முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிபோதையில் கார் ஓட்டிய தெலுங்குப்பட இயக்குனரின் கார் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

ஐதராபாத் - குடிபோதையில் கார் ஓட்டியதாக தெலுங்கு திரைப்பட இயக்குனர் அம்மா ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து ஐதராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தெலுங்கில் கதர்நாக், டக்கரி, ரணம், சீனுகாடு, மொனார்க், முத்ரா மற்றும் மலையாளத்தில் ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை அம்மா ராஜசேகர் இயக்கியுள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி களிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிகாலை  ஐதராபாத் மாதாபூரில் இருந்து பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஜூப்ளி ஹில்ஸ் தணிக்கை சாவடி அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் அம்மா ராஜசேகரையும் சோதித்தபோது, அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், காரை பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து