முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய வசதி

சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் 2 பில்லியன் வாடிக்கையாளர்களை எட்டவுள்ளது. இந்தநிலையில் தற்போது மெஜஞ்சர் டே எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அடுத்ததாக தாம் செய்யவிருக்கும் விடயங்களை நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பரிமாறிக்கொள்ள முடியும்.

தானியங்கி பைக்

மின்சாரத்தில் இயங்கக்கூடிய சைக்ளோட்ரான் என்ற தானியங்கி பைக்கில், ஒரே சமயத்தில் இரண்டு பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்ளோட்ரான் தானியங்கி பைக்கில் இரு பயணிகளும் நேருக்கு நேர் அமர்ந்து கொண்டு செல்லலாம். எல்லா காலங்களிலும், அதாவது, குளிர்காலம், வெயில்காலம், மழைகாலத்திலும் இந்த வாகனத்தை இயக்கலாம்.

ஏ.கே.47 துப்பாக்கி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது

இன்றைய போர்ப்படை ஆயுதங்களில் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இந்த ஆயுதம் தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம். சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காபாற்றத் தகுதி வாய்ந்த ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடிக்க முனைந்தது. அப்போது தானியங்கித் துப்பாக்கி ஒன்றைக் கண்டறிவதில் கலாஷ்நிகாவ் ஈடுபட்டார். தேவையான இலக்கை நோக்கிச் சுடுவதில் அப்போதிருந்த கைத்துப்பாக்கி வெற்றிகரமாக அமையவில்லை. இதன் காரணமாக உருவானதுதான் ஏ.கே.47 வகைத் துப்பாக்கி.

மாரடைப்பை தடுக்க...

இன்று, உலகில் அதிகமாகப் பயிரிடப்படும் உணவுப் பொருட்களில் 4-வது இடத்தில் இருக்கும் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், ஸ்டார்ச், வைட்டமின் சி, வைட்டமின் பி 6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், போலிக் ஆசிட், கால்சியம், பைட்டோகெமிக்கல்ஸ், காப்பர், நியாசின் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மாரடைப்பு வருவதைத் தடுக்கும்.

சைவ உணவு சாப்பிடும் முதலை கேரளாவில் அதிசயம்

பொதுவாக சிறிய விலங்குகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் வகையைச் சேர்ந்தவைதான் முதலைகள். ஆனால் வடக்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீஅனந்தபுரம் கோவில் என்ற இடம். இங்குள்ள கோவிலில் ஸ்ரீஅனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் அருள் பாலிக்கிறார்.  அக்கோயிலில் உள்ள குளத்தில் வசிக்கும் முதலை தான் இப்போது ஹைலைட். அவர்தான் நம்ம வெஜிடேரியன் முதலை. பாபியா என அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இது சில வேளைகளில் கோயிலுக்கு உள்ளேயும் வந்து விடுவதுண்டு.  கோயிலில் சமைக்கும் உணவுதான் இந்த முதலைக்கும் வழங்கப்படுகிறது.  இது எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது. கோயில் குருக்கள் அதற்கு கோயில் யானைக்கு கொடுப்பது மாதிரி சாதாரணமாக உணவை படைக்கிறார். நமக்கு படியளக்கும் பகவான்தான் அதற்கும் படியளக்கிறார் எனக் கூறும் குருக்கள், அந்த முதலை இதுவைர யாரையும் தாக்கியதில்லை என்கிறார். சாதுவான பூனை போல கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார் முதலையார். 

மனிதனால் மட்டும்...

சராசரியாக, வாழ்நாளில் 25 கோடி தடவை அழும் அல்லது கண்ணீர் விடும் ஒரே உயிரினம் மனிதன்தான். அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வரக் காரணம், கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பியுள்ள தசைநார்கள் அழுத்தப்படுவதால்தான். ஆனால், பச்சிளம்குழந்தைகள் அழுவதில்லை, கத்த மட்டுமே செய்யுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago