முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வாழ் இந்தியருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி மற்றும் ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட, அமெரிக்க வாழ் இந்தியர் அகமது கவுசர் முகமதுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அல்-கொய்தா, சிரியாவிலுள்ள அல் நுஸ்ரா முன்னணி, சோமாலியாவிலுள்ள அல் சஹாப் அமைப்புகளுக்கு நிதி கொடுத்தது மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அகமது கவுசர் முகமது மீது குற்றம்சாட்டப்பட்டது. அகமது கவுசர் முகமது, முகமது ஹூசைன் என்பவர் மூலமாக இச்செயல்களைச் செய்துள்ளார். ஆயுதங்கள் வாங்க நிதி திரட்டிக் கொடுத்துள்ளார்.

சிரியாவில் நடைபெறும் போருக்காக, அல்காய்தா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆட்களைத் திரட்டிக் கொடுத்ததை அகமது கவுசர் முகமது ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து