எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்தவர் ஜெயலலிதா: கவர்னர் ரோசய்யா பாராட்டு
சென்னை - மக்களவை தேர்தல் மற்றும், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமிழக மக்கள் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அளித்திருக்கிறார்கள் என்று தமிழக கவர்னர் ரோசய்யா தனது உரையில் பாராட்டு தெரிவித்துள்ளார்..
தளராத முயற்சி, மனோதிடம், அயராத போராட்டங்களால் நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்தவர் ஜெயலலிதா என்று சட்டசபையில் கவர்னர் ரோசய்யா மனம் திறந்து பாராட்டினார்.
தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று சட்டசபையில் உரை நிகழ்த்திய போது கூறியதாவது:-
பதினான்காவது சட்டமன்றப் பேரவையில் தொடர்ந்து நான்காவது முறையாக தொடக்க உரையாற்றும் அரிய வாய்ப்பு பெற்றதை, நான் பெரும்பேறாகக் கருதுகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியும், வளமும் 2015-ம் ஆண்டிலும் தொடர்ந்து பெருக வேண்டும் என விரும்புகிறேன்.
முழுமையான வளர்ச்சியை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த அரசின் மீது, தாம் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த அரசு தொடர்ந்து நிறைவு செய்யும் என நான் நம்புகிறேன்.மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு நதிநீர்ப் பிரச்சினைகளில் நமது மாநிலத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாப்பதில், தளரா முயற்சிகளையும் அயரா போராட்டங்களையும் மேற்கொண்ட ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
அவரது தொடர் முயற்சி மற்றும் மனோதிடத்தால் மட்டுமே, முல்லைப் பெரியாறு அணை, நீரியல் அடிப்படையிலும், கட்டுமான அடிப்படையிலும், நிலநடுக்க சாத்தியக்கூறு அடிப்படையிலும், பாதுகாப்பாக உள்ளது என உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை நமது மாநிலம் பெற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்த முடிந்தது. சட்டப்பூர்வமான அனுமதிக்கப்பட்ட அளவாகிய 142 அடி உயரத்திற்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து, தென்மாவட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை அமைப்பதற்கான சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்கு தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து தனது கடும் எதிர்ப்பை இந்த அரசு மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இதுபோன்றே, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மீறி பாம்பாறு உப வடிநிலப் பகுதியில் புதிய நீர்தேக்கத் திட்டங்களைச் செயல்படுத்த உத்தேசித்துள்ள கேரள அரசின் நடவடிக்கை குறித்த தமிழகத்தின் நியாயமான கவலைகளும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய எந்த ஒரு புதிய திட்டமும் காவேரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலையும், பாசன உரிமை பெற்ற அனைத்து மாநிலங்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். மேகதாதுவில் புதிய அணை
குடிநீர்த் தேவை என்ற போர்வையில் தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி மேகதாது என்ற இடத்திற்கு அருகில் காவேரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓர் இடைக்கால மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. மேலும், ஒரு நிரந்தரக் கண்காணிப்பு அமைப்பாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரையில் காவேரி ஆற்றின் குறுக்கே இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதியை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கக்கூடாது என மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தியுள்ளது.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை செவ்வனே செயல்படுத்திட காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் இந்தியாவின் இறையாண்மைக்கே ஊறு விளைவிப்பதாக உள்ளன. தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமைந்து தேசிய ஒருமைப்பாட்டையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என இந்த அரசு உறுதியாக நம்புகிறது. இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
175 சட்டமன்ற மற்றும் 25 பார்லி. தொகுதிகளுக்கு ஆந்திராவில் இன்று ஒரே கட்ட தேர்தல்
12 May 2024திருப்பதி : ஆந்திராவில் மொத்தம் 25 பாராளுமன்ற தொகுதிகளும், 175 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற