முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டுக்கு பாதுகாப்பு வாபஸ்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 2 – அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத சம்பவங்கள் நடந்து வருகிறது.

தீர்ப்பு கூறப்பட்ட சனிக்கிழமை (27–ந் தேதி)யன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு அ.தி.மு.க., தி.மு.க. தொண்டர்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் மண்டை உடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கருணாநிதி வீட்டு முன்பு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. இதே போல் ஆழ்வார் பேட்டையில் உள்ள பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ஆனாலும் கடந்த 27–ந் தேதியன்று அன்பழகன் வீடு அருகே வந்த ஒரு கும்பல் திடீரென கல் வீசியதால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மாற்று பாதையில் சுற்றி சென்றனர். இதனால் அன்பழகன் வீட்டுக்கு செல்லும் 3 தெருக்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தற்போது 2 நாட்களாக அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி சகஜநிலை திரும்பி உள்ளதால் பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் கருணாநிதி மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு, போலீஸ் பாதுகாப்பு நீடிக்கிறது...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்