முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்ப தேரோட்டம்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று தெப்ப தேரோட்டம் நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தெப்பதிருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில், சுவாமி தங்க சப்பரத்திலும், இரவில் தங்கமயில், பூத, அன்ன, ஷேச, ரிஷப உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முக்கிய நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு அரசு மருத்துவமனை சாலையில் உள்ள தெப்பத்தில் தெப்பம் முட்டு தழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்ற 16 கால் மண்டபத்தில சிறிய தேரில் மூலவர் பக்தர்களுக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி மற்றும் இரவு 7 மணிக்கு தெப்ப தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி செல்லதுரை தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து