முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி முறைகேடு: மேலும் 2 நிறுவனங்கள் மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச் 29 - நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக நாகபுரி மற்றும் டெல்லியைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

வழக்குப் பதிவு செய்த உடனே அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான மும்பை, டெல்லி, சத்தீஸ்கர் , நாகபுரி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 1998-ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றபோது, சென்டரல் கொலைரீஸ்  நிறுவனமே செயல்பாட்டில் இல்லை. 2000-ஆம் ஆண்டு மிண் நிறுவனத்தை அமைக்காமல் இந்த நிறுவனம் நிலக்கரியை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளது. இதேபோல், பிரகாஷ் நிறுவனம் பொய்யான தகவல்களை அளித்து உரிமம் பெற்றுள்ளது. அரசு விதிமுறைகள் பின்பற்றப்படாமல் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்