முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டு பதிவு 2 மணி நேரம் குறைப்பு

வியாழக்கிழமை, 28 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 27–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.வாக்குச்சாவடி அலுவலர்களை நியமிக்கும் பணி உள்ளிட்ட ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்தது.

ஆனால் இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இது பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் கேட்டதற்கு, ஓட்டுப்பதிவு நேரத்தை அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கமிஷன் நிர்ணயிக்கும் இந்த தேர்தலுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நேரத்தை நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்தார்.டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவதால் அதில் பங்கேற்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா டெல்லி சென்றுள்ளார்.வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்களை இணைப்பது குறித்தும், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வரவழைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து