முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஷூக்களின் நீளம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?

ஒரு கால கட்டத்தில் அதிகாரத்தின் குறியீடாகவும், செல்வந்தர்களின் அடையாளமாகவும் ஷூக்கள் அணியும் பழக்கம் நிலவி வந்தது நமக்கு தெரியும். பின்னர் போர் வீரர்களும், உயர் அதிகாரிகளும் அவற்றை அணிய தொடங்கினர். இன்றைக்கு விற்பனை பிரதி நிதி தொடங்கி அனைத்து தரப்பினரும் அணியும் பேஷன் பொருளாக ஷூ மாறியுள்ளது. மத்திய கால கட்டத்தில், அதாவது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஷூக்கள் சுமார் 2 அடி நீளம் கொண்டவையாக தயாரிக்கப்பட்டன என்றால் ஆச்சரியம் தானே...இவை மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக கேசம், கம்பளி, இறகு போன்றவை திணிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த வகை ஷூக்கள் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

ஒன்றுக்கும் மேற்பட்ட நாசிகளை கொண்ட விலங்கு எது தெரியுமா?

பொதுவாக மனிதன் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு மூக்கு மட்டுமே காணப்படும். ஆனால் ஒரு விலங்குக்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றல்ல, நான்கு மூக்குகளை கொண்டுள்ளது. அவை ஸ்லக்குகள் என்ற ஒரு வகை நத்தைகள் ஆகும். இவற்றின் மூக்கு மனிதனின் நாசிகளைப் போல வாசனைகளை நுகரும் வேலையை மட்டும் செய்வதில்லை. மாறாக நிலத்தில் கலந்துள்ள ரசாயனம், சத்தங்கள், வெளிச்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான செயல்பாடுகளையும் அவை மூக்கினாலேயே மேற்கொள்கின்றன... என்றால் ஆச்சரியம் தானே.

ஆப்பிள்கள் ஓராண்டு கழித்தே விற்பனைக்கு வருகின்றன தெரியுமா?

சென்னை போன்ற பெருநகரங்களில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த பழத்தையும் விலைக்கு வாங்கலாம். அதிலும் குறிப்பாக ஆப்பிள்கள் விற்காத சூப்பர் மார்க்கெட்களோ, ஸ்டோர்களோ இருக்க முடியாது. ஆனால் அவை பறித்து ஓராண்டு கழித்தே விற்பனைக்கு வருகின்றனவாம். ஆப்பிள்கள் பொதுவாக ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் மாதங்களில்தான் அறுவடை சீசன். அவை  பறிக்கப்பட்டு, வேக்ஸ் தடவி,் சூடான காற்றில் காய வைத்து குளீருட்டப்பட்ட பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் அவை பேக் செய்யப்பட்டு நம்மூர் சூப்பர் மார்க்கெட்களை அடைய 6 மாதம் முதல் 1 வருடம் வரை கூட ஆகுமாம். 

மனிதர்களை மிஞ்சும் ரோபோ

ரோபோகள் மருத்துவர்களால் செய்ய முடியாத பல செயல்களை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுகிறது. அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று, 2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளனர். பொதுவாக மூளை அறுவை சிகிச்சை செய்ய மனிதர்களால் குறைந்தது 2 மணி நேரமாகும். ஆனால் அதே அறுவை சிகிச்சையை வெறும் 2.5 நிமிடத்தில் செய்யக்கூடிய திறன் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரோபோ. மேலும் சி.டி ஸ்கேன் தொழில்நுட்பத்தில் மூளையின் பகுதிகளை பிரித்து அறியக்கூடிய திறனையும் இந்த ரோபோ பெற்றுள்ளது. மூளை அறுவை சிகிச்சையில் மட்டுமல்ல, இடுப்பு தொடர்பான ஆபரேஷன்களிலும் இந்த சாதனம் பயன்படுத்தபடுகிறது.

புதிய சிகிச்சை

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியை மேற்கொண்டது. வயதானவர்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றுவதுதான் அந்த முயற்சி. வயதானவர்கள், உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் நல்லவிதமாக வந்துள்ளதாம்.

பிரசவத்துக்கு முன்பாகவே 21 வாரத்தில் பிறந்த குழந்தை

ஒரு சில குழந்தைகள் பிரசவத்துக்கு முன்பாகவே குறை பிரசவத்தில் பிறப்பதுண்டு. அவை 8 அல்லது 9 மாதத்தில் பிறந்தாலும் போதிய வளர்ச்சி இருந்தால் அவற்றை இன்குபேட்டர் எனப்படும் மருத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பராமரித்து தேற்றி விடுவர். ஆனால் உலகின் மிகப் பெரிய அதிசயமாக வெறும் 21 வாரத்தில் பிறந்த குழந்தை தற்போது வளர்ச்சி அடைந்து உயிர் பிழைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியைச் சேர்ந்த தம்பதிக்குத்தான் கடந்த ஆண்டு ஜூலையில் வெறும் 21 வாரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும் போது அதன் எடை வெறும் 420 கிராம் மட்டுமே. பொதுவாக பிரசவ காலம் என்பது 280 நாட்கள், ஆனால் இந்த குழந்தை 148 நாட்களிலேயே பிறந்து விட்டது. மிகவும் நுட்பமான மருத்துவ கவனிப்பின் மூலம் அந்த குழந்தை தற்போது 16 மாத குழந்தையாக உயிர் பிழைத்துள்ளது. இதில் மற்றொரு அதிசயமாக இரட்டையராக பிறந்த இந்த குழந்தையுடன் பிறந்த மற்றொரு பெண் குழந்தை பிறந்த ஒரு நாளிலேயே இறந்து விட்டது என்பதுதான். இந்த குழந்தையை பிரசவம் பார்த்த டாக்டர் பிரெய்ன் சிம்ஸ் கூறுகையில் எனது 20 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததேயில்லை என வியந்துள்ளார். இந்த செய்தி தற்போது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago