முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குழந்தை வடிவமைப்பு

30 ஆண்டுகளில் இனபெருக்க செக்ஸ் முடிவுக்கு வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்வார்கள் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். வருங்காலத்தில், தம்பதிகள் தங்கள் டிஎன்ஏவை வைத்து ஆய்வகங்களில் கருக்களை வடிவமைத்து கொள்வார்களாம். பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம். பின்னர்  இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம். முட்டைகள் பின்னர் பல கருக்களை விளைவிக்கும். பின்னர் அதனை வல்லுநர்கள் எந்த நோய்களுக்கும் ஆளாகிறார்களா என சோதனை செய்வர். இதை செய்வதன் மூலம், பெற்றோர்கள் குழந்தையின் முடி நிறம் மற்றும் கண் வண்ணம் போன்ற அம்சங்களை தேர்ந்து  எடுத்து கொள்ள முடியும். இந்த செயல்முறை 30 ஆண்டுகளில் மிகவும் மலிவானதாகவும், நிறைய பேர் செய்வார்களாம்.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நன்றி உணர்வு

பிரேசில் நாட்டை சேர்ந்த பிகுயிரோடோ, செரினோ என்ற குதிரையை வளர்த்து வந்தார். திடீரென விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கின்போது அங்கு வந்த குதிரை செரினோ உரிமையாளர் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அழிவை நோக்கி....

பூமியில் அடுத்த 1000 ஆண்டுகள் மட்டுமே மனித இனத்தால் வாழ முடியும். இந்த கால இடைவெளிக்குள் ஏற்படும் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரால் மனித இனம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று  ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மூளை செயல்பாடு அதிகம் கொண்டவராகக் கருதப்படும் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

30 ஆண்டுகளாக...

அமெரிக்காவை சேர்ந்த கார்ல் பாடன் (64) என்பவர் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் செல்போன்கள் வருவதற்கு முன்பே ‘செல்பி’ எடுக்க தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக ‘செல்பி’ எடுத்து வருகிறார். முதலில் சாதாரண 35 எம்.எம். கேமராவில் டிரைபோட் மற்றும் சாதாரண வெளிச்சத்தில் செல்பி எடுத்தார்.

உலகின் மிகப் பெரிய காளை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சியானினா என்ற காளை இனம் தான் தற்போது வரையிலும் உலகிலேயே வீடுகளில் வளர்க்கப்படும் காளைகளில் மிகப் பெரிய காளை இனமாக அறியப்பட்டுள்ளது. உயரத்திலும் எடையிலும் இவை மெகா சைஸ். தொடக்கத்தில் இவை இத்தாலியில் வளர்க்கப்பட்டன. பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு பரவின. இவற்றின் எடை சுமார் 1700 கிலோ. தொடக்கத்தில் இறைச்சிக்காக இவை வளர்க்கப்பட்டன. 2 ஆம் உலகப் போருக்கு பிறகு இது உலகம் முழுவதும் பரவலான இனமாக மாறியது. பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago