முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதல் உலகப் போரில் பஞ்சாபிய வீரர்கள்

 இந்த உலகம் நேரடியாக 2 உலகப் போர்களை கண்டுள்ளது. இனி நேரடியான உலகப் போர்கள் சாத்தியமில்லை என்ற கட்டத்துக்கு வரலாறு முட்டு சந்தில் வந்து நிற்கிறது. அதை மீறி நடந்தால், இந்த பூமி ஒரு பிடி சாம்பலாக மாறி பிரபஞ்சவெளியில் காணாமல் போய்விடும். ஆனாலும் உலக நாடுகள் ஒன்றையொன்று இன்னும் பிறாண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அது கிடக்கட்டும்.. முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வெளியில் தெரியாத ரகசியங்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் தி கார்டியன் வெளியிட்ட செய்தியில் முதலாம் உலகப் போர் தொடர்பான ஆவணங்ள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதில் பிரிட்டனுக்காக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றது தெரியவந்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் விரிந்து கிடக்கும் சீக்கிய பிராந்தியங்களிலிருந்து சிறிய குக்கிராமத்திலிருந்து கூட தன்னார்வலர்களாக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.  ஆனால் இந்த எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என போர் வரலாற்றாய்வாளர்கள் கணிக்கின்றனர். இது இன்னும் விரிவான ஆய்வுக்கும், ஆவணப்படுத்தலுக்குமான செய்தியாகும். இது மிகவும் ஆச்சரியம் தானே..

வெள்ளை சர்க்கரை என்ற சீனியை கண்டுபிடித்த நாடு எது தெரியுமா?

நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் சுவையான பொருள் வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனி. கரும்பு, பீட்ரூட், பனை போன்றவற்றிலிருந்து தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வெள்ளை நிறத்தில் கிடையாது. பழுப்பு நிறத்திலேயே வந்தது. அதை வெள்ளையாக மாற்றியது யார் தெரியுமா... இந்தியர்கள்தான். வெள்ளை சர்க்கரையாக பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்களை நமது இந்தியா தான் முதல் முதலில் உருவாக்கியுள்ளது. சர்க்கரை தயாரிக்கும் முறை இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் சீனா, பெர்சியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பரவி இறுதியில் 13 ஆம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சர்க்கரை ஒரு அரிய பொருளாகவும் மிகவும் விலையுயர்ந்த பொருளாகவும் கருதப்பட்டுள்ளது.

கழிவுகள் மின்சக்தியாக ...

நுண்ணுயிர் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை மின்சக்திக்கு மாற்றும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறைவான அளவு சிறுநீரில் ஸ்மார்ட்போன்கள் ஆறு மணி நேரம் சார்ஜ் ஆகும். ஆனால் இந்த முறை மூலமாக ஸ்மார்ட்போனுக்கு மூன்று மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியுமாம். இதற்காக நுண்ணுயிர் எரிபொருள் செல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாம் இயற்கையாக உற்பத்தி செய்யும் கழிவுகளை நுண்ணுயிரிகள் நேரடியாக மின்சாரமாக மாற்றுகிறது. அவை துணைப்பொருளாக எலக்ட்ரான்களை தயாரிக்கின்றன. எலக்ட்ரான்கள் உற்பத்தி ஆவதன் மூலம் மின்சாரம் உருவாகிறது. இந்த நுண்ணுயிரிகள் 30 முதல் 40 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இது ஸ்மார்ட்ஃபோன், சிறிய விளக்குகளை சார்ஜ் செய்ய போதுமானதாகும்" என்றார்.

பாஸ்போர்ட் என்ற சொல் எப்படி வந்தது

பாஸ்போர்ட் என்ற வார்த்தை பைபிளில் இருந்து உருவானதாக வரலாறு ஒன்று கூறுகிறது. ஆனால், கிறிஸ்துவுக்கு முன்பும் இந்த வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 450 பி.சி. காலத்தில் பெர்சியாவில் ஆட்சி செய்த மன்னர் ஒருவர், அவரது அரசவையில் பணியாற்றிய அதிகாரிகள், நாட்டின் எல்லையில் உள்ள ஆற்றைக் கடந்து செல்வதற்கு ஒரு அனுமதிச்சீட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம். இருப்பினும், 15ஆம் நூற்றாண்டில் தான் பாஸ்போர்ட் என்ற வார்த்தை உருவானதாக தெரிகிறது. அப்போது பாஸர் (வழிபோக்கர்) + போர்ட் (துறைமுகத்தை கடக்க இருப்பவர்) என்ற கூட்டுச் சொற்கள் சேர்ந்த பாஸ்போர்ட் என்றானதாம்.

இரும்பு மழை பெய்யும் கோள்

வாஸ்ப் – 76பி என்ற ஒரு புத்தம் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில்  இரும்பு மழை பெய்கிறது என்பதை விண்வெளி அறிஞர்கள் கண்டு வியந்திருக்கிறார்கள்.வாஸ்ப் 76பி என்று அறியப்படும் இந்த கோள், அதனுடைய நட்சத்திரத்தை சுற்றி வரும்போது, அதன் பகல் பகுதி வெப்பநிலை 2,400 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கிறது. இந்த வெப்பநிலை உலோகங்களை ஆவியாக்கும் ன்மை கொண்டது. இரவு நேரப் பகுதியில் இந்தக் கோளின் வெப்பநிலை 1400 டிகிரியாக குறைந்துவிடுகிறது. இந்த வெப்பநிலையில், பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பெய்கின்றன.ஜெனீவாவை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் டேவிட் ஹெரேயின்ச்  கூறுகையில்,  தண்ணீர் துளிகளுக்கு பதிலாக இரும்பு துளிகளின் சாரல் அடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்றார்.நேச்சர் என்ற சஞ்சிகையில் இந்த கோள் குறித்த கண்டுபிடிப்புகளை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பீட்சா எப்படி வந்தது

இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கும் பீட்சாவின் கதை தெரியுமா.. 1889ம் ஆண்டில், அப்போதைய இத்தாலி ராணியான மார்கரிட்டா மற்றும் ராஜாவான முதலாம் ராக் உம்பர்டோ ஆகியோர் நேப்பிள் பகுதியில் நகர்வலம் சென்றனர். அப்போது, அந்நகர ஏழைகள் விரும்பி சாப்பிட்டு வந்த தட்டை ரொட்டியை, ராணி சுவைத்து பார்த்தார். உடனே, தட்டை ரொட்டியின் ருசிக்கு மயங்கிய ராணி அதன் ரசிகையாகவே மாறிவிட்டார். உடனே தனது அரண்மனை சமையல்காரரை அழைத்து‘எனக்கு தட்டை ரொட்டியை தயார் செய்து தா’ என்று உத்தரவிட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த அரண்மனை சமையல்காரர் ரஃபேல் எஸ்போசிடா, தட்டை ரொட்டிக்கு புதிய பரிமாணம் அளித்தார். அதில், இத்தாலிய சிகப்பு தக்காளி, சீஸ், துளசி இலைகள் போன்றவற்றை ஒரு அளவான விகிதத்தில் சேர்த்து ராணியிடம் கொடுத்தார். அவர் தயாரித்த தட்டை ரொட்டியில், இத்தாலிய தேசிய கொடியின் வண்ணங்களான சிவப்பு (தக்காளி), வெள்ளை, பச்சை இருக்கும்படி பார்த்து கொண்டார். இன்று, நம்மிடையே பிரபலமாக உள்ள மார்கரிட்டா பீட்சா என்ற ரகம் தோன்றியது இப்படித்தான். பின்னர் 2 ஆம் உலகப் போரின் போது ராணுவ வீரர்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி பீட்சா பல்வேறு வடிவங்களை எடுத்தது என்பது நீண்ட வரலாறு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago