முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காஸ்ட்ரோ அறியாதது

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

இந்தியர்களின் திறமை

நிக்கும்பா வம்சத்தை சேர்ந்த சாந்த் மகாராஜாவால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இந்தியர்களின் கணிதவியல் வல்லமைக்கும், கட்டிடக்கலை நேர்த்திக்கும் இது சிறந்த சான்றாகும். பாலைவன பிரதேசமான இங்கு தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இந்த படிக்கிணறு கட்டப்பட்டிருக்கிறது. இது 100 அடி ஆழமும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் எப்போதுமே குளிர்ச்சியுடன் இருப்பது அதிசயம். இந்த படிக்கிணற்றில் மொத்தம் 3500 படிகள் இருக்கின்றன. பதிமூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் இந்த படிகள் ஒவ்வொன்றும் அச்சுப்பிசகாமல் ஒரே போல அமைக்கப்பட்டிருப்பது நமக்கு பிரம்மிப்பை உண்டுபண்ணும்.

இரவில் பிறந்தவர்கள் குணம்

சூரிய அஸ்தமனத்திற்கு பின் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். இந்நேரத்தில் பிறந்தவர்கள் கலை மற்றும் இசையில் நல்ல ரசனைமிக்கவர்களாக இருப்பர். இரவு நேரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தாய் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர்.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

அதிசய கோயில்

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு ஏற்ற ஸ்தலமாக கருதப்படுவது திருநாகேஸ்வரம். இங்கு ராகுவுக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறிவிடுகிறது. இந்த அதிசயக் காட்சியை பக்தர்கள் கண்குளிர காணமுடியும்.

செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து கேட்பது ஏலியனின் குரலா?

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இன்சைடர் விண்கலம் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலை அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து தொடர்ந்து ஒரு வித மர்மமான ஒலி தொடர்ந்து இருந்து வருவதை அது பதிவு செய்து அனுப்பியுள்ளது. இது அங்கு வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்களின் எழுப்பும் ஒலியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்த போதிலும் இதை விஞ்ஞானிகள் இதுவரை அதை உறுதி செய்யவில்லை என்ற போதிலும் செவ்வாயிலிருந்து எழும் ஒலியின் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதுதான் ஆச்சரியமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago