ஒவ்வொரு நாட்டு கரன்சிக்கும் அதாவது பணத்துக்கும் ஓர் பெயர் உண்டு. ஆனால் மழையின் பெயரையே கரன்சிக்கு சூட்டிய நாடு எது தெரியுமா... சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள நாடான போஸ்துவானா தான் அது. அந்நாட்டு கரன்சியின் பெயர் போஸ்துவானன் புலா. அவர்கள் மொழியில் புலா என்றால் மழை. அவர்களின் அடிப்படையான அனைத்து கரன்சிகளிலும் இந்த புலா அதாவது மழை என்ற பெயர் இடம் பெற்றிருக்கும் என்பது ஆச்சரியம் தானே..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஜப்பானின் பேனாஸோனிக் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ள புதிய மெகாபோன், பேசும் குரலை ஆங்கிலம், சீனம், கொரியா என பல மொழிகளில் இன்ஸ்டன்டாக மொழிபெயர்க்கிறது. 10 ஆயிரம் மெகாபோன்களை முதல்கட்டமாக தயாரித்துள்ள பேனாஸோனிக் நிறுவனம், அதனை 2018 ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ‘படிகளை கவனியுங்கள்’, ‘ரயில் தாமதமாக வருகிறது’ உள்ளிட்ட 300 ப்ரீசெட் வார்த்தைகளை துல்லியமாக 3 மொழிகளில் ஆட்டோமேடிக்காக மொழிபெயர்க்கும் திறன் கொண்டது இந்த மெகாபோன்.
கடல் நீர் என்றாலே உப்பு கரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விஞ்ஞானிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை நன்றாக அறிவர். கடலின் உப்பு அளவை பிபிடி என குறிப்பிடுகின்றனர். அதாவது ஆயிரம் கிராம் நீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு இது. தோராயமாக கடலில் சுமார் 1 லிட்டர் நீரில் 7 ஸ்பூன் அளவுக்கு அதாவது 34 பிபிடி முதல் 37 பிபிடி வரை உப்பு இருக்கும். உப்பின் காரணமாகவே கடல் நீர் நன்னீரை காட்டிலும் அடர்த்தியாக உள்ளது. அதே நேரத்தில் உப்புசுவை குறைவாக உள்ள கடலும் உலகில் உள்ளன. அதில் அண்டார்டிகா பகுதியில் உள்ள கடலின் மேல்மட்டத்தில் 34 பிபிடி அளவுக்கு காணப்படும். அதே நேரத்தில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடலில் 30 பிபிடி அளவுக்கே உப்பு கரிக்கும். இதற்கு இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கரைந்து கடலில் கலப்பதும், ஏராளமான நன்னீர் நதிகள் மற்றும் மழை நீர் கடலில் கலந்து அதன் உப்பு சுவையை குறையச் செய்கின்றன. ஆனால் முதல் இடம் ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதியில் உள்ள பால்டிக் கடலுக்குத்தான். அதன் உப்பின் அளவு வெறும் 10 பிபிடி அளவுதான். இதற்கு காரணம் இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நன்னீர் நதிகள் இங்கு வந்து கலக்கின்றன. அதிக உப்புகரிப்பு சுவை உள்ள கடல் சொல்லவே வேண்டாம் மத்திய தரைக்கடல்தான். அதன் உப்பின் அளவு 38 பிபிடி. இங்கு கடலில் கலக்கும் நன்னீர் மற்றும் மழை நீரின் அளவை காட்டிலும் ஆவியாகும் நீரின் அளவு மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் எப்போதும் ஆச்சரியம் மிக்கவையே. அதிலும் நாம் உண்ணும் உணவுப் பொருள்களின் பல்வேறு அறிவியல் அதிசயங்களை தெரியாமலேயே நாம் அவற்றை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் நீங்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் வாழைப்பழங்கள். அதில் என்ன அதிசயம் என்கிறீர்களா.. வாழைப்பழங்களுக்கு கதிர்வீசும் தன்மை கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அதன் அளவு மிகமிகமிக குறைவுதான். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரே சமயத்தில் உங்களால் 10 மில்லியன் வாழைப்பழங்களை சாப்பிட முடிந்தால் மட்டுமே அதன் கதிர்வீச்சு உங்களை பாதிக்கும் என்கிறார் மெக்ஹில் பல்கலை கழக ஆய்வாளர் ஜோ ஸ்வார்க்ஸ்.
நச்சு அம்புத் தவளைகள் (Poison dart frog) இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். எதிரி விலங்குகளை தாக்கும் ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய விஷத்தினை தன் முதுகுப்பகுதியில் சுரக்குமாம். இது எதிரிகளை எச்சரிக்கை விடுத்துத் தாக்க பயன்படும் ஒரு கருவி. தவளை சுரக்கும் கொடிய விஷம் கிட்டத்தட்ட 10 மனிதர்களைக் கொல்லக்கூடியதாம். மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் இந்த தவளைகள் நச்சு அம்பு தவளைகள் என அழைக்கப்படுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மேல் தோலில் அம்புகளை தடவி வேட்டையாட உபயோகித்தனர். இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். இந்த நிறம் ஒரு எச்சரிக்கை அடையாளம். மேல் தோலில் உள்ள விஷம் 20,000 எலிகளையும், 10 மனிதர்களையும் கொள்ள கூடியது. அழகென்றாலே ஆபத்து என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இந்த நச்சு அம்பு தவளைகள் தாம்.
நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது
10 Nov 2025சென்னை, தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
-
புதுக்கோட்டைக்கு 6 புதிய அறிவிப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Nov 2025புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.767 கோடியில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வீர கொண்டான் ஏரி ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
10 Nov 2025சென்னை, வார தொடக்கமான நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளில் இறுதி தேர்தல்
10 Nov 2025பாட்னா, பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. களத்தில் 1,302 வேட்பாளர்கள் உள்ளனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 Nov 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய
-
டி.ஜி.பி. நியமனத்தில் ஏன் குளறுபடி..? தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
10 Nov 2025கோவை, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் உரிய வழிமுறைகளை தி.மு.க. அரசு பின்பற்றவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாட பழனிசாமி டி.ஜி.பி.
-
அசைவ உணவு சாப்பிட்ட 2 ஊழியர்கள் பணிநீக்கம்: திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை
10 Nov 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 2 ஒப்பந்த ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
நெல்லை, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
10 Nov 2025சென்னை, தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவ. 23, 24-ல் ஆலோசனை
10 Nov 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் வருகிற நவ.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
10 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
-
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: நடத்தை விதிமுறைகள் அமல்
10 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு வாக்காளரும் மிக கவனமாக இருக்க வேண்டும்: புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
10 Nov 2025புதுக்கோட்டை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.
-
எஸ்.ஐ.ஆர். போன்ற புது யுக்திகளை கையாண்டாலும் தி.மு.க. இயக்கத்தை யாராலும், ஒருபோதும் அழிக்க முடியாது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
10 Nov 2025திருச்சி, எஸ்.ஐ.ஆர். போன்ற புது யுக்திகளை கையாண்டாலும் தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது என்று திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
திருச்சி காவலர் குடியிருப்பு வளாகத்தில் இளைஞர் கொடூர கொலை; 5 பேர் கைது
10 Nov 2025திருச்சி, திருச்சி பீமநகரில் காவலர் குடியிருப்பில் இளைஞர் தாமரைச்செல்வன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் தொடர்புடைய
-
சபரிமலைக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே
10 Nov 2025சென்னை, சபரிமலைக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் திராவிட மாடல் 2.0 அரசிலும் தொடரும்: புதுக்கோட்டை அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி
10 Nov 2025புதுக்கோட்டை, தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்றும், தமிழ்நாட்டு மகளிர் முன்னேறி வருவதற்கு துணையாக இருக்கும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தம
-
எத்தனை முனை போட்டி வந்தாலும் கவலை இல்லை: தமிழகத்தில் 7-வது முறை தி.மு.க. ஆட்சி அமைக்கும் : புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
10 Nov 2025புதுக்கோட்டை, எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க.
-
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் போய்விடும்: தேஜஸ்வி யாதவ்
10 Nov 2025பாட்னா, கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பா.ஜ.க.வில் சேர்ந்தால் போய்விடும் என்று தேஜஸ்வி யாதவ் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
-
மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூத்த குடிமக்களுக்கான 25 அன்புச்சோலை மையங்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்
10 Nov 2025சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூத்த குடிமக்களுக்கான 25 அன்புச்சோலை மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
-
மாலியில் கடத்தப்பட்ட தமிழர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும்: வெளியுறவு துறைக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை
10 Nov 2025சென்னை, மாலியில் கடத்தப்பட்டிருக்கும் 5 தமிழக தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்
-
நடிகர் அபினய் காலமானார்
10 Nov 2025சென்னை, நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கம் அளித்த மின்வாரிய அதிகாரிகள்
10 Nov 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொட்பாக மின்வாரிய அதிகாரிகள் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.
-
மலேசியா அருகே கடலில் படகு மூழ்கி 7 பேர் பலி - பலர் மாயம்
10 Nov 2025மலேசியா, மலேசியா அருகே கடலில் படகு மூழ்கி 7 அகதிகள் உயிரிழந்ததை முன்னிட்டு பலர் மாயமாகி உள்ளனர்.
-
அதிக வருமானம் ஈட்டுவோருக்கு கிடையாது: அமெரிக்கர்களுக்கு 2,000 டாலர்கள் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவிப்பு
10 Nov 2025வாஷிங்டன், அமெரிக்கர்களுக்கு 2 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
சென்னை ஐ.பி.எல். அணியில் இருந்து வெளியேறும் ஜடேஜா, பதிரனா...!
10 Nov 2025சென்னை, சஞ்சு சாம்சனை விட்டுக்கொடுக்க ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


