முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்குமார் பிறந்த நாள்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

சென்னை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று தனது பிறந்த நாளை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

அவருக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார்.

அதில் "61–வது பிறந்த நாளை கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கலை ஆர்வம் மிக்கவராய் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து வருவதோடு மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறந்த பணியாற்றி வரும் தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி அனைத்து வளமும், நலமும் பெற்று நீடுழிவாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.மதுரை ஆதீனம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, சார்லி, நடிகைகள் நளினி, குயிலி, சமத்துவ மக்கள் கட்சி துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் சுந்தரேசன், தலைமை நிலைய செயலாளர் ஐஸ்அவுஸ் தியாகு ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள்.மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலன், மண்டல செயலாளர் சேவியர், மாவட்ட செயலாளர்கள் சி.ராஜா, பிரசாத், உதயகுமார், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பி.ஆர்.ஆர்.சுந்தர், வேளச்சேரி பகுதி துணை செயலாளர் ஆனந்த விநாயகம், மாநில வர்த்தகர் அணி செயலாளர் நாதன், துணை செயலாளர் பாபு, சென்னை கிழக்கு இளைஞர் அணி செயலாளர் பால்.மாரிமுத்து, துணை செயலாளர் ஜோ.மாரிசெல்வம், வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் மதன், மேற்கு பகுதி துணை செயலாளர் ஏரல் முகேஷ் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினார்கள்.பிறந்த நாளையொட்டி சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, 'சாதி சமயமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே என் பிறந்த நாள் செய்தியாகும். அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து