முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாட் இட ஒதுக்கீடு ரத்து: விரைவில் மத்திய அரசு மறு ஆய்வு மனு

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஜாட் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

ஜாட் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய உள்துறை, பணியாளர், சட்டம் மற்றும் நீதித் துரை அமைச்சகங்கள் ஆலோசித்து வருகின்றன. இப்பிரச்னை குறித்து, ஜாட் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வாரம் சந்தித்து முறையிட்டனர். இதன் தொடர்ச்சியாக, ஜாட் இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, இப்பிரச்னை காரணமாக இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவுகளை வெளியிடாமல் மத்திய பணியாளர்கள் தேர்வனு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. இத்தேர்வை எழுதிய ஜாட் சமுதாய மாணவர்களின் நிலை குறித்து விளக்குமாறு, மத்திய அரசிடம் யூபிஎஸ்சி கேட்டுள்ளது. மத்திய அரசின் பதில் கிடைத்த பிறகே, இத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ், ஜாட் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட்டு கடந்த 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து