முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டார்ஜிலிங் நிலச்சரிவு: பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

சிலிகுரி: மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேற்குவங்கம், டார்ஜிலிங்கில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பலியானார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவர் நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு ரூ.1.25 லட்சமும் நிவாரண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அப்பொழுது மக்களிடம் உறுதியளித்த மம்தா, மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து