முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆழ்வார்பேட்டையில் வாசனுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

புதன்கிழமை, 6 மே 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் ஜி.கே.வாசனை, புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பு குறித்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழகத்தின் ஒட்டு மொத்த நலன் காக்க தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார்.

இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை. .. சமீப காலமாக தமிழக மக்களுக்கு அண்டை மாநிலம் மற்றும் அருகில் உள்ள நாடால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.இதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறும்போது, "தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்தேன்.

அதே போல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை இன்று சந்தித்து உள்ளேன். இந்த சந்திப்பு அரசியல் நோக்கத்திற்கான சந்திப்பு அல்ல.  தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். தமிழகத்தின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து