முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான முதல் ஒருநாள்: இஷாந்த், ஜடேஜாவுக்கு ஒய்வு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - மெல்போர்னில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இஷாந்த் சர்மா, ஜடேஜா விளையாட மாட்டார்கள் என்று கேப்டன் டோனி் தெரிவித்துள்ளார்.

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் இன்று மெல்போர்னில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இந்தத் தொடரில் எங்களுக்கு முக்கியமானது என்னவெனில் உலகக்கோப்பைக்கான அணிச் சேர்க்கையை உருவாக்குவதே. அதே வேளையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ள வீரர்களை விளையாட வைத்து அவர்கள் காயம் பெரிதடைவதை விரும்பவில்லை. அவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்து அவர்கள் 80 அல்லது 90% உடற்தகுதியை உறுதி செய்வது இப்போதைய நோக்கமாகும்.

சில வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இல்லை, நாங்கள் அவர்கள் உடற்தகுதி முன்னேற்றத்தை கண்காணித்து வருகிறோம். இதனால், நாளைய போட்டியில் இஷாந்த் சர்மா, ஜடேஜா விளையாட மாட்டார்கள், அவர்களது பணிச்சுமையை நாங்கள் நிர்வகிக்கவே இந்த முடிவு.

வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது முக்கிய ஆயுதங்களான யார்க்கர்கள், பவுன்சர்களை துல்லியமாக வீசுவது அவசியம், அந்த ஒரு பகுதியைக் குறிவைத்து பயிற்சி செய்து வருகிறோம். யார்க்கர்களை நன்றாக வீசி வருகின்றனர். ஆட்டத்தில் அது சரியாக அமைந்தால், நமக்கு அது திருப்திகரமாக அமையும்.” இவ்வாறு கூறினார் கேப்டன்டோனி'.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து