முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பல்துலக்க காகித கேப்ஸ்யூல்

பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..

சேலையை பெண்கள் மட்டும்தான் அணிய வேண்டுமா என்ன...

சேலையை பெண்கள் மட்டும் தான் அணிய வேண்டுமா என்ன, நாங்களும் கட்டி அசத்துவோம்ல என கிளம்பிவிட்டால் மேற்கு வங்க ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். புஷ்பக் சென் என்ற அந்த துடிப்பு மிக்க 26 வயது இளைஞர்தான் தற்போது கொல்கட்டா வீதிகளில் சென்சேஷன். ஆடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது, அது பார்ப்பவரின் தலையில்தான் இருக்கிறது என உறுதிபட சொல்கிறார். தலையில் உச்சி குடுமியும், அடர்ந்த தாடியும், கட்டுமஸ்தான உடலுமாக புஷ்பக் சென், கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் சேலை கட்டி கொல்கத்தா வீதிகளில் நடந்து செல்லும் போது அனைவரின் கண்களும் இவரையே மொய்க்கின்றன. இவர் இத்தோடு விட்டாரா வெளிநாடுகளுக்கு சென்று சேலைகளில் பேஷன் ஷோ, தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போட்டோ ஷூட் என அசத்தி வருகிறார். இவர் சேலையுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

கோடையில் 15 செமீ உயரம் வளரும் ஈபில் கோபுரம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் அமைந்திருக்கும் மிகப் பெரிய ஈபில் கோபுரம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். சுமார் 18 ஆயிரம் எஃகு துண்டுகளை 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று இணைத்து இந்த 324 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கோபுரத்ைத அமைத்தனர். இது உலக அதிசயங்களில் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கோடை காலத்தில் இந்த கோபுரம் 15 செமீ கூடுதலாக வளர்ந்து விடும் என்றால் ஆச்சரியம் தானே.. ஏன் என்கிறீர்களா, இது முழுக்க முழுக்க உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால், கோடை காலத்தில் எஃகு விரிவடைந்து ஒட்டுமொத்தமாக இதன் உயரமும் அதிகரித்து விடுகிறது. விரிவடையும் போது பாதிக்கப்படாத வகையில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

வைரத்தை முதன் முதலாக வெட்டி எடுத்து உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

 இன்றைக்கு உலகிலயே அதிக விலையுள்ள ஆபரணம் எது என்று கேட்டால் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள்.. அது வைரம்தான். அது சரி இந்த வைரம் எங்கிருந்து எப்போது முதன் முதலாக வெட்டி எடுக்கப்பட்டது தெரியுமா.. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தான் வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. தொடக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள குண்டூர் டெல்டா பகுதிகளில்தான் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் பிரேசிலில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்படும் வரை உலகின் வைர சந்தையில் இந்தியாதான் நம்பர் ஒன். இந்தியாவிலிருந்து அந்நிய படையெடுப்புகளால் கொள்ளை போன் முக்கிய தொல் பொருள்களில் விலையுயர்ந்த வைரங்களும் அடக்கம். இது மிகவும் ஆச்சரியமான ஒன்று தானே

சூடான பாலை குடித்தால் இரவில் நன்றாக தூக்கம் வருவது ஏன்?

இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நன்றாக தூக்கம் வருவது ஏன் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம் நாடுகளில் நீண்ட காலமாகவே இரவு உறக்கத்துக்கு முன்பு சூடாக ஒரு டம்பளர் பால் குடிப்பது வழக்கம். தற்போது மேலை நாடுகளிலும் இரவில் நன்றாக உறங்க பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகின்றனர். பாலில் தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகளை பொதுவாக டிரிப்டோபன் என குறிப்பிடுகின்றனர். அண்மையில் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்  கேசீன் ட்ரிப்டிக் ஹைட்ரோலைசேட் (சிடிஎச்) எனப்படும் பெப்டைட்டுகளின் கலவையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கு அளிக்கப்படும் பென்சோடியாசெபைன்கள், சோல்பிடெம் போன்றவை கடுமையான பக்க விளைவை ஏற்படுத்துபவன. ஆனால் பசுவின் பாலில் கிடைக்கும் கேசீன் எனப்படும் புரதம் செரிமானத்தை மேம்படுத்தி சிடிஎச் எனப்படும் தூக்கத்தை மேம்படுத்தும் பெப்டைட்களின் கலவையை கொண்டிருப்பதால் இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கக் கூடியது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago