முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. ஓபன்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது.
5ம் நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் 2ம் நிலை வீரரும், 17 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றவருமான ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அவர் இத்தாலி வீரர் செப்பியிடம் 4-6, 6-7, 6-4, 6-7 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இதில் 2வது மற்றும் 4வது செட் மிகவும் பரபரப்பாக இருந்தது. இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே 6-1,6-1,7-5 என்ற நேர்செட் கணக்கில் போர்ச்சுக்கல் வீரர் கசாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 7ம் நிலை வீரரான செக் குடியரசை சேர்ந்த தாமஸ் பெர்டிச் 6-4,6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் டிரோகிச்சை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதே போல் கனடா வீரர் ரோனிக், பல்கேரியா வீரர் டிம்ரிட்ரோவ் ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7ம் வீராங்கனை கனடாவை சேர்ந்த பவுச்சர்ட், பிரான்ஸ் வீராங்கனை கார்சியா மோதினார்கள். இதில் பவுச்சர்ட் 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் 10ம் நிலைவீரரான மகரோவா 6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் பெங்கோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.

சீனாவை சேர்ந்த பெங் 7-6,6-3 என்ற செட் கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை செவடோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்குள் நுழைந்தார். இத்தாலியை  சேர்ந்த 14ம் நிலை வீராங்கனை சாரா இரானி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 3வது சுற்றில் அவர் பெல்ஜியம் வீராங்கனை விக்மேயரிடம் 6-4,4-6,3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதே போல்  ஆஸ்திரேலியாவை சேர்ந்த சமந்தா 4-6,4-6 என்ற நேர் செட் கணக்கில் வான்டேவியேக்விடம் தோற்று 3வது சுற்றுடன் நடையை கட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து