அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டில் இருந்து சில நிமிடங்களில் அடைகிற தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற சன்செட் பொலிவார்டில் உள்ள ஏரி ஆலயத்தில் அமைந்திருக்கிறது காந்தி உலக அமைதி நினைவகம். இந்த ஆலயத்தின் நிறுவனர் பரமஹம்ச யோகானந்தா. இது 1950ல் கட்டப்பட்டது. இந்த இடத்தில் சீனாவில் இருந்து வந்த பழமையான கல் பெட்டியில் ஒரு வெள்ளிப் பேழையும், ஒரு வெண்கலப் பேழையும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேழைகளில்தான் காந்தியின் அஸ்தி இருப்பதாக கூறப்படுகிறது. 1948ல் காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, அவரது அஸ்தி 20 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல பாகங்களுக்கு மக்கள் நினைவுக்கூட்டங்கள் நடத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றில் சில பாகங்கள் எப்படியோ வெளிநாடு கொண்டுசெல்லப்பட்டுவிட்டது. தற்போது அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து நதி தீரத்தில் கரைக்க வேண்டும் என காந்தியின் பேரனான துஷார் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர். இது எவ்வாறு அமெரிக்காவுக்கு சென்றது என்பது மர்மமாக உள்ளது என காந்தி குடும்பத்தினர் கூறுகின்றனர்.
எந்த விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஒருவரது உடல்நலத்திற்கும், ஃபிட்னெஸுக்கும் ஏற்றது என்பதைக் குறித்து, டிஎன்ஏ மூலமாக கண்டறியும் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டிஎன்ஏ கிட் பரிசோதனை மேற்கொண்ட பின், நாம் உட்கொள்ளும் உணவு குறித்து தேர்ந்தெடுப்பதிலும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதிலும், எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை எளிதில் அறியலாம். டிஎன்ஏ பரிசோதனை மூலம் கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருக்கிறது என்றும் எனினும், இதனால் கிடைக்கும் நன்மைகள் வணிக நோக்கில் அளவுக்கதிகமாகவும் மிகைப்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பொதுவாகவே ஒரு சிலையை வடிக்கவே பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் மலையின் மீது மிக பிரமாண்டமான சிற்பங்களை வடிப்பது என்றால்... எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்... சீனாவின் ஹெனான் மாகாணத்தில் லுவோயாங்கிற்கு தெற்கே 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புத்த குகை வளாகமான லாங்மென் க்ரோட்டோஸ் பண்டைய சீன சிற்ப கலையின் நேர்த்தியான பிரதிநிதித்துவத்தை எடுத்து சொல்கிறது. இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை 57 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் எழுத்துக்கள், சிற்பங்கள் பொறிக்கப்பட்ட கற்கள் 2,500 (ஸ்டெலாக்கள்), ஸ்தூபி வடிவிலான 60 பகோடாக்களும் உள்ளன. அவற்றில் பழமையானதும் மிகப்பெரியதும் குயங்டாங் ஆகும். இவற்றின் கட்டுமானம் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேரரசர் சியாவோன் ஆட்சியில் தொடங்கியது. வெய் வம்சம் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளது. . பேரரசர் சியாவோன் புத்த மதத்தை தீவிரமாக பின்பற்றியுள்ளார். வெய் வம்சத்திற்குப் பிறகு, டாங் மற்றும் சாங் உள்பட தொடர்ச்சியாக ஆறு வம்சங்கள் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குகைகளில் சிற்பங்கள் செதுக்குவது தொடர்ந்துள்ளது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா... இதை 2000 ஆவது ஆண்டில் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.
ஆண்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும். காபி, டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால் அல்சர் வருவதை தடுக்க வும், குளிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால், இரத்த அழுத்தம் குறைய செய்யும். காலையில் எழுந்த உடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலுறுப்புக்கள் சீராக செயல்பட ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.
மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் தண்ணீரும் வேண்டும் என்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு மிகவும் சிரமப்படும் பாலைவன பகுதி மக்களின் வசதிக்காக காற்றிலிருந்து தண்ணீரை தயாரிக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்திருந்தனர். தற்போது உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு, சோலெய்ன் என்ற புதுமையான புரத மாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் தொழில்நுட்பத்தை பின்பற்றி இந்த சாதனையை சோலார் புட்ஸ் செய்துள்ளது .வழக்கமான தானிய மாவுகளில் இருக்கும் அதே சுவையும், புரதம், கார்போ ஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பு ஆகியவை சோலார் புட்ஸ் நிறுவனத்தின் காற்று மாசிலிருந்து தயாரிக்கும் சோலெய்ன் புரத்ததிலும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு. ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், சோலெய்னுக்கு வெறும், 10 லிட்டர் தண்ணீரே போதும். இதனால், பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சோலெய்ன் புரத மாவை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-11-2025
13 Nov 2025 -
புதுக்கோட்டையில் அருகே திடீரென சாலையில் இறங்கிய விமானத்தால் திடீர் பரபரப்பு
13 Nov 2025புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் விமானம் ஒன்று சாலையில் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
நெல்லையில் வருகிற 21-ம் தேதி கடலம்மா மாநாடு: சீமான் தகவல்
13 Nov 2025நெல்லை, நெல்லையில் வருகிற 21-ந்தேதி கடலம்மா மாநாடு நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை பெற உதவுங்கள்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
13 Nov 2025சென்னை: போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது, மகளிர் உரிமை தொகை பெற தி.மு.க.
-
ஒரு பவுன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு
13 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்று 2-வது முறை உயர்ந்து விற்பனையானது.
-
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
13 Nov 2025புதுடெல்லி, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
13 Nov 2025புதுடெல்லி: கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லியில் தடையிறக்கப்பட்டது.
-
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க்: அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா..? தமிழக அரசு விளக்கம்
13 Nov 2025சென்னை, ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;
-
மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
13 Nov 2025சென்னை, மேகதாது அணை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வந்தே மாதரம் பாட மறுத்த அரசு ஆசிரியர் சஸ்பெண்ட்
13 Nov 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
பீகாரில் 243 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை
13 Nov 2025பாட்னா, பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 243 தொகுதிகளில் பதிவான வாக்குக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.
-
முக்கிய மசோதாவில் கையெழுத்திடார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..! 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது
13 Nov 2025வாஷிங்டன்: மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டால
-
அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: காஷ்மீர் முதல்வர்
13 Nov 2025ஸ்ரீநகர்: அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு
13 Nov 2025சென்னை: மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
-
உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடம்
13 Nov 2025பெலெம்: உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்பு
13 Nov 2025சென்னை, அடுத்தடுத்து 3 உருவாகும் 3 புயல் சின்னங்களால் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ரவி ஒப்புதல்
13 Nov 2025சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட மருந்து தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
13 Nov 2025காந்தி நகர்: மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
ஹால்டிக்கெட்எடுப்பதில் சிரமம்: தேர்வு எழுதுபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு
13 Nov 2025சென்னை: ஹால்டிக்கெட் எடுப்பதில் தேர்வர்கள் சிரமத்தை பொக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையிட வேண்டும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Nov 2025சென்னை : தமிழகத்தின் மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்தான்: அமெரிக்கா கருத்து
13 Nov 2025வாஷிங்டன்: டெல்லியில் தெளிவான பயங்கரவாத தாக்குதல் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ கருத்து தெரிவித்துள்ளார்.
-
பிரான்ஸ் முன்னாள் அதிபர் விடுதலை
13 Nov 2025பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
-
தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி
13 Nov 2025லிமா: தென் அமெரிக்கா பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.


