முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே குறைவான மழை பொழியும் இடம் எது?

உலகிலேயே மிகவும் குறைவாக மழை பொழியும் இடம் பாலைவனம் என நீங்கள் கருதினால் அது தவறு.. உண்மையில் மழை குறைவாக பெய்யும் இடம் துருவ பிரதேசமான அண்டார்டிகாவில் தான் மழை பொழிவு குறைவு. அங்கு ஆண்டுக்கு 6.5 அங்குலம் மட்டுமே மழை அல்லது பனி பொழிகிறது. அதே நேரத்தில் கொலம்பியாவில் உள்ள லோரோ என்ற இடத்தில் ஆண்டுக்கு 500 அங்குலத்துக்கும் அதிகமாக மழை பொழிகிறது.

விலை ரூ.65 லட்சம்

அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பிவர்லி ஹில்ஸ் 90எச்20 என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சம். இந்த பாட்டிலில் நிரப்பப்படும் தண்ணீர் தெற்கு கலிபோர்னியானியாவின் மலையின் 5000 அடி உயரத்திலிருந்து எடுக்கப்படுகிறதாம். இந்த தண்ணீர்தான் உலகின் சுத்தமான நீராக கருதப்படுகிறது. இந்த தண்ணீர் அதிக சுவையானதாகவும், மென்மையானதாகவும், நம்பமுடியாத அளவு மிருதுவானதாகவும் உள்ளது.  மேலும், இந்த குடிநீர் பாட்டிலின் மூடியில் 600 சிறிய வெள்ளை நிற வைர கற்கள் மற்றும் 250 கருப்பு வைர கற்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் இதோடு மலையிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவருடத்துக்கான தண்ணீரும் இந்த  பாட்டிலை வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறதாம்.

நீருக்குள் மூழ்கும் நகரம் எது தெரியுமா?

மெக்சிகோ நகரம் கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு பேர் போனது. தற்போது புவியியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. 1325 ஆம் ஒரு ஏரியின் மீது இந்த நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துரதிருஷ்டம் ஆண்டு தோறும் சுமார் 3.2 அடிகள் வரை இந்த நகரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஆஸ்டெக் ஆட்சியாளர்கள் ஒரு செயற்கை தீவை உருவாக்கினர். மேலும் 1521 இல் நகரம் தகர்க்கப்பட்ட போது இடிபாடுகளின் மீது ஸ்பானியர்கள் புதிய மெக்சிகோவை நிர்மாணித்தனர். ஆனால் நகர வாசிகள் தரைக்கு கீழே இருக்கும் நீரைத்தான் நம்பி இருப்பதால் கடந்த 60 ஆண்டுகளில் நீர் 32 அடிக்கும் கீழே சென்று விட்டது. இல்லாவிட்டால் நகரம் ஏரிக்குள் ஸ்வாகா ஆகியிருக்கும்.

காரில் செல்லும் போது தும்மினால் 50 அடி தொலைவுக்கு கண்கள் மூடி கொள்ளும்

பொதுவாக நாம் தும்மும்போது கண்களை மூடிக் கொள்வது வழக்கம். கண்களை திறந்து கொண்டு ஒரு போதும் தும்ம இயலாது என்பது உங்களுக்கு தெரியுமா... அப்படி ஏதும் விபரீதத்தில் ஈடுபடாதீர்கள்... கண்களை திறந்து வைத்து தும்மினால் விழி வெளியே பிதுங்கி விடும். அதே நேரத்தில் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் பயணிக்கும் போது நீங்கள் தும்மினால் அப்போதும் கண்களை மூடிக் கொள்வீர்கள். ஆனால் எவ்வளவு தொலைவுக்கு தெரியுமா... 50 அடி தொலைவுக்கு. கடந்த 2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வாகனஓட்டிகள் தும்மும்போது அவர்களுக்கு தற்காலிகமாக பார்வை இழப்பு ஏற்படுகிறது. இதனால் இங்கிலாந்தில் மட்டும் வாரத்துக்கு 2500க்கும் அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தனிநபரின் பெயர்

அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் 1499-ல் அமெரிக்காவை அடைந்தவர். இவர், அமெரிக்கா ஆசியாவை சேர்ந்த பகுதி அல்ல, அது ஒரு தனி கண்டம் என்பதை கண்டறிந்தார். 1507-ல் ஜெர்மனியை சேர்ந்த மார்டின் என்பவர் உலக வரைப்படத்தில் அமெரிக்காவை சேர்த்த போது வெஸ்புகியின் முன் பெயரான அமெரிக்கோ என்பதையே அமெரிக்கா என பெயர் வைத்தார்.

டச் ஸ்கிரீன் எப்படி வந்தது?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இ.ஏ. ஜான்சன் என்பவர் தான், தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு முன்னோடி என்று கூறலாம். 1967 வரை ராயல் ரேடார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வேலையை விட்டு நின்ற பிறகு, 1968ல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் தொடர்பாக அறிவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில்தான், முதன்முதலாக தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. முதன்முதலாக தொடுதிரையை செயல்வழியில் வெளி உலகுக்குக் காண்பித்தவர், சாம் ஹர்ஸ்ட் என்பவர்.அமெரிக்காவில் உள்ள கென்ட்யூக்கி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் ஹர்ஸ்ட். 1971ல், இவர் உருவாக்கிய முதல் தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு ‘எலோகிராஃப்’ (Elograph -– Electrical and Optoelectronic Graphene Devices) என்று பெயரிடப்பட்டது. இந்த எலோகிராஃப் (Elograph)தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை கென்ட்யூக்கி பல்கலைக்கழகம் பெற்றது. பின்னர் வேலையை விட்டுவிட்டு, எலோகிராஃபிக்ஸ் என்று தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கினார் சாம் ஹர்ஸ்ட். 1974ல், ஒளிபுகும் தொடுதிரையை பேராசிரியர் சாம் ஹர்ஸ்ட் உருவாக்கினார். சீமன்ஸ் நிறுவனத்தின் நிதியுதவிடன்தடை மின்னோட்ட தொடுதிரை தொழில்நுட்பத்தை ( resistive touch screen technology) உருவாக்கி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். வளைவான கண்ணாடியாக இருந்த கருவிக்கு, எலோகிராஃபிக்ஸ் நிறுவனம் ‘டச் ஸ்கிரீன்’ என்று பெயரிட்டு அழைத்தது. அப்படிப் பிறந்ததுதான், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago