முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீருக்குள் மூழ்கும் நகரம் எது தெரியுமா?

மெக்சிகோ நகரம் கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு பேர் போனது. தற்போது புவியியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. 1325 ஆம் ஒரு ஏரியின் மீது இந்த நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துரதிருஷ்டம் ஆண்டு தோறும் சுமார் 3.2 அடிகள் வரை இந்த நகரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஆஸ்டெக் ஆட்சியாளர்கள் ஒரு செயற்கை தீவை உருவாக்கினர். மேலும் 1521 இல் நகரம் தகர்க்கப்பட்ட போது இடிபாடுகளின் மீது ஸ்பானியர்கள் புதிய மெக்சிகோவை நிர்மாணித்தனர். ஆனால் நகர வாசிகள் தரைக்கு கீழே இருக்கும் நீரைத்தான் நம்பி இருப்பதால் கடந்த 60 ஆண்டுகளில் நீர் 32 அடிக்கும் கீழே சென்று விட்டது. இல்லாவிட்டால் நகரம் ஏரிக்குள் ஸ்வாகா ஆகியிருக்கும்.

மதிக்கும் பிராணி

காகிதப் பணத்தை உலகில் முதன்முதலாகப் புழக்கத்துக்கு விட்டவர்கள் சீனர்கள்தான். கி.மு. 119-ஆம் ஆண்டிலேயே சீனர்கள் காகிதப் பணத்தை உருவாக்கிவிட்டனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டையும் பல விலங்கின ஆண்டுகளாகக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எலி ஆண்டையே மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள்.

கழுத்து சுருக்கம் போக..

சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகளால் கழுத்து சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதை போக்க,  அன்னாசி பழ சாறை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். மேலும், முட்டைக்கோஸ் சாறு,  தக்காளி பழ சாறு, ஆலிவ் எண்ணெயை கொண்டும் கழுத்து சுருக்கத்தை போக்கலாம்.

மரங்களின் எண்ணிக்கை பாதியாக குறைவு

உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.மேலும் மனிதர்கள், மரங்கள் விகிதமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 1,92,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் வேகமாக அழிக்கப்படுவதால் மனித நாகரீகம் தொடங்கிய போது இருந்த மரங்களின் எண்ணிககையை விட தற்போது பாதியாக குறைந்துள்ளது. இது தொடர்பாக  Nature என்ற ஆய்விதழிலும் கட்டுரை வெளியாகியுள்ளது. காடு அழிப்பு வேகம் கடந்த நூறு ஆண்டுகளில் மிக அதிகம். தற்போது இருக்கும் 3.04 ட்ரில்லியன் மரங்களில் வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டலக் காடுகளில் 1.39 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. வடமுனைப் பகுதிகளில் 0.74 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. மிதவெப்பப் பகுதிகளில் 0.61 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. பல இடங்களில் அடர்ந்த காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும் மரங்கள் காணாமல் போனதற்கு காரணம் என்கிறது ஆய்வு.

சூப்பர் பைக்

பி.எம்.டபிள்யூ ‘விஷன் நெக்ஸ்ட் 100’ என்ற புதிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளது. இதை இயக்குபவருக்கும், மோட்டார் சைக்கிளுக்கும் இடையிலான தகவல் பறிமாற்றத்துக்காக வியூபைண்டர் கண் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேகம், ஆர்பிஎம் தகவல்களை அறியலாம்.

நுண்ணோக்கியை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா

ஆண்டனி வான் லியூவென்ஹாக் (Antonie van Leeuwenhock) என்ற டச்சுக்காரர் 1670ஆம் ஆண்டு வாக்கில் சிறு கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தி முதலாவது நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தார். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட முதலாவது நுண்ணோக்கியைக் கண்டவர் இவரே. மிக நுட்பமான பொருட்களையும் பல்லாயிரம் மடங்கு பெரிதாகக் காட்டும் திறன் வாய்ந்த நுண்ணோக்கிகளும் இப்போது உள்ளன. தாவரத்தின் உயிரணுக்கள் (plant cell) போன்றவற்றை நுண்ணோக்கியின் துணையின்றிக் காண இயலாது என்பதை நாம் அறிவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago