முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடியான மதன் மோகன் மாளவியாவுக்கான பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவரது குடும்பத்தினரிடம் நேற்று வழங்கினார். மேலும்3 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும் வழங்கப்பட்டன.
மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. எல்.கே. அத்வானி, பிரகாஷ்சிங் பாதல், ஜகத்குரு ஸ்வாமி ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

பாரத ரத்னா சுதந்திர போராட்ட வீரரும் இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடியான மதன்மோகன் மாளவியாவுக்கான பாரத ரத்னா விருதை அவரது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் பத்ம விபூஷண் விருதைப் பெறவில்லை. பத்ம விருது பெறாதவர்களுக்கு மற்றொரு நாளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து