முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் உடனான தோல்வி நிறைய பந்துகளை வீணடித்து விட்டேன்: கேப்டன் டோனி வருத்தம்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015
Image Unavailable

அகமதாபாத்  -  ராஜஸ்தான் ராயல்சுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் தோல்வியை கண்டது. இதற்கு கேப்டன் டோனி தனது பேட்டிங் பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார்.

 
65/4
என்று 10-வது ஓவரில் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிராவோ (62) டோனி (31) ஆகியோர்தான் மீட்டு ஓரளவுக்கு கவுரவமான ரன் எண்ணிக்கையை எட்ட உதவினர். சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 157/2 என்று ஊதித் தள்ளியது. டோனி 37 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
தனது இன்னிங்ஸ் பற்றி அவர் கூறும் போது, "நான் பேட்டிங்கில் நிறைய பந்துகளை சாப்பிட்டு விட்டேன்.

 அது ஒரு நல்ல பிட்ச். விளக்கு வெளிச்சத்தில் இன்னும் நல்ல பிட்சாக மாறியது. பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்று நினைத்தோமோ அப்படியேதான் நடந்த கொண்டது. கடும் உஷ்ணம் ஒரு காரணியே. டிவைன் பிராவோ, என் அழுத்தத்தை குறைத்தார். அவர் இவ்வாறு விளையாடுவார் என்றால் நான் பேட்டிங் ஆர்டரில் வேறு நிலையில் கூட களமிறங்கலாம்.

ஜடேஜா, அஸ்வின் பின்னால் இருக்கும் போது பேட்டிங்கிற்கு இது இன்னும் வலு சேர்க்கும் என்றே நான் கருதுகிறேன்" என்றார் 37 பந்துகளைச் சந்தித்த தோனி அதில் 17 பந்துகளில் ரன் எதையும் எடுக்க முடியாமல் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து