Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய உணவகம்

லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பால் காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார்.

ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?

ஒவ்வொரு மிருகமும் விதவிதமான ஓசைகளை எழுப்பக் கூடியனவாகும். அதே போல பறவைகளும் விதவிதமான ஒலிகளை எழுப்பும். அவை நம் மனதுக்கு மிகுந்த இதமான உணர்வை அளிக்கும். அதே நேரத்தில் மிருகங்கள் எழுப்பும் ஒலிகள் சில வேளை நம்மை கவர்ந்தாலும், பல நேரங்களில்அவை அச்சுறுத்துவதைப் போலவே இருக்கும். பறவைகள், விலங்குகள் ஒலிகளை நாம் கேட்டிருந்தாலும் விலங்குகளில் மிக உயரமான மிருகமான ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?  அவை எப்படி ஒலி எழுப்பும் என்பதை நம்மில் பெரும்பாலானோர்.. அவ்வளவு ஏன் நாம் யாருமே கேட்டிருக்க முடியாது. இது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. அவை எழுப்பும் ஒலிகளை மனிதனால் கேட்க முடியாது என்பதுதான் அதன் சிறப்பம்சம். மனித செவிகளுக்கு குறிப்பிட்ட டெசிபலில் தொடங்கி குறிப்பிட்ட டெசிபல் வரையிலான சத்தங்களை மட்டுமே கேட்கும் திறன் உள்ளது. அதற்கு கூடுதலாகவோ, குறைவாக எழும் சத்தங்களை மனித செவிகளால் கேட்க இயலாது. எனவே ஒட்டக சிவிங்கிகள் எழுப்பும் ஒலிகள் நமது செவித்திறனுக்கு குறைவான டெசிபல் கொண்டவை என்பதால் நம்மால் அவற்றை வெறும் செவிகளால் கேட்க முடியாது. ஆராய்ச்சியாளர்களின் பிரத்யேக கருவிகளை கொண்டுதான் அவற்றை பதிவு செய்ய இயலும் என்பது ஆச்சரியம் தானே..

வெட்டுக்கிளிகளின் காதுகள் எங்குள்ளன தெரியுமா?

உலகில் உள்ள பெரும்பாலான ஜீவராசிகளுக்கும் புற ஒலிகளை கேட்கும் வகையில் காதுகள் அமைந்துள்்ளன. மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளுக்கு காதுகள் அதன் தலையிலேயே அமைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மனிதனை போல அல்லாமல் வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் எங்குள்ளன தெரியுமா? வெட்டுக்கிளிகளின் காதுகள் அவற்றின் வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. ஒலிகளை கேட்கும் வகையில் அதன் வயிற்றில் அடிப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சவ்வு போன்ற பகுதிக்கு டைம்பனம் என்று பெயர்.

சமையல் எரிவாயு வாசனை இல்லாது

நமது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு அடுப்பில் அதை பற்ற வைக்கும் போதோ, அல்லது சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்படும் போதோ உடனே நமக்கும் வாசனை ஏற்பட்டு உஷாராகி விடுகிறோம். அப்படியானால் நாம் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு வாசனை உள்ளதா என்றால்... கிடையாது. உண்மையில் அதன் இயல்பான நிலையில் புராபேன், பியூட்டேன் ஆகியவற்றின் கலவையாகும். இவற்றிற்கு அடிப்படையில் வாசனை கிடையாது. சமையல் பணிகளின் போது விபத்து ஏற்படாமல் தடுக்கவும், கசிவை புரிந்து கொள்ளவும் அதில் எதில் மெர்காப்டன் என்ற தனிமம் கலக்கப்படுகிறது. இதுதான் சமையல் எரிவாயுக்கு வாசனையை கொடுக்கிறது. இதை கலந்த பிறகே சிலிண்டரில் நிரப்பபட்டு நமது வீடுகளுக்கு வருகிறது சமையல் எரிவாயு.

துரித உணவுகள்

துரித உணவுகளை இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும்.

தங்க சுரங்கம்

சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரும் கோள்களிலிருந்து பிரிந்து உருவாகின. அப்படி உருவான ஒரு சிறிய கோளை அன்னிபாலே டி காஸ்பரிஸ் எனும் இத்தாலிய வானியலாளர்  மார்ச் 17, 1852இல் கண்டு பிடித்தார். இதன் சிறப்பு என்ன தெரியுமா, இது தங்கம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள், தனிமங்களால் உருவான மிகப் பெரிய கோளாகும். எனவே இதற்கு 'கோல்டுமைன் ஆஸ்டிராய்டு' என நாசா பெயரிட்டது. உண்மையிலேயே விண்வெளியில் மிதக்கும் ஒரு தங்கச் சுரங்கமான இது, நமது சூரிய மண்டல சுற்றுவட்டப் பாதையில் தான் சுற்றி வருகிறது. இந்தச் சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது. பல விலைமதிப்பற்ற உலோகங்கள், தனிமங்கள் நிறைந்திருப்பதால் அதன் ஒரு சிறு துண்டுகூடப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. இந்த விண்வெளி தங்கச் சுரங்கம் பூமியிலிருந்து சுமார் 32 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் சுழன்றி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago