முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலக சாதனை

டொரண்டோ நகரில் 404 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல மாறுவேடம் அணிந்து வந்து உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னர் 99 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 404 பேரும் - ஐன்ஸ்டீன் போலவே பிளேசர், டை வெள்ளை விக் மற்றும் மீசை அணிந்திருந்தனர்.

கண்ணாடி பாதுகாப்பு

பெரும்பாலான ஏ.டி.எம் மெஷின்களில் திரைக்கு மேல் ஒரு வட்ட வடிவிலான கண்ணாடி ஒன்று இடம் பெற்றிருக்கும். அது பணம் எடுப்பவரின் உதவிக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும். அது அகலமாக பின்னாடி இருப்பதை உங்களுக்கு காட்டும் வகையில் இருக்கும்.இதன் மூலம், நீங்கள் ரகசிய குறியீடு எண் பதிவு செய்யும் போது யாராவது உங்களை பின்னாடி இருந்து வேவு பார்க்கிறார்களா, திருடர்கள் உள்ளே வருகிறார்களா? போன்றவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். 

ஆண்டுதோறும் 7.5 செமீ நகரும் ஹவாய் தீவுகள்

புவியியல் படித்தவர்களுக்கும், கொஞ்சம் பொது அறிவு படைத்தவர்களுக்கும் இந்த கண்டங்கள் எவ்வாறு உருவாகின என தெரிந்திருக்கும். அவை மெல்ல மெல்ல நகர்ந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும், ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தும் கண்டங்களும் தீவுகளும் உருவாகின. உருவாகி வருகின்றன. இது புவியியலின் இயற்கை. இதில் பசிபிக் கண்டத்திட்டில் அமைந்துள்ள ஹவாய் தீவுகள் ஆண்டுதோறும் நகர்ந்து வருகின்றன. அவை வடமேற்காக நகர்ந்து அமெரிக்க கண்டத்திட்டில் அமைந்துள்ள அலாஸ்காவை நோக்கி நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆண்டு தோறும் சுமார் 7.5 செமீ தூரம் நெருங்கி வருவதும் தெரியவந்துள்ளது. கண்டங்கள் பிரிவதும், இணைவதும் பல லட்ச ஆண்டுகள் செயல்பாடு என்றாலும் நகர்வது என்பது ஆச்சரியம் தானே..

இரத்தஓட்டம் சீரடைய

தாளாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.

மலாலா யூசுப்சாய்!

பாகிஸ்தானில் பெண் கல்வி பற்றி பேசிய மலாலா துப்பாகியால் சுடப்பட்டார். தோட்டா இவரது மண்டை ஓட்டில் இருந்து தண்டுவடம் நோக்கி பாய்ந்தது. எனினும் மரணத்தை தொட்டு திரும்பிய அவர் பெண் கல்விக்காக மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பித்தார் மலாலா. இதற்காக இவர் நோபல் பரிசு பெற்றார்.

டிஜிட்டல் ஆபத்து

டிஜிட்டல் டெக்னாலஜி பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி செயல்பாடுகளில் அல்லது குழந்தைகளிடம் பேசும் போது நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தினால், குழந்தைகள் அதிக சென்ஸ்டிவ், அதிக கோபம், தீவிர செயல்கள் மற்றும் புலம்பல் போன்றவற்றிக்கு உள்ளாகுகிறார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago