முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி பேஸ்புக் கணக்கு : சரத்குமார் போலீசில் புகார்

புதன்கிழமை, 8 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

சென்னை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் கையெழுத்திட்ட புகார் மனுவை அவரது செயலாளர் சேதுராமன் நேற்று மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமாரிடம் கொடுத்தார்.

அதில் கூறி இருப்பதாவது:– 

எனது பெயரில் எனது பல புகைப்படங்களுடன் போலியான சமூக வலைத்தளங்கள் (பேஸ்புக்) செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அதில் விரும்பத்தகாத புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இது எனது புகழுக்கும், கவுரவத்துக்கும் களங்கம் விளைவிக்கின்றன. எனவே, போலியான இந்த சமூக வலைத்தளங்களை முடக்கவும், அதை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து