முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் போடோ தீவிரவாதி கைது

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூர் - பெங்களூர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த போடோ தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.
அஸ்ஸாம் மாநிலம், கிராங் மாவட்டம், துக்கூர்ஜார் பகுதியைச் சேர்ந்தவர் பீர்காங் நர்ஜாரி. கொலை, கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள இவரை அஸ்ஸாம் போலீசார் தேடி வருகின்றனர். 

இந்தநிலையில் பெங்களூர் காட்டன் பேட்டை காவல் சரகத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், அந்தப் பகுதியில் சுற்றுத் திரிந்த பீர்காங் நர்ஜாரியைப் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் அசாம், மாநிலத்தில் உள்ள போடோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இவர், அசாமிலிருந்து கேரளத்துக்கு தப்பி வந்து, அங்கிருந்து பெங்களூருக்கு கடந்த 22-ம் தேதி வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவரை அசாம் போலீசாரிடம் விரைவில் ஒப்படைக்க உள்ளதாக பெங்களூர் மாநகரக் காவல் ஆணையர் ரெட்டி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து