முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பீன்யாவில் அமைய வாய்ப்பு

இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரித்து அசம்பிலிங் செய்யும் இடமாக பெங்களூரூ இறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த உற்பத்தி தொழிற்சாலை பெங்களூரூவின் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான பீன்யாவில் அமைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் அரச குடும்பத்துக்கு வின்சர் என்ற பெயர் எப்படி வந்தது?

இங்கிலாந்தில் உள்ள வின்சர் கோட்டைக்கு ஹவுஸ் ஆப் வின்சன் என பெயரிடப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் பின்னணி என்ன தெரியுமா.. 1917 இல் தான் ஹவுஸ் ஆப் வின்சர் உருவானது. அதன் சாக்ஸ்-கோபர்க்-கோதெ என்ற ஜெர்மானிய சாயல் கொண்ட அந்த வரலாற்றுப் பெயருக்கு மாற்றாக, ஐந்தாம் ஜார்ஜ் அரசரின் ஆணையின் மூலம் அந்த பெயர் மாற்றப்பட்டு, ஹவுஸ் ஆப் வின்சர் என்பது இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரப் பூர்வ பெயராக இடம் பெற்றது. அது தற்போதைய அரச குடும்பத்தின் பெயராகவே மாறிவிட்டது. தற்போதை ராணி ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான அரச குடும்பங்களுடன் குடும்ப உறவுகளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளிக்கு பறந்த 71 வயது மூதாட்டி

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தனது நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் மூலம் ‌ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று வந்தார். இது மிகப்பெரும் மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகளான 74 வயதான லாரா ஷெப்பர்ட் சர்ச்லே உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது. லாரா ஷெப்பர்ட்டின் தந்தையான ஆலன் ஷெப்பர்ட் கடந்த 1961-ம் ஆண்டு மே 5-ந் தேதி புளோரிடா மாகாணத்தில் இருந்து மெர்குரி விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்து, அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் என்கிற பெருமையை பெற்றார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புளூ ஆரிஜின் நிறுவனத்துக்கு சொந்தமான வான் ஹார்ன் ஏவுதளத்தில் இருந்து ஆலன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேருடன் நியூ ஷெப்பர்ட் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டது. இந்த பயணம் சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. நியூ ஷெப்பர்ட் விண்கலம் 100 கிலோமீட்டர் உயரம் வரை பயணித்தது. அதன் பின்னர் அந்த விண்கலம் மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது.

பறக்கும் டாக்சியை பரிசோதித்த தென் கொரியா

கார்கள் தரையில் சீறிப் பாய்ந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. மாறாக அவை விரைவில் வானில் பறக்க தயாராகி வருகின்றன. இதற்கான பல்வேறு முன்னோட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வந்த போதிலும் இதில் தென் கொரியாதான் முன் கை எடுத்துள்ளது. வெகு விரைவில் தனது நாட்டில் பறக்கும் டாக்ஸிகலை பயன்படுத்தப் போவதாக கடந்த 2020 இல் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது பறக்கும் கார் டாக்ஸியை வெற்றிகரமாக அந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு Gyeonggi Province இல் உள்ள ஜிம்போ நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பறக்கும் டாக்ஸியை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ஜெர்மனி நிறுவனமான Volocopter இதற்கான பறக்கும் டாக்ஸியை வடிவமைத்து தந்துள்ளது. ஜிம்போவிலிருந்து தலைநகர் சியோல் வரை சுமார் 30 முதல் 50 கிமீ வரை இந்த பறக்கும் டாக்ஸி சேவையை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2025க்குள் உறுதியாக இது தொடங்கப்பட்டு விடும் என்கிறது தென்கொரியா. அப்படியானால் விரைவில் நமது நாட்டிலும் நாமும் பறக்கும் டாக்ஸியில் விரைவில் பறக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

அழிவை நோக்கி....

பூமியில் அடுத்த 1000 ஆண்டுகள் மட்டுமே மனித இனத்தால் வாழ முடியும். இந்த கால இடைவெளிக்குள் ஏற்படும் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரால் மனித இனம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று  ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மூளை செயல்பாடு அதிகம் கொண்டவராகக் கருதப்படும் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

டச் ஸ்கிரீன் எப்படி வந்தது?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இ.ஏ. ஜான்சன் என்பவர் தான், தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு முன்னோடி என்று கூறலாம். 1967 வரை ராயல் ரேடார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வேலையை விட்டு நின்ற பிறகு, 1968ல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் தொடர்பாக அறிவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில்தான், முதன்முதலாக தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. முதன்முதலாக தொடுதிரையை செயல்வழியில் வெளி உலகுக்குக் காண்பித்தவர், சாம் ஹர்ஸ்ட் என்பவர்.அமெரிக்காவில் உள்ள கென்ட்யூக்கி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் ஹர்ஸ்ட். 1971ல், இவர் உருவாக்கிய முதல் தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு ‘எலோகிராஃப்’ (Elograph -– Electrical and Optoelectronic Graphene Devices) என்று பெயரிடப்பட்டது. இந்த எலோகிராஃப் (Elograph)தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை கென்ட்யூக்கி பல்கலைக்கழகம் பெற்றது. பின்னர் வேலையை விட்டுவிட்டு, எலோகிராஃபிக்ஸ் என்று தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கினார் சாம் ஹர்ஸ்ட். 1974ல், ஒளிபுகும் தொடுதிரையை பேராசிரியர் சாம் ஹர்ஸ்ட் உருவாக்கினார். சீமன்ஸ் நிறுவனத்தின் நிதியுதவிடன்தடை மின்னோட்ட தொடுதிரை தொழில்நுட்பத்தை ( resistive touch screen technology) உருவாக்கி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். வளைவான கண்ணாடியாக இருந்த கருவிக்கு, எலோகிராஃபிக்ஸ் நிறுவனம் ‘டச் ஸ்கிரீன்’ என்று பெயரிட்டு அழைத்தது. அப்படிப் பிறந்ததுதான், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago