முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இந்திய எல்லையில் காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயலும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இதை இந்திய ராணுவம் தடுத்து அவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். காஷ்மீர் மாநிலம் தாண்ட்தார் பகுதி எல்லைகோடு அருகே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே லஷ்கர தீவிரவாதிகள் ஊடுருவ இருப்பதாக உளவுததுறை எச்சரித்துள்ளது. பூஞ்ச், கரென், நவ்கம், ஹரி உள்ளிட்ட மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவ லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 12 குழுக்கள் தயாராக இருப்பதாக உளவுத்துறை அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.  இதை தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் ராணுவம், எல்லை பாதுகாப்பு படையும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து