முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவியேற்க மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற முதல்வர் ஜெயலலிதா

சனிக்கிழமை, 23 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா, 5-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பதற்காக,  போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து காலையில் புறப்பட்டார். தமது இல்லத்தின் அருகே உள்ள ஜெய மஹா கணபதி கோயிலில் வழிபட்டார். அப்போது அதிமுக மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து அவரை அன்போடு வரவேற்றனர்.  போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கொடிகளை ஏந்தி உற்சாகப் பெருக்கோடும், "அம்மா  வாழ்க அம்மா வாழ்க என்ற எழுச்சி முழக்கங்களோடும், கழகத்தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியோடு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை வந்தடைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவின் வாகனம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது. பின்னர், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வழியாக காந்தி சிலை, விவேகானந்தர் மண்டபம் என கடற்கரை சாலையின் இருமருங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடற்கரை சாலையில், உழைப்பாளர் சிலை அருகிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பி வாழ்த்துக் கோஷமிட்டனர்.  வழியெங்கும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான .அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் தாரை தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை மக்கள் கடலில் நீந்திச் சென்ற  ஜெயலலிதா, 5-வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சாலையின் இரு மருங்கிலும் திரண்ட மக்கள் வெள்ளம், உற்சாக அலைகளை வாழ்த்து முழக்கங்களாக எழுப்பி, ஜெயலலிதாவை வரவேற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து