முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சமையல் எரிவாயு வாசனை இல்லாது

நமது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு அடுப்பில் அதை பற்ற வைக்கும் போதோ, அல்லது சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்படும் போதோ உடனே நமக்கும் வாசனை ஏற்பட்டு உஷாராகி விடுகிறோம். அப்படியானால் நாம் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு வாசனை உள்ளதா என்றால்... கிடையாது. உண்மையில் அதன் இயல்பான நிலையில் புராபேன், பியூட்டேன் ஆகியவற்றின் கலவையாகும். இவற்றிற்கு அடிப்படையில் வாசனை கிடையாது. சமையல் பணிகளின் போது விபத்து ஏற்படாமல் தடுக்கவும், கசிவை புரிந்து கொள்ளவும் அதில் எதில் மெர்காப்டன் என்ற தனிமம் கலக்கப்படுகிறது. இதுதான் சமையல் எரிவாயுக்கு வாசனையை கொடுக்கிறது. இதை கலந்த பிறகே சிலிண்டரில் நிரப்பபட்டு நமது வீடுகளுக்கு வருகிறது சமையல் எரிவாயு.

கயி்ற்றின் மீது நடப்பவர்கள்: ரஷ்யாவில் வினோத கிராமம்

நம்மூர்களில் திருவிழாக் காலங்களில் வித்தை காட்டும் கலைஞர்கள் தெருவில் இரு புறமும் கயிறை கட்டி கூத்தாடுவதை பார்த்திருக்கிறோம். அதையை சற்று உயரமாகவும், நீளமாகவும் மாற்றி வெளிநாடுகளில் சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அண்மையில் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் மீது கயிற்றை கட்டி அசால்ட்டாக நடந்து சென்று சாதனை செய்த வீடியோ நெட்டில் வைரலாக பரவியதை அனைவரும் பார்த்திருக்கலாம்.ஆனால் ஒரு கிராமமே கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா.. என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கிராமத்தில் முதியவர் தொடங்கி இளையவர் வரை, பெண்கள் தொடங்கி சிறுவர்கள் வரை அனைவரும் கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களாக அசத்து கின்றனர். இந்த வினோத கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா.. ரஷ்யாவில்.. பொதுவாகவே சர்க்கஸ் துறையில் ரஷ்யர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருப்பவர்கள். கடந்த நூற்றாண்டில் சர்க்கஸ் தொழில் செழித்து கிடந்த கால கட்டத்தில் ரஷ்யர்கள் உலகம் முழுவதையும் வியாபித்திருந்தனர். தற்போது சர்ககஸ் தொழில் படிப்படியாக குறைந்து விட்டது.மக்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. அது கிடக்கட்டும்.. கயிற்றின் நடக்கும் அந்த கிராமம் Russia’s Dagestan autonomous republic என்று சொல்லப்படும் பிராந்தியத்தில் உள்ள Tsovkra-1 என்ற சிறிய கிராமம் தான் அது. அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுமே கயிற்றில் நடக்கும் திறன் பெற்றவர்கள் என்பதாலேயே அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் 3 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த அந்த கிராமம் தற்போது 300 பேராக குறைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கயிற்றின் மேல் நடக்கும் மரபை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலாவை போன்று...

சீனாவில், யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018-ம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ஆராயும் பணிக்கு முன்னோட்டமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களில் 4 பேர் கொண்ட முதல் குழு, 60 நாட்களும், 4 பேர் கொண்ட இரண்டாவது குழு 200 நாட்களும் தங்குவார்கள். இந்த ஆய்வகத்தில் ஒரு தங்குமிடம், 2 தாவரங்களுக்கான பசுமைக்கூடம் இருக்கும். சீனா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலா கிராமத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

உலகின் குண்டு பெண்

எகிப்தை சேர்ந்த எமான் என்ற 40 வயது பெண் பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். படுக்கையிலேயே 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரது உடல் எடை தற்போது 500 கிலோவை தொட்டுள்ளது. உலகிலேயே குண்டான பெண்ணான இவருக்கு, மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால், உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளவுள்ளார்.ஆனால் அரை டன் எடை கொண்ட இவரை ஏற்றிவர தனியார் விமான நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன. இவரை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில்,  இவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ரூ.2 கோடி செலவில் மருத்துவமனையில் பிரத்யேக அறையை உருவாக்கி வருகின்றனர். இந்த அறையில், டாக்டர்கள் அறை, கண்காணிப்பாளர் அறை, 2 கழிவறைகள், வீடியோ கான்பரன்சிங் அறை ஆகியவை இடம் பெறுகின்றன.

ஸ்நூக்கர் போட்டியில் முதன்முதலில் சாம்பியன் வென்றவர் யார்?

உலகில் முதன் முறையாக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் 1927 இல் நடைபெற்றது. முதல் சுற்று லண்டனிலும், இறுதி சுற்று  பெர்மிங்காமிலும் நடைபெற்றது. முதன் முதலில் இந்த விளையாட்டில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் ஜோ டேவிஸ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொழில் முறை ஸ்நூக்கர் விளையாட்டு வீரராவர். வெற்றி பெறுபவருக்கு பரிசாக 6 பவுண்டுகள் 10 ஷில்லிங் பணம் பரிசாக அளிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாய் ஆகும். 

மாரடைப்பு பயம்

திடீரென நம் இதயம் வேகமாக துடித்து, சுயநினைவை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டால், உடனே நாம் தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும் இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago