முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை அருகே பஸ்-வேன் மோதல்: 4 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

தஞ்சை - நாமக்கல்லை சேர்ந்த 7 பேர் ஒரு ஆம்னி வேனில் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இந்த வேன் நேற்று காலை 9 மணியளவில் தஞ்சை அருகே உள்ள அய்யம்பேட்டை மாத்தூர் பிரிவு ரோட்டில் வந்தது. அப்போது கும்பகோணத்தில் இருந்து தஞ்சைக்கு தனியார் பஸ் வந்தது.

திடீரென பஸ்சும், வேனும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதி கொண்டது. வேனில் பயணம் செய்த காமாட்சி, ராதா, நாகராஜன் மற்றும் வேன் டிரைவர் சதீஷ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். யாழினி, ராம்குமார், பழனி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

அய்யம்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கி இடிபாடுகளுக்குள் கிடந்த 4 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை பார்த்ததும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து