முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாபியா கும்பல் தலைவன் ஜான் உஸ்மான்கான் கைது

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புதுதில்லி,ஏப்20

மாபியா கும்பல் தலைவன் அபு சலீமின் கூட்டாளி ஜான் உஸ்மான் கான் காஷ்மீர் கேட் பகுதியில் கைது செய்யப்பட்டார்.கைதான அவர் மீது கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுதல்,மிரட்டி பணம் பறித்தல்,டெல்லி,மும்பை பகுதிகளில் கொலை செய்து இருத்தல் போன்ற வழக்குகள் உள்ளன.

அவரது கைது  குறித்து டெல்லி போலீஸ் இணை ஆணையர்(குற்றப்பிரிவு) ரவீந்திரயாதவ் நேற்று கூறியதாவது,
மாபியா கும்பல் தலைவன் அபு சலீமின் கூட்டாளி ஜான் உஸ்மான்கான் அவர் டெல்லிசராய் ரொகில்லா பகுதியைச்சேர்ந்தவர்.

பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள அந்த நபரை சனிக்கிழமையன்று இரவு 7.30மணிக்கு கைது செய்தோம்.இந்த நபர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுதல்,பிரபல நபர்களை மிரட்டி பணம் பறித்தல்,மும்பை மற்றும் டெல்லியில் பிரபல நபர்களை கொலை செய்தல் போன்ற வழக்குகள் உள்ளன,அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து