முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகால மரணமடைந்த 11 பேர் குடும்பங்களுக்கு நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 3–திருச்சி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலை விபத்து உள்ளிட்ட சம்பவங்களின் மூலம் உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

15.3.2014 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், கோ. அபிஷேகபுரம் கிராமம் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஈகை பகுதியைச் சேர்ந்த விக்டர் அலெக்ஸாண்டர் என்பவரின் மகன் எடிசன் அமிர்தராஜ்;

16.3.2014 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிந்தாமணி கிராமம், அண்ணாமலை நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த . கருப்புசாமி என்பவரின் மகன் சுந்தரமூர்த்தி;

16.3.2014 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவாசி கிராமம், சேலம் பிரதான சாலையில் ஆட்டோவில் பயணம் செய்த பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த . கனகராஜ் என்பவரின் மகன் தினேஷ்குமார்; . வீராசாமி என்பவரின் மகன் பாலு;

7.4.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமம், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த . கைலாசம் என்பவரின் மகன் தர்மலிங்கம்;

15.4.2014 அன்று விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், நகர் கிராமம் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த செம்மணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த . மாயவன் என்பவரின் மகன் நடேசன்;

-- ஆகியோர் அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

4.4.2014 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் பகுதி, நெய்குளம் கிராமம் அருகே, திருச்சிராப்பள்ளி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த நந்தக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயும், பழனியப்பன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

6.4.2014 அன்று ஈரோடு மாவட்டம், கங்காபுரம் கிராமம், அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அரசுப் பேருந்து மோதியதில், தனியார் பேருந்திலிருந்த சித்தோடு, குட்டை தயிர்பாளையம் பகுதியைச் சேர்ந்த . ராமன் என்பவரின் மகன் கிட்டுசாமி, அரசுப் பேருந்தில் பயணம் செய்த சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகள் சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

8.4.2014 அன்று கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சுங்கான்கடை, தோட்டியோடு அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நிலைத் தடுமாறி அருகிலிருந்த குளத்தில் விழுந்ததில் விளவங்கோடு வட்டம், விழுந்தயம்பலத்தைச் சேர்ந்த. ராமகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்