முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை ஆற்றில் கல்பாலம் அருகில் திருமஞ்சன தீர்த்தக்கிணறு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை வைகை ஆற்றில் கல்பாலம் அருகில் திருமஞ்சன தீர்த்தக்கிணறு ஒன்று மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்துதான் தினமும் காலை 6மணிக்கு 2பட்டர்கள் தலையில் குடத்தை சுமந்த படி வந்து புனித நீரை குடத்தில் நிரப்பிகொண்டு பின்னர் நாதஸ்வர மேள தாளத்துடன் யானையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச்சென்று புனித நீரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் அபிஷேகம் செய்து பூஜைகள் நடத்துவது வழக்கம்.

இந்த தெய்வீக காட்சியை தினமும் காலை சுமார்6மணி முதல்6.20மணிக்குள் நடைபெறுவதை வைகை ஆற்றில் கண்குளிர காணலாம். பக்த கோடிகள் இதுபோன்ற தெய்வீக காட்சியை தினமும் பார்வையிட்டு பின்னர் பட்டர்களுடன் ஊர்வலமாககோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேக ,பூஜைகளில் கலந்து கொண்டு அம்மனின் அருளைப்பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து