முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா 'சிவப்பு தங்கம்' (Red Gold) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, ​​இந்த மசாலாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 2.5 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை என்பது ஆச்சரியம் அளித்தாலும் உண்மையான விலை தான் இது. செடிகளில் இருந்து கொய்யப்படும் சுமார் ஒன்றரை லட்சம் பூக்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிடைக்கிறது. ஒரு பூவில் இருந்து மூன்று குங்குமப்பூ மட்டுமே கிடைக்கும் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். 

அதிக வெப்பநிலை கொண்ட பாலைவனம் எது தெரியுமா?

இந்தியாவில் தார் பாலைவனம் காணப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனமாக பரந்து விரிந்து இருப்பது சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 3.6 லட்சம் மைல்கள் சதுர பரப்பளவு கொண்டவையாகும். இங்கு வெப்பநிலை சில சமயங்களில் 136 டிகிரி வரை கூட எகிறுமாம். சராசரியாகவே இங்கு வெப்பநிலை 100 டிகிரிக்கு மேலேதான் உயர்ந்து காணப்படுமாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

உலகின் முதல் சோலார் பேனல் மின் பூங்கா எங்கு நிறுவப்பட்டது?

மின் ஆற்றலைப் பெறுவதற்கான புதிய வழிமுறைகள் பற்றித் தொடர்ந்து எப்போதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. சூரியனிடமிருந்து ஏராளமான மின் ஆற்றலைப் பெற இயலும் என்றாலும், தற்போது அந்த மின் ஆற்றலின் மிகக் குறைந்த அளவையே நாம் பயன்படுத்தி வருகிறோம். சூரிய மின் ஆற்றலின் ஒரு சிறு பகுதியைக் கொண்டே உலகின் மின் ஆற்றல் தேவையைப் பெருமளவு நிறைவு செய்ய இயலும். முதலாவது சூரிய மின் ஆற்றல் நிலையம் (solar energy station) ஒடெய்லோ (Odeillo) என்ற இடத்தில் 1969ஆம் ஆண்டு ஃபிரான்சில் நிறுவப்பட்டது. மின் ஆற்றலைப் பெறுவதற்கு சூரிய ஒளியின் திறனைப் பயன்படுத்தியதோடு, எவ்வளவு மின் ஆற்றலைப் பெற முடியுமோ அவ்வளவு மின் ஆற்றலைப் பெறுவதற்குத் தேவையான எண்ணிக்கையில் பல சோலார் பேனல்களும் பயன்படுத்தப்பட்டன. எதிர்காலம் சூரிய ஒளி மின் ஆற்றலையே நம்பியுள்ளது என்றால் இன்றைக்கு யார் நம்ப போகிறார்கள்.

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் ஆய்வாளரான டிர்க் பார்க்கர் என்ற 33 வயது இளைஞர் இதை கண்டுள்ளார். அவருக்கு தொடக்கத்தில் இது எத்தனை அரியது என்பது தெரிந்திருக்கவில்லை. பின்னர் பூச்சி இனங்கள் தொடர்பாக கூகுளில் தேடிய போதுதான் இது அரிய வகை என்பது தெரியவந்தது என்கிறார். மரபணுவில் ஏற்படும் எரித்ரிசைம் என்பதன் காரணமாக இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அதை தனது வீட்டில் செல்லப்பிராணியாக வைத்திருக்கிறார் பார்க்கர்.

பெரிய மூளை

ஆர்க்டிக் பகுதியில், கரிம மாசுபாடுகள், சுகாதார பிரச்சினைகளால், வனவிலங்குகளில் பெரிய மூளை கொண்ட, போலார் கரடிகளுக்கு ஹார்மோன் பிரச்னை, மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

பாலினம் அறிய

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பாலினம் குறித்து அறிய எளிய சோதனையாக டிரானோ பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனைக்கு ஒரு பாத்திரத்தில் தாயின் சிறுநீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் டிரோனோ சேர்க்க, இவை இரண்டும் கலந்து வரும் நிறம் பச்சையாக தோன்றினால், பெண் குழந்தை. நீலமாக தோன்றினால் ஆண் குழந்தை என்றும் அறிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago