முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு பான்கீமூன் கடும் கண்டனம்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

நியூயார்க் - பாகிஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான்கீமூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்குள் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 138 மாணவர்கள் உட்பட 140 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஏதும் அறியா பள்ளிக் குழந்தைகள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் கோழைத்தனத்தையே காட்டுகிறது. இந்த கொடூரமான தாக்குதலுக்கு அவர்கள் எந்தவித காரணங்களை கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சட்டத்துக்கு முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து