முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் தாக்குதல் பத்திரிகையாளர் உட்பட 7 பேர் பலி

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

பாகுபா - ஈராக்கில் பாக்தாத் நகருக்கு வடக்கே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி  தாக்குதலில் பத்திரிகையாளர் ஒருவர் உட்பட 7 பேர் பலியானார்கள். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே தியாலா பிராந்தியத்தில் அல்காதிர் சாட்டிலைட் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி  தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுமக்களும் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களும் சிதறி  ஓடினார்கள்.தாக்குதல் குறித்து தகவல் அறிந்த ஈராக் ராணுவத்தினரும் குர்தீஷ் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் பத்திரிகையாளர் ஒருவர் உட்பட 7 பேர் பலியானார்கள். ஈராக்கிய தொலைக்காட்சி  நிறுவன மேலாளர் கரீம் பாதல், முஸ்தபா ஹமீது மற்றும் குவாசி சாகிப் உட்பட 24 பேர் படுகாயம்  அடைந்தனர். ராணுவ தாக்குதலில் 5 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.உலகளவில்  ஈராக் நாட்டில் மட்டுமே பத்திரிகையாளர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு பலியாகி வருகின்றனர்.

ஈராக்கின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பல்வேறு நாடுகளை  சேர்ந்த பத்திரிகையாளர்களை பணயக் கைதிகளாக சிறைபிடிக்கின்றனர்.தாங்கள் கைப்பற்றிய  பாலைவன பகுதிகளில் அவர்களை மறைத்து வைக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து