முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பால் ஏன் வெள்ளையாக உள்ளது?

பால் 87 சதவீதம் நிறமற்ற நீரைக் கொண்டிருந்தாலும் வெள்ளை நிறத்தில்தான் காணப்படுகிறது. இது ஏன் தெரியுமா.. பாலில் புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாலில் உள்ள புரதங்களின் முக்கிய வகைகளில் ஒன்று கேசின்கள் ஆகும். அவை கால்சியம் மற்றும் பாஸ்பேட்டுடன் சிறிய கொத்தாக சேர்ந்து மைக்கேல்ஸ் எனப்படும் சிறிய துகள்களை உருவாக்குகின்றன. இந்த சிறிய துகள்களைத ஒளி தாக்கும்போது அது ஒளி விலகல் ஏற்பட்டு அதை சிதறச் செய்கிறது. பால் அனைத்து ஒளி அலைநீளங்களையும் பிரதிபலிக்கிறது. எதையும் உறிஞ்சாது. இதனால் பால் வெள்ளை நிறமாக தோன்றுகிறது. எல்லா பாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் காரணமாக பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் காரணமாக சில வேளைகளில் மஞ்சள் நிறத்தையும் பிரதிபலிக்கும்.

மாறும் வாழ்க்கை

இந்தியர்கள் தங்களது வாழ்க்கை துணையை விட ஸ்மார்ட்போன் தான் முக்கியம் என ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். ஆய்வில் கலந்து கொண்ட 60 சதவிகிதம் பேர் இதை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு ஒருவரின் இணைய பயன்பாடு அவரது உறவு, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் எவ்வாறு பாதிக்கிறது என்பதை கண்டறிய நடத்தப்பட்டது.

பட்டினி கிடந்தாலும் இளைக்காது

மீன்களில் அதிக கேட்கும் திறன் கொண்டது சுறா மீன்கள். சுறா இனங்களில் மொத்தம் 440 வகை இருக்கின்றன. அவற்றில் 30 வகையான சுறாக்கள் தான் மனிதர்களை தாக்கும் வல்லமை கொண்டவை. சுறாக்களின் வகைகளுக்கு ஏற்ப வளர்ச்சியிலும் சில சில மாறுபாடுகளை கொண்டிருக்கும். சில சுறாக்கள் 15 மீட்டர் நீளம் வளரும். சில சுறாக்கள் 12 மீட்டர் நீளம் வளரும். பொதுவாக சுறாக்கள் அனைத்தும் நான்கு வரிசை பற்களை கொண்டது. ஒரு பல் விழுந்தாலும் ஏழு எட்டு நாட்களில் மீண்டும் அதே இடத்தில் பல் முளைத்துவிடும். சுறாக்களுக்கு கூர்மையான பார்வைத் திறன் இல்லை என்றாலும் மந்தமான வெளிச்சத்தில் பார்வை திறன் கொண்டது. இவை 100 குட்டிகள் கூட போடும். குட்டி சுறாக்கள் பிறந்தது முதல்தானே இரை தேடிக்கொள்ளும். சுறாக்கள் மாதக்கணக்கில் பட்டினி இருந்தால் கூட அவை உடல் இளைத்து போகாத வண்ணம் அதன் உடம்பில் இருக்கும் கொழுப்பு எண்ணெய் அவற்றை பாதுகாக்கும். அழிந்த வரும் உயிரினங்கள் பட்டியலில் சுறாக்களும் இருப்பதால் அவற்றை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரேக்கர்களால் கட்டப்பட்ட ஆப்கன் நகரம்

கான்ஸ்டிநோபில் என்ற நகரம் எது தெரியுமா.. இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் நவீன நகரமாக அறிப்படும் இஸ்தான்புல்தான் அது. இந்த இஸ்தான்புல் பல்வேறு சிக்கலான வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கிமு 657 இல் இந்த நகரம் கிரேக்கர்களால் நிறுவப்பட்டது. அப்போது அது பைசான்டியம் என அழைக்கப்பட்டது. பின்னர் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு ரோமானிய பேரரசன் கான்ஸ்டன்டைன் தனது பேரரசின் தலைநகராக இதை மாற்றினான். அதன் பின்னர் அது ஐரோப்பாவின் முக்கிய நகராக மாறியது. அவர் இறந்த பிறகு அந்த நகருக்கு கான்ஸ்டான்டி நோபில் என பெயரிடப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் அந்த நகரம் இஸ்தான்புல் என அழைக்கப்படும் வரை அது அந்த பெயராலேயே விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...

நாசாவின் ரோவரை தரையிறங்க செய்த இந்திய பெண் சுவாதி

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது குறித்து ஆராய நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கிருந்து தண்ணீரின் வழித்தடங்களை படமெடுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. அதெல்லாம் சரி.. அதை விட முக்கியம் அதை தரையிறங்க செய்த குழுவின் தலைவர் யார் தெரியுமா.. சுவாதி மோகன் என்ற இளம் பெண். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது பெற்றொர் பெங்களுரைச் சேர்ந்தவர்கள்.சிறு வயதிலேயே பெற்றோர் அவரது அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது. நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான். அங்கு படிப்படியாக விரைவாக முன்னேறி பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு வந்தார். வெற்றிகரமாக சாதித்தும் காட்டியுள்ளார். இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தது எது என்று கேட்டால், சிறுவயதில் தான் பார்த்த சயின்ஸ் பிக்சன் தொடரான ஸ்டார் டிரக்தான் என்கிறார் சிரித்தபடி. ஹேட்ஸ் ஆப் சுவாதி.

மலையில் தொங்கும் விடுதி

மனிதன் கொஞ்சம் தாழ்வுணர்ச்சி கொண்டவன். அதிகமாக சாகச விரும்பி. இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. இயற்கையோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டு அதை வெல்ல வேண்டும் என ஓயாத மன அரிப்பை கொண்டிருப்பதால் தாழ்வுணர்ச்சி கொண்டவன் என்கிறோம். அதை வெல்ல வேண்டும் உந்துதலால் எதையாவது செய்து கொண்டிருப்பதால் சாகச விரும்பி ஆனான். அதற்கு சிறந்த உதாரணம் பெரு நாட்டில் உள்ள தொங்கும் விடுதி. அது என்ன தொங்கும் விடுதி. பெருவில் உள்ள மச்சு பிச்சு என்ற உலக அதிசய இடத்துக்கு செல்லும் வழியில் கஸ்கோ என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 அடி உயரத்தில் மலைக்குன்றில் ஒட்ட வைத்தது போல சுமார் 300 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் விடுதி அறைகளை கட்டியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ரிசார்ட்டுக்கு கம்பி  வழியாக தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அங்கிருந்து பெருவின் அழகை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மலை மற்றும் வான் மேகங்களின் அழகை ரசிக்கலாம்.. ஆனால் நமது உடலும் இதயமும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.. என்ன பெருவுக்கு போகலாமா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago