முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் பிணை கைதியை மீட்க கெடு: வீடியோ வெளியீடு

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

பெய்ரூட் - சிரியாவில் ஜப்பானை சேர்ந்த பத்திரிகை போட்டோகிராபர் கெஞ்சிகோடோ மற்றும் தனியார் பாதுகாப்பு துறை நிறுவனர் ஹருணா யுகாவா ஆகியோரை ஐஎஸ் தீவிரவாதிகள் பிணை கைதிகளாக வைத்திருந்தனர். ரூ. 1225 கோடி பிணை தொகை கேட்டு 72 மணி நேர கெடு விதித்தனர். அந்த கெடு முடிந்ததை தொடர்ந்து ஹருணா யுகாவாவை தலை துண்டித்து கொலை செய்து வீடியோ வெளியிட்டனர்.

அதில் மற்றொரு பிணை கைதி கெஞ்சிகோடோவை விடுவிக்க ஜோர்டான் சிறையில் இருக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவரின் தங்கை சஜிதா அல் ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். கடந்த 2005ம் ஆண்டு ஜோர்டான் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் 60 பேர் பலியாகினர். இந்த வழக்கில் சஜிதா கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கெஞ்சிகோடோவை உயிருடன் விடுவிக்க ஜப்பான் அரசுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளனர். அத்துடன் ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் ஜோர்டான் விமானி அல் சுசீஸ்பெக்கையும் கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்த புதிய வீடியோவும், செய்தியும் அனுப்பி உள்ளனர். அதில் 24 மணி நேரத்திற்குள் சுஜிதா விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் 24 மணி நேர கெடு முடிந்தவுடன் ஜப்பான் பிணை கைதி கெஞ்சிகோடோ கொலை செய்யப்படுவார்.

ஆனால் ஜோர்டான் விமானி அதற்கு முன்பாகவே கொல்லப்படுவார் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோவை தொடர்ந்து பிணைக் கைதிகளை மீட்க ஜப்பான் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ள து. அதிகாரிகளின் அவசர கூட்டம் நடந்தது. ஜோர்டான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிணை கைதிகளை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுத்து  வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து