முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மிகவும் சிறியது

போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் எனும் புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 2.4 அங்குல திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 இயங்குதளத்தில் செயல்படும். கைக்கு அடக்கமாக உள்ள இதில் 650எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்ப்புறகேமரா, 2 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.

ஆண்டுதோறும் 7.5 செமீ நகரும் ஹவாய் தீவுகள்

புவியியல் படித்தவர்களுக்கும், கொஞ்சம் பொது அறிவு படைத்தவர்களுக்கும் இந்த கண்டங்கள் எவ்வாறு உருவாகின என தெரிந்திருக்கும். அவை மெல்ல மெல்ல நகர்ந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும், ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தும் கண்டங்களும் தீவுகளும் உருவாகின. உருவாகி வருகின்றன. இது புவியியலின் இயற்கை. இதில் பசிபிக் கண்டத்திட்டில் அமைந்துள்ள ஹவாய் தீவுகள் ஆண்டுதோறும் நகர்ந்து வருகின்றன. அவை வடமேற்காக நகர்ந்து அமெரிக்க கண்டத்திட்டில் அமைந்துள்ள அலாஸ்காவை நோக்கி நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆண்டு தோறும் சுமார் 7.5 செமீ தூரம் நெருங்கி வருவதும் தெரியவந்துள்ளது. கண்டங்கள் பிரிவதும், இணைவதும் பல லட்ச ஆண்டுகள் செயல்பாடு என்றாலும் நகர்வது என்பது ஆச்சரியம் தானே..

இந்தியர்களின் உடலில் சர்க்கரை நோயை அதிகரிக்க செய்யும் மரபணு

15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீன்/புரத வகை சர்க்கரை நோய் (நீரிழிவு), மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டை 1.5 மடங்கு அதிகரிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பயனாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட சாத்தியம் உள்ளவர்களை உண்மையில் அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம். இந்த மரபணு அமைப்பு குறிப்பிட்ட நபர்களின் உடலில் ஆயுள் முழுவதும் மாறாமல் இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதய, ரத்தக்குழாய், வளர்சிதை நோய்கள் ஏற்படும் குடும்ப வரலாறு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை உடல் நல நடவடிக்கை எடுப்பதற்கும், நோயை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்

சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்நிலைகள் அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்தை பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) பால் போல வடிய செய்யும்.இதைத்தான் வேப்ப மரத்தில் பால் வடிகிறது என்கின்றனர். மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும். இப்படி பால்வடிகின்ற மரங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும். அதனால்தான் எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லை, வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெள்ளை காண்டா மிருகத்துக்கு ஆயுத பாதுகாப்பு

உலகின் கடைசி வெள்ளை ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகங்களில் ஒன்றுக்கு, இனப்பெருக்க திட்டத்திலிருந்து விஞ்ஞானிகள் ஓய்வு கொடுத்துள்ளனர். இந்த இனம் அழிந்துவிடாமல் இருக்க, இந்த இனப்பெருக்கத் திட்டம் நடத்தப்பட்டது. வெள்ளை காண்டாமிருக இனத்தின் கடைசி ஆண் விலங்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இறந்து போனது.ஆனால் அதன் விந்தணு சேகரிக்கப்பட்டு, இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இறந்த இரு ஆண் காண்டாமிருகத்திலிருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள விந்தணு மற்றும் பெண் காண்டாமிருகத்தின் கருமுட்டையைப் பயன்படுத்தி செயற்கை முறையில் கருதரிக்கச் செய்கிறார்கள். வெள்ளை காண்டாமிருகங்கள் வேட்டை மற்றும் வாழ்விட இழப்பின் காரணமாக அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன.நாஜின் என்று பெயரிடப்பட்டுள்ள வெள்ளை பெண் காண்டாமிருகம் செக் நாட்டில் ஒரு வன விலங்கு பூங்காவில் பிறந்தது. பத்தாண்டு காலத்துக்குப் பிறகு கென்யாவில் உள்ள ஒல் பெஜெடா வன விலங்கு பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு அதற்கு பலத்த ஆயுத பாதுகாப்புக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் போனும் கையுமாக..

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், காலை தூங்கி எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்களில் ஸ்மார்ட் போனை தேடி எடுத்து விடுவதாக 61 சதவீதத்தினரும், முதல் அரை மணி நேரத்தில் ஸ்மார்ட்போனை எடுத்துவிடுவதாக 88 சதவீதத்தினரும், 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மொபைலை எடுத்துவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதேபோல், 74 சதவீதம் பேர், இரவு தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 53,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago