முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டிஜிட்டல் மாத்திரை

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த மாத்திரை பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை, பயணிகளின் தூக்கம் முறை, உடலின் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளமுடிகிறது.

முறையான பயிற்சி

தொடை பகுதியை வலிமையாக்கும் பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைப்படும். பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும். தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும்.

கொடிய விஷமான சயனைடே உயிர்கள் உருவாக காரணமாம்

உயிரை எடுக்க கூடிய சயனைடே உயிர்கள் உருவாக காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.  புதிய ஆராய்ச்சியில் ,  கொடிய சயனைடு  கலவை, உண்மையில், பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது. விஞ்ஞானிகள் சயனைடைப் பயன்படுத்தி ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்கியுள்ளனர்,சயனைடு நான்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்கத் உதவியது என கண்டறிந்து உள்ளனர். சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரோஜன் அணுக்களால் உருவானது. இதன் அறிவியல் பெயர் சிஎச் (CH). இதை உட்கொண்டால் உடனே மரணம் தான். பிழைத்தாலும் வாழ்நாள் எல்லாம் நரம்பு சம்பந்த பட்ட நோய்களால் அவதி பட நேரிடும். இதுகுறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம், மேலும் வேற்றுகிரகவாசிகளை கண்டறிய நமக்கு  உதவலாம்' என்று கூறி உள்ளனர். ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் ராமநாராயணன் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கிரகங்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும்போது - நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம். இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.

கோமோடோ டிராகன் எனப்படும் பல்லிகள்

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னெஸ்ஸி என்ற இடத்தில் உள்ள மிருககாட்சி சாலையில் கோமோடோ டிராகன் எனப்படும் ராட்சத பல்லி இன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் பெண் பல்லிகள் ஆண் துணை இல்லாமலேயே தானே கருவுற்று குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் மிகவும் அரிதாகவே இவை நடந்ததாக சொல்லப்படுகிறது. 

முதன் முதலில் விமானத்தை கண்டு பிடித்தவர் இந்தியரா- ஆச்சரிய தகவல்

உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள்தான் என்று. அவர்களது முதலாவது வான் பயணம் 1903இல் அமெரிக்காவிலுள்ள கிட்டி ஹாக் என்னுமிடத்தில் நடைபெற்றது. ஆனால் யாருக்கும் தெரியாது அவருக்கு முன்பே 1895 லேயே இந்தியர் ஒருவர் விமானத்தை கண்டு பிடித்து, அதை பறக்கவும் விட்டுள்ளார். ஆனால் அங்கீகாரம் பெறாத அந்த மேதையின் பெயர் ஷிவ்கார் பாபுஜி தல்படே. மும்பையில் 1864 இல் பிறந்த அவர், அப்போதே சமஸ்கிருத இலக்கியங்களில் வித்தகராக விளங்கினார். அவர் ஆள் இல்லாத விமானத்தை மும்பையில் உள்ள சவ்பாத்தி பீச்சில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார். சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள விமானங்கள் குறித்து பண்டைய சாஸ்திரங்களை கற்று அதே போன்ற ஒரு விமானத்தை இவர் உருவாக்கியுள்ளார். மூங்கில் வடிவிலான அது பாதரசம் அல்லது யூரியா மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பரோடா மன்னர் சகஜியா கெய்க்வாட், மகாதேவ் கோவிந்த ஆரோன் ராய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரது விமானம் சுமார் 1500 அடி வரை பறந்து சென்று சிறிது நேரத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனால் அவரது முயற்சிக்கு அப்போதைய ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. பாதரசத்தை வைத்து வெடி பொருள் தயாரித்ததாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் விடுதலை ஆகி வெளியில் வந்த போது ரைட் சகோதரர்களின் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.

மறதி நோய் நல்லது

தற்போது அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருந்து மூலம் பல் சம்பத்தப்பட்ட பிரச்னைகளை குணமாக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து மூலம் பற்களை புதிதாக முளைக்க செய்ய இயலும் என்றும் பற்களுக்கு இடையே உள்ள துவாரங்களை சரி செய்ய முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பற்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இந்த மருந்து மூலம் சிகிச்சை அளித்தால் ஆறு மாதங்களில் பற்சிதைவு சரியாகி பற்கள் முன்பு இருந்தது போல் மாறிவிடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago