகாரிகள்
10 Nov 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொட்பாக மின்வாரிய அதிகாரிகள் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
10 Nov 2025மேட்டூர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 115.37 அடியிலிருந்து 114.86 அடியாக சரிந்தது.
-
அதிக வருமானம் ஈட்டுவோருக்கு கிடையாது: அமெரிக்கர்களுக்கு 2,000 டாலர்கள் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவிப்பு
10 Nov 2025வாஷிங்டன், அமெரிக்கர்களுக்கு 2 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
சென்னை ஐ.பி.எல். அணியில் இருந்து வெளியேறும் ஜடேஜா, பதிரனா...!
10 Nov 2025சென்னை, சஞ்சு சாம்சனை விட்டுக்கொடுக்க ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


