முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தமாக பாட்டு கேட்ட பெண் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் 1 6 வயதான ஒரு பெண் சத்தமாக பாட்டு கேட்டதால் அவளது தாய்மாமனே துப்பாக்கியால் சுட்டு கொன்றது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கே பஞ்சாப் பிராந்தியம் உள்ளது. இங்கு சக்வால் மாவட்டத்தில் மட்டான் கல்லான் கிராமத்தில் ரெஹானா பீபி என்ற பெண் தனது வீ ட்டுக்குள் தனிமையில் சத்தமாக பாட்டு கேட்டு கொண்டிருந்தாள். அப்போது வீட்டுக்குள் நுழைந்த அவளது தாய்மாமன் பாட்டு சத்தத்தை குறைக்கும்படி ரெஹானா பீபியிடம் கூறினார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது தாய்மாமன் ஆத்திரத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரெஹானாவை சரமாரியாக சுட்டான். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானாள். இதை தொடர்ந்து தாய்மாமன் அந்த கிராமத்தை விட்டு த ப்பியோடி விட்டார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீ சார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தாய்மாமனை தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுய கவுரவத்திற்காக பெண்களை கொலை செய்யும் போக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து