முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதி மீறல்: டோனிக்கு அபராதம் விதிக்க போலீஸ் முடிவு

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, மோட்டார் பைக் பிரியர். விதவிதமான மோட்டார் சைக்கிளில் சவாரி செய்வது அவருக்கு பிடித்த ஒன்றாகும். டோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஹெல்மெட்டுடன் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தார். அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருந்தது தெரியவந்தது. அவரது பைக்கில் நம்பர் பிளேட் முன்பக்கமாக இல்லை.

முன்பக்கம் சக்கரத்தின் பக்கவாட்டில் நம்பர் பிளேட்டுடன் அவர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தார். டோனியின் இந்த செயல் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றமாகும். இதற்காக அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்க ராஞ்சி போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கூறும்போது, இது ஒரு பெரிய விஷயம் இல்லை. கிரிமினல் குற்றம் கிடையாது. சரியான நேரத்தில் டோனிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து