முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எஸ்.சிந்து ரத்னா கப்பல் விபத்து: 7 பேருக்கு தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - கடந்த 2014ம் ஆண்டு  இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.சிந்துரத்னா கப்பல் விபத்துக்குள்ளானது. அந்த விபத்துக்குக் காரணமான 7 கடற்படை அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
வழக்கமான பணியின் போது இந்தக் கப்பலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் 7 மாலுமிகள் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்போதைய கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் டி.கே.ஜோஷி, இந்த விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்த விபத்துக்கு அந்தக் கப்பலின் தளபதி உட்பட 7 அதிகாரிகள் ‘நிலையான இயக்க முறைமை'களைச் சரியாகப் பின்பற்றாததே காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்