எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக 2 - தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளும் அண்ணா தி.மு.க. தொகுதிகள் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிப்பட கூறினார்.
மயிலாடுதுறை தொகுதிக்கு சொந்தம் கொண்டாடி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பேசுகிறார்.
2016ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிட்டு வெல்லப்போவது உறுதி என்றும் முதலமைச்சர் கூறினார்.
நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சட்டசபையில் நேற்றுஉள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருட்செல்வன் பேசினார். அவர் பேசும்போது மயிலாடுதுறை தொகுதிக்கு கலை கல்லூரி ஒன்றை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என்று கூறினார்.
அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து பேசினார்.
நான் இன்று(நேற்று) காலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது யாரும் நன்றி சொல்வார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 சட்டமன்ற தொகுதிகளும் அண்ணா தி.மு.க. தொகுதிகள் தான். உறுப்பினர் மயிலாடுதுறையை சொந்தம் கொண்டாடி பேசுகிறார்.
2016ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மயிலாடுதுறையில் அண்ணா தி.மு.க. போட்டியிட்டு வெல்லப்போது திண்ணம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். (அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம்)
தொடர்ந்து அருட்செல்வன் பேசுகையில், எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்ற வரலாறு இல்லை என்று குறிப்பிட்டபோது, அண்ணா தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உடனே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து கூச்சல் போட்டார்கள். அனைவரையும் அமைதியாக உட்காரும்படி சபாநாயகர் தனபால் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 44.3 சதவீத ஓட்டுக்களை பெற்று வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்திருக்கிறது என்று கூறினார்.
தே.மு.தி.க. துணைத் தலைவர் மோகன் ராஜ் பேசுகையில், தேர்தல் கமிஷன் பற்றி ஒரு கருத்தை சொன்னார்.
அப்போது மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் எழுந்து, தேர்தல் கமிஷன் பற்றி குறை சொல்ல உங்களக்கு உரிமை இல்லை. நீங்கள் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்திருக்கிறீர்கள். உள்ளாட்சி தேர்தலில் உங்களது சாயம் வெளுத்துவிட்டது. இடைத் தேர்தல்களிலும் ஒரு இடத்திலும் வெற்றி பெற வில்லை. பார்லிமெண்ட் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.10 தொகுதிகளில் டெபாசிட் இழந்தீர்கள் என்று காட்டமாக கூறினார்.
தொடர்ந்து தே.மு.தி.க. துணைத் தலைவர் மோகன் ராஜ் பேச முற்பட்டார். அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து பேசினார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் அம்மாவை தவிர எந்த அரசியல் கட்டி தலைவர்களுக்காகவது நெஞ்சில் தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட தயாரா? அப்படி தனித்து போட்டியிட்டால், 234 தொகுதிகளிலும் அவர்கள் டெபாசிட்டை இழப்பார்கள். தனித்து போட்டியிடும் துணிச்சலும், தைரியமும், அம்மா ஒருவருக்கு தான் உண்டு. நெஞ்சில் உறுதி மிக்க தலைவர் அம்மா என்று கூறினார்.
அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து பேசினார்.
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 217 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. தனித்து போட்டி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறினார். (அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம்)2016ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிட்டு வெல்லப்போவது உறுதி என்றும் முதலமைச்சர் கூறினார்.
நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றும் முதலமைச்சர் பேசினார்.
தொடர்ந்து அருட்செல்வன் பேசுகையில், அரசியல் வரலாற்றில் தோல்வி அடையாத கட்சிகளே இல்லை என்று கூறியபோது, மீண்டும் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எழுந்து பேசினார்.
வெற்றி தோல்விகள் வரும் , ஆனால் நீங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். டெபாசிட்டை இழந்து இருக்கிறீர்கள். ஆண்டவனுடனும், மக்களுடனும் கூட்டணி என்றீர்கள். ஆனால் கடைசியில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தீர்கள். தோற்றுப்போய் நிற்கிறீர்கள்.
தே.மு.தி.க. துணைத் தலைவர் மோகன் ராஜ் எழுந்து கோபமாக பேசினார். சபாநாயகரை பார்த்து மிரட்டும் தோனியில் பேசினார். அப்போது சபாநாயகர் அவரை எச்சரித்தார். மிரட்டுவது போன்று பேசுவது சரியில்லை. முறையில்லாமல் நடக்காதீர்கள் என்று சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார்.
தொடர்ந்து உணவு அமைச்சர் காமராஜ் எழுந்து உறுப்பினர் அருட்செல்வனுக்கு 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதலமைச்சர் அம்மா ஓட்டு கேட்டார். அதனால் தான் அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இங்கு சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கிறார் என்று கூறினார்.
உடனே அருட்செல்வன் எழுந்து, முதலமைச்சர் ஓட்டு கேட்டது உண்மை. எங்களது கேப்டனும் ஓட்டு கேட்டார் என்று கூறினார்.
உடனே அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து அவரது தலைவர் ஓட்டு கேட்டதாக கூறினார். அதற்காக அவர் வெற்றி பெறவில்லை. அம்மா ஓட்டு கேட்டதால் தான் அவர் வெற்றி பெற்று வந்திருக்கிறார். உங்கள் தலைவர் ஓட்டுகேட்டதால் தான் வெற்றி பெற்றேன் என்று சொல்கிறீர்களே, பார்லிமெண்ட் தேர்தலில் உங்கள் தலைவர் ஓட்டு கேட்டாரே, ஏன் வெற்றி பெறவில்லை? முதலமைச்சர் அம்மாவினால் தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்பதை நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் மக்கள் வௌிப்படுத்தி விட்டனர் என்று காட்டமாக கூறினார்.
இத்துடன் இந்த விவாதம் முடிவுற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு