முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெருநாய்களை கொல்ல வேண்டும்: நடிகர் மோகன்லால் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 23 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு பகல் எந்த நேரமும் தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிவதால் பலர் நாய்களிடம் சிக்கி கடிவாங்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக சிறுவர் - சிறுமிகளை தெருநாய்கள் பதம் பார்க்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. தெரு நாய்கலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தது. இந்த நிலையில் தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்று பிரபல மலையாள நடிகர் மோகன்லால் குரல் எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது வலைத்தளத்தில் எழுதி இருப்பதாவது:கேரளாவில் தெரு நாய்கள் மக்களை பயமுறுத்தி வருகிறது. பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. எனக்கு நாய்களிடம் பிரியம் உண்டு. நான் 4 நாய்கள் வளர்த்து வருகிறேன். அதே சமயம் தெருநாய்களை கொல்ல வேண்டும் என்பது நியாயமானதே. நாய்களை கொல்ல வேண்டுமா? என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கவிரும்புகிறேன். தங்கம் காய்க்கும் மரம் என்றாலும் வீட்டுக்கு ஆபத்து என்றால் அதை வெட்ட வேண்டும் என்பது பழமொழி. எனவே அதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து