முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் தேர்தல்: பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்க பாஜ திட்டம்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பீகாரில் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க பாரதீய ஜனதா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பாட்னாவில் தொடங்கி வைக்கவுள்ளனர். மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றியை பெற்ற பாரதீய ஜனதா டெல்லி சட்டசபை தேர்தலிலும் அமோக வெற்றி கிட்டும் என எதிர்பார்த்தது.

ஆனால் தோல்வியை தழுவ நேரிட்டது. இதனால் பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது.மேலும் பீகாரில் ஏப்ரல் 14ல் பாட்னாவில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து