முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி பெண் ஊழியர் இந்திய அழகியாக தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - டெல்லி பெண் ஊழியர் அதிதி ஆர்யா இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
2013ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நாடு முழுவதும் 13 நகரங்களில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளில் இருந்து 21 பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மும்பை யஷ்ராஜ் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் பல்வேறு பிரிவுகளில் இறுதி போட்டிகள் நடந்தது. இதில் 5 பேர் டாப் 5 அழகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 5 பேரும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நடுவர்கள் வாக்களித்து முதல் 3 இடங்களை பெற்ற அழகிகளை தேர்வு செய்தனர். முடிவில் டெல்லி பெண் அதிதி ஆர்யா முதலிடத்தை பிடித்து இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார். ஆப்ரிக் ரச்சேல் வாஸ், வாடிகா சிங் ஆகியோர் 2வது, 3வது இடத்தை பிடித்தனர். நடுவர்களாக நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அனில்கபூர், நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, சோனாலி பிந்த்ரே, அபுஜானி, சந்தீப் கோஸ்லா ஆகியோர் இருந்து முதல் 3 இடம் பிடித்த அழகிகளை தேர்வு செய்தனர்.

நடிகை ஜாக்குலியின் பெர்னான்டஸ், நடிகர் ஷாகித் கபூர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அழகி பட்டம் வென்ற அதிதி ஆர்யா உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார். அதிதி ஆர்யா டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சி பகுப்பாளராக பணிபுரிகிறார். இங்கு பணியில் இருந்து கொண்டே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து