முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நிலவின் வயது 451 கோடி ஆண்டுகள்

சுமார் 451 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலா உருவானது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம், அப்பல்லோ 14 விண்கலம் மூலம் மனிதர்களை முதன் முறையாக சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரன் எப்போது உருவானது, அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன்படி, சந்திரனில் உள்ள தாதுக்கள் மற்றும் கனிமத்தை வைத்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சந்திரன் 451 ஆண்டுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பல உயிர்கள் வாழும் பூமியின் வயது 4500 கோடி ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

'அர்சிட்' விண்கற்கள்

இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு விண்கற்கள் பொழிவு நிகழும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அர்சிட் எனப்படும் விண்கற்கள் இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் இருண்ட வானில் தீப்பந்துகள் போல காட்சியளிக்குமாம்.இதனை தொலைநோக்கி இல்லாது வெறும் கண்ணால் கூட பார்க்கலாம். அர்சிட் விண்கற்கள் 1790 ஆம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 20-30 நிமிடங்கள் வானில் பிரகாசமாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மக்களும் வருடத்தின் இறுதியில் இந்த விண்கற்கள் பொழிவினை காண முடியும்.

சங்கடத்தில் பேஸ்புக்

சட்டத்திற்கு எதிராக மற்றொரு நிறுவனத்தின் விஆர் (விர்சுவல் ரியாலிட்டி)எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 கோடி டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருகும் ஆதரவு

குறைந்த இணைய வேகமான 2ஜியைப் பயன்படுத்துவோர் ஃபேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த தொடங்கப்பட்டதுதான்  ஃபேஸ்புக் லைட். 50க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படும் இது, இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள்.

கூகுள் வளாகத்தில் ஆடுகள் சுற்றித் திரிவது உங்களுக்கு தெரியுமா?

உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் ஜாம்பாவான் கூகுள் நிறுவனம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உலகில் உள்ள அனைத்து தேடுபொறிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு இன்று முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் வளாகத்தில் 200 ஆடுகள் சுற்றி திரிய விடப்படுகின்றன என்று சொன்னால் நம்புவதற்கு ஆச்சரியமாக உள்ளதா.. ஆனால் அதுதான் உண்மை.  வாரத்துக்கு ஒரு முறை வளாகத்தில் வளர்ந்துள்ள புற்களை தின்பதற்காக 200 ஆடுகளை வாடகைக்கு பிடித்து திரிய விடப்படுகிறது. இதற்கு என்ன காரணம், புல்வெட்டும் இயந்திரம் மற்றும் அதற்கான செலவும் இதுவும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் ஆடுகளுக்காவது புற்கள் பயன்படட்டுமே என்றுதான் கூகுள் வளாகத்தில் ஆடுகள் திரிய விடப்படுகின்றன. 

உலகிலேயே மிகவும் பெரிய விலங்கு எது தெரியுமா?

உலகிலேயே மிகவும் பெரிய விலங்கு நீல திமிங்கலம். பூமியில் வாழும் விலங்குகளில் இவைதான் மிகப் பெரியது என கணக்கிடப்பட்டுள்ளது. 1909 இல் பிடிபட்ட  பெண் நீல திமிங்கலம் ஒன்றில் நீளம் 100 அடி 17 அங்குலம். அதே போல 1947 இல் வேட்டையாடப்பட்ட மற்றொரு நீல பெண் திமிங்கலத்தின் எடை 190 டன் அதாவது 189,999.865 கிலோ. அதாவது 2500 மனிதர்களுக்கு இணையான எடை என்றால் அதன் பிரமாண்டத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago