முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் சிறீசேனா சகோதரர் பிரியந்த படுகொலை

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் சகோதர் பிரியந்த சிறீசேனா படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இலங்கை அதிபர் சிறீசேனாவின் சகோதரர் பிரியந்த சிறீசேனா. இலங்கையின் பொலன்னறுவ பகுதியில் நண்பர் ஒருவரால் கோடாலியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த அவர் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இலங்கைக்கு இன்று திரும்ப உள்ளார். இதனால் நாளை  பொலன்னறுவவில் பிரியந்த சிறிசேனவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரியந்த சிறீசேனாவை தாக்கிவிட்டு சரணடைந்த நபரை வரும் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து